cinema

img

இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம்

சென்னை, ஜன.18-
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கி உள்ளது.
விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் இன்று நேற்று நாளை திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். 
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. 
இப்படத்திற்கு இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கதை எழுதி உள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கி உள்ளது.

;