articles

img

இன்று (நவ.26) இந்திய அரசியலமைப்பு தினம்

‘‘1950 ஜனவரி 26-ல் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம், சமூக பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளைப் பெற்றிருப்போம். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்றிருக்கும். நமது சமூக-பொருளாதார வாழ்விலோ நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப்போகிறோம்?’’