சாம்சங் தொழிற்சாலையில் 38 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்து 45 நாட்கள் கடந்துவிட்டன. வெளித்தோற்றத்தில் அமைதி நிலவினாலும், ஆலைக்குள் பதற்றமான சூழல் தொடர்கிறது. அரசு, நிர்வாகம், தொழிற்சங்கம் ஆகியோர் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தையின் உடன்பாட்டின் அடிப்படையில், 2024 அக்டோபர் 17 அன்று அனைத்து தொழிலாளர்களும் வேலைக்குத் திரும்பினர்.
நிர்வாகத்தின் புதிய நிலைப்பாடு
தொழிலாளர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நிர்வாகம், மதிய உணவு வழங்கிய பின்னர் அதிர்ச்சியளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்றும், நிர்வாகம் அழைக்கும் தொழிலாளர்கள் மட்டுமே வரவேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், குழு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்த பின்னரே அவர்களை உற்பத்தி வேலையில் ஈடுபடுத்துவ தாகவும் அறிவித்தனர்.
தற்போதைய நிலை
இதுவரை 1,400 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் சுமார் 150 பேர் பணியில் சேர வேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் இரண்டு முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
நிர்வாகத்தின் உடன்பாடு மீறல்கள்
நிர்வாகம் பல வழிகளில் முத்தரப்பு உடன்பாட்டை மீறி வருகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை வழங்காமல், பகுதி பகுதியாக வழங்குகிறது. சங்க நிர்வாகிகள் 30 பேரை இன்னும் பணியில் அமர்த்த வில்லை. வேலைக்கு வந்த தொழிலாளர்களை அவர்களுக்கு தெரியாத புதிய உற்பத்திப் பிரிவு களுக்கு இடமாற்றம் செய்கின்றனர். பழிவாங்கல் இல்லை என்று உறுதியளித்த போதிலும், தொடர்ந்து அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத்தின் புதிய உத்திகள்
நிர்வாகம் புதிய உத்திகளைக் கையாள துவங்கி யுள்ளது. நிர்வாக ஆதரவு கமிட்டி என்ற அமைப்பை உருவாக்கி, நவம்பர் 5 அன்று அதற்கென தனி அலுவலகத்தையும் திறந்துள்ளனர். இந்த கமிட்டியில் சேரும் தொழிலாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவித்துள்ளனர். கையெழுத்து வாங்கிக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்குகின்றனர். தொழிலாளர்கள் மீது மன அழுத்தம் கொடுக்கும் வகையில், மூன்று மணி நேரம் வரை தனி அறையில் கவுன்சிலிங் நடத்துகின்றனர். இந்த மன உளைச்சலை தாங்க முடியாமல் பலர் நிர்வாக ஆதரவு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கையெழுத்திட மறுப்பவர்களின் குடும்பத்தினரிடம் அச்சுறுத்தும் விதமாக தகவல்களை தெரிவித்து, அவர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்.
சட்டரீதியான பிரச்சனைகள்
நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் 1947 தொழில் தகராறு சட்டம் அட்ட வணை 5-ன் கீழ் கடும் குற்றமாகக் கருதப்படு கின்றன. இவை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்ட னைக்குரிய செயல்களாகும். இந்த நடவடிக்கை களுக்கு எதிராக சிஐடியு தொழிற்சங்கம் தொழி லாளர் துறையில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அடிப்படைப் பிரச்சனை
சாம்சங் நிர்வாகம் சிஐடியு-வை கடுமையாக எதிர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்க பதிவு வழக்கு விசாரணையின் போது, சாம்சங் வழக்கறிஞர் தெளிவாக குறிப்பிட்டார் : “சிஐடியு கம்யூனிச அரசி யலை பின்புலமாகக் கொண்டுள்ள தொழிற் சங்கம். இந்த காரணத்துக்காகவே நாங்கள் அவர்களை ஏற்க இயலாது.” இது வெறும் தொழில் சார்ந்த பிரச்சனைஅல்ல, வர்க்க அரசியல் பிரச்சனை என்பது தெளிவாகிறது.
எதிர்கால நோக்கு
பல்வேறு அழுத்தங்கள் இருந்த போதிலும், தொழிலாளர்கள் சிஐடியு-வுடன் உறுதியாக நிற்கின்றனர். நிர்வாகம் இதனை வர்க்க அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகும் வரை, இந்த மோதல் தொடரும் என்பது தெளிவு. இரு தரப்பும் சமரசம் காண முன்வர வேண்டியது அவசியமாகிறது.
அரசின் நிலைப்பாடு
இப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலை யீடுகள் உறுதியானதாக இல்லை. தொழி லாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளன. குறிப்பாக, தொழிலாளர் துறை, சாம்சங் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுத்ததோடு, உயர் நீதிமன்றத்தில் இந்த மறுப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவும் தயங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, அரசின் இந்த நடவடிக்கை யை கண்டித்து, தொழிற்சங்கப் பதிவை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், அரசு மௌனம் காத்து வருகிறது. தற்போது இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக 2 வார அவகாசம் கேட்டு, மொத்தம் 6 வார கால அவ காசம் தரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆலைக்குள் சாம்சங் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உள்ளிட்ட அரசு மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவும், சட்டப்பூர்வ மாகவும் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவற்றை அரசு பொருட்படுத்தவில்லை. இந்த அணுகுமுறை தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
உடன்பாடும் முரண்பாடும்
சாம்சங் தொழிற்சாலையில் நடந்த போராட்டம் வெறும் சம்பள உயர்வுக்கோ அல்லது சங்க அங்கீகாரத்திற்கோ மட்டும் நடத்தப்பட்ட தல்ல. இது தொழிலாளர் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம். இரு வர்க்கங் களும் எதிரெதிராக நின்றாலும், அவ்வப்போது உடன் பாடுகளும் ஏற்பட்டு, இந்த மோதல் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இ.முத்துக்குமார்
தலைவர், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)