business

img

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தது. 7-ஆவது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதன் மூலம் 47.68 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022, ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;