ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘ஜிகர்தண்டா 2’. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள் ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயா ரித்துள்ள இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியீடு காண் கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு கூறினார்: ‘ஜிகர்தண்டா’ வில் வரும் சேது கேரக்டருக்கு முதலில் ராகவா லாரன்ஸிடம்தான் கேட்டேன். அப்போது அவர் நடிக்க முடியா மல் போய்விட்டது. படம் வெளியான பிறகு நாம சேர்ந்து படம் பண்ண லாம் என்றார் அவர். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவருக்கு அது பிடித்தி ருந்தது. ஆனால், ஸ்கிரிப்டாக அது எனக்குத் திருப்தியாக வரவில்லை. பிறகு இந்தக் கதை சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு இப்போது உருவாகி இருக்கிறது. ‘ஜிகர்தண்டா’வுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை. இந்தப் படம் 1975-ல் நடக்கும் கதையைக் கொண்டது. இதில் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குநராகவும் நடித்தி ருக்கிறார்கள். இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். எஸ்.ஜே. சூர்யாவுக்குத் தனி ஸ்டைல் இருக்கி றது. நவீன் சந்திரா, சஞ்சனா, ஷைன் டாம் சாக்கோ, சத்யன், இளவரசு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை மலைக் கிராமம் ஒன்றில் படமாக்கினோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 65 பேரைத் தேர்வு செய்து, சூரி என்பவர் மூலம் 2 மாதம் பயிற்சி அளித்தோம். அவர் கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறி னார்.