articles

img

தடை விதிப்போரின் தாடைகளை உடைத்து புறப்படு பெண்ணே!

தடை விதிப்போரின் தாடைகளை 
உடைத்து புறப்படு பெண்ணே!

“பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூகமாற்றங்கள் சாத்தியமில்லை என்பது வரலாற்றை அறிந்த எவருக் கும் தெரியும்...” - மாமேதை காரல்மார்க்ஸ் 1893ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அமெரிக்காவிலும் ஐரோப் பிய நாடுகளிலும் பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப்போருக்குப் பிறகுதான் பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங் கப்பட்டது. இந்த சமூகத்தில் பெண் என்பவள் மகளாக, மனைவி யாக, தாயாக என்று பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழிநிலைமை மாற வேண்டும் என்றார் உலகப் பெண்ணுரிமை இயக்கத்தின் முன்னோடி கிளாரா ஜெட்கின். ஆண்களுக்கு நிகராக வேலைசெய்து கூலிபெறும் திறமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவரது நோக் கங்களில் ஒன்று. தற்கால பெண்களின் சவால்கள் காலம் காலமாக வீட்டு வேலை, குடும்ப பராமரிப்பு, தொழிற் சாலைகள், ஊரகப் பணிகள் என பல்வேறு துறைகளில் தனியார்மய, தாராளமய கொள்கையின் காரணமாக பெண் கள் மூலதன சுரண்டலுக்கும் உழைப்பு சுரண்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். உடல், மன, பொருளாதார, கலாச்சார, பாலின ரீதியாக பல்வேறு வன்முறைகளை - சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்தித்து வருகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிக ரிக்கிறது. மோடி அரசின் 3வது ஆட்சிக் காலத்தில் 15 லட்சத் திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகள் கிடைப்பதில்லை. பெருகி வரும் வன்முறைகள் இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ் வொரு 7 நிமிடத்திற்கும் பெண் வன்முறை தாக்குதலுக்கு உள் ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 43 நிமிடத்திற்கு வரதட்சணை மரணம் நிகழ்கிறது. பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் சுமார் 93,000 விசாரணையில்லாமல் நிலுவையில் உள்ளன. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. தில்லியில் நிர்பயா, காஷ்மீர் சிறுமி ஆசிபா, மணிப்பூரில் இளம்பெண்கள் சித்ர வதை, மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்முறை என அடுக்கடுக்காக சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தமிழகத்திலும் கள்ளக்குறிச்சி, சென்னை பல்கலைக் கழக மாணவி, நெல்லை வீரமாணிக்கபுரம், சிவகங்கை கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம் போன்ற இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததைப் பார்த்தோம். சமத்துவத்திற்கான போராட்டங்கள் இத்தகைய வன்முறைகளை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இப்படிப்பட்ட வீரம் செறிந்த போராட்டங்களுக்கு விதை போட்டது அக்டோபர் புரட்சி. அரசியல் பின்புலம் அற்ற பெண்கள் கூட “இது நம்மு டைய தினம், உழைக்கும் பெண்களின் திருவிழா” என்று உணர்ந்தனர். அக்டோபர் புரட்சி பெண்களுக்கு சமத்துவத்தையும் ஆண்களோடு சமமான குடியுரிமைகளையும் வழங்கியது. முதலாளித்துவ நாடுகளில் இன்னும் பெண்கள் உழைப்பு சுரண்டப்படுபவர்களாக இருக்கிறார்கள். அறைகூவல் இத்தகைய நிலையில், இந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தின் உறுதியேற்பாக- G உலகை சுரண்டிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒருங் கிணைந்த பாட்டாளி வர்க்க முன்னணியை கட்டுவோம். Gஉழைக்கும் ஆண்கள், பெண்களுக்கிடையே உள்ள வேற்று மைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் களைந்தெறிவோம். G பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை சமரசமின்றி நடத்துவோம். G வன்முறையாளர்களின் பிடியிலிருந்து பெண்களை பாதுகாக்க, பெண் தொழிலாளர்களை பாதுகாக்க, தடை யாக நிற்போரின் தாடைகளை உடைத்து வீரம் தீரம் உள்ள புரட்சிப் பெண்களாக புறப்படுவோம்.