1990 முதல் ஒன்றிய அரசு நவீன தாராள மயக் கொள்கைகளை அமலாக்கி வருகிறது. இக்கொள்கைகள் உலக அளவிலும், இந்திய அளவிலும் தோல்வி கண்டுள்ளன. உலகமே மாற்று குறித்து ஆலோசித்து வருகிறது. 2014 இல் நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. பாசிசத் தன்மை கொண்டு மதவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் மோடி அரசு எதேச்சதிகாரம் ஆக செயல்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கி லும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகவும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவதாகவும் மணலை கயிறாக திரித்தார்கள். பின்னர் அவை தேர்தல் கால வாக்குறுதிகள், வெற்று வாக்குறுதிகள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சமாளித்தார்.
வேட்டு வைத்த மோடி அரசு
நாட்டிலுள்ள தொழிலாளர்களில் ஏழு சதவீத பேருக்கு மட்டுமே தொழிலாளர் சட்டங்கள் அமலா கின்றன. இதற்கும் மோடி அரசு வேட்டு வைக்கிறது. 44 அடிப்படை தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக ஒன்றிய அரசு சுருக்கி விட்டது. 93 சத விகிதம் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓரளவு பலனளிக்கும் சில சட்டங்கள் கூட சட்டத் தொகுப்பு களில் கரைந்து விட்டன. சம்பள சட்டத்தொகுப்பு 2019 ஆகஸ்டில் சட்டமாக் கப்பட்டது. குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 இத் தொகுப்பில் இணைக்கப்பட்டுவிட்டது. சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்பதை அரசு வரையறுத்துக் கொள்ளலாம் என சட்டத் தொகுப்பில் உள்ளது. 1957இல் நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாட்டில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்து விவாதிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தை கள் கொண்ட சராசரி இந்திய தொழிலாளி குடும்பத்தி ற்கு உணவு, உடை, இருப்பிடத் தேவைகள், எரிபொருள் தேவைகள் எவ்வளவு என்பதை மாநாடு வரை யறுத்தது. 1993இல் ராப்டகாஸ் அண்ட் பிரட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஏற்கனவே தீர்மா னித்த குறைந்தபட்ச ஊதியத்தில் 25 சதவிகிதம் கூடு தலாக கல்வி, திருவிழா, திருமணம் போன்றவைக ளுக்காக வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இன் றைய விலைவாசியில் மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் என வருகிறது.
முறைசாரா தொழிலாளரின் பரிதாப நிலை
இக்கோரிக்கைக்காக அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த நிர்ணயிப்புகளை அரசு புறந்தள்ளக் கூடாது என மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியதால் சம்பள சட்டத் தொகுப்பின் ஒன்றிய அரசு விதிகளில் இந்த நிர்ண யிப்புகள் சேர்க்கப்பட்டன. குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் கூட இல்லாத சூழ்நிலையில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்களின் நிலை பரிதாபகர மானது. தொழிலுறவு சட்டத் தொகுப்பு 2020இல் சட்ட மாக்கப்பட்டது. குறிப்பிட்ட கால வேலை, பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட் என்ற புதிய நிலைமை இத் தொகுப்பில் உள்ளது. இதனால் சிறு குறு நடுத்தர ஆலைகள் உள்பட பல தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்கள் இருக்கமாட்டார்கள். அனைவரும் ஓராண்டு, ஈராண்டுக்கான குறிப்பிட்ட கால பணி செய்யும் தொழிலாளர்களாக ஆனால் சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்பட பல அடிப்படை தொழிற்சங்க உரிமைகளை இழக்கும் நிலை ஏற்படும் .அதாவது முறைசார்ந்த தொழிலாளர் முறைசாரா தொழிலாளர்களாக மாற்றப் படுவர்.
உயிருக்கே உலை வைப்பு
மேலும் 300 தொழிலாளருக்கு உட்பட்டு தொழிலா ளர் உள்ள ஆலை நிர்வாகங்கள் அரசின் அனுமதி யின்றி தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்யலாம், லே ஆஃப் விடலாம், ஆலையை மூடலாம். அதேபோல் 300 தொழிலாளர் வரை இருந்தால் நிலையான விதி களும் தேவையில்லையாம்.தொழில் ரீதியிலான பாது காப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டத் தொ குப்பில் 13 சட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பேக்டரி சட்டம், காண்டாக்ட் லேபர் சட்டம், கட்டுமானத் தொழி லாளர் சட்டம், புலம்பெயர் தொழிலாளர் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர், தோட்டம், சுரங்கம், பீடி மற்றும் சுருட்டு, துறைமுகத் தொழிலா ளர், பத்திரிகையாளர், சினிமா தொழிலாளர், விற்பனை ஊக்குவிப்பு தொழிலாளர் சட்டங்கள் சட்டத் தொகுப்பில் இணைந்துள்ளன. ஒவ்வொரு தொழிலிலும் விபத்து ஏற்படும் தன்மை மாறுபடுகிறது. கட்டுமானம், மோட்டார் போக்குவரத்து போன்ற பல தொழில்களில் முறைசாரா தொழிலாளர் கள் அதிகம். தொழில் ரீதியிலான பாதுகாப்பை உறு திப்படுத்த சட்டத் தொகுப்பு தவறியுள்ளது. தொழிலா ளர்களின் உயிருக்கே உலை வைக்கப்பட்டுள்ளது. பல ஆலைகளில் காண்டிராக்ட் தொழிலாளர் எண் ணிக்கை அதிகம். பலருக்கு பி.எப், இஎஸ்ஐ சட்ட பலன் கள் கூட கிடைப்பதில்லை. 50 காண்டிராக்ட் தொழிலா ளர்களை பணியில் அமர்த்தி உள்ள காண்டிராக்டர்கள் லைசென்ஸ் பெற தேவையில்லையாம். இதனால் பினாமி காண்டிராக்டர்கள் எண்ணிக்கை அதிகமாகும். காண்டிராக்ட் தொழிலாளி மேலும் தீவிரமாக சுரண்டப் படும் நிலை ஏற்படும். நிரந்தர தன்மையுள்ள தொடர்ச்சி யான பணிகளில் கூட சட்டவிரோதமாக காண்டிராக்ட் தொழிலாளர்கள் பணிபுரியும் நிலை ஏற்படும்.
ஆலோசனைக் குழு கலைப்பு
1996-இல் ஒன்றிய அரசு நிறைவேற்றிய கட்டட கட்டுமானத் தொழிலாளர் சட்டம் ஏராளமான பணியிட பாதுகாப்பு குறித்த விதிகளை கொண்டது. ஆனால் இந்தச் சட்டத் தொகுப்பில் இவையெல்லாம் இல்லை.இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களின் பணிகளை ஆய்வு செய்து மேம்படுத்திட ஒன்றிய அரசின் ஆலோசனை குழு உதவி வந்தது. இக்குழுவில் சிடபுள்யுஎப்ஐ (CWFI) சார்பில் தோழர்கள் தீபன்சன் சக்கரவர்த்தி மற்றும் மாலதி சிட்டிபாபு உறுப்பினர்களாக இருந்தனர். தற்போ தைய சட்டத்தொகுப்பினால் இந்த ஆலோசனைக் குழு கலைக்கப்பட்டு விட்டது. ஒன்றிய அரசின் முத்தரப்பு காண்டிராக்ட் தொழிலாளர் ஆலோசனை வாரியமும் கலைக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளிகளாக தகுதி படைத்தவர்கள் என தீர்மானிக்கும் இந்த வாரியம் கலைக்கப்பட்டதால் தொழிலாளர்களின் எதிர்காலம் இருண்டு விட்டது. பேக்டரி ஆய்வாளருக்கு பதில் ஆய்வாளர் மற்றும் வசதி செய்து தருபவர் நியமிக்கப் படுவார்கள். இவர்கள் முதலாளிகளுக்கு தான் வசதி செய்து கொடுப்பார்கள்.
ரூ.40 ஆயிரம் கோடி கபளீகரமாகும் நிலை
சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020 செப்டம் பரில் சட்டமாக்கப்பட்டது. ஊழியர் நிவாரணச் சட்டம், இஎஸ்ஐ சட்டம் ,பிஎஃப் சட்டம், பிரசவ நிதி, கிராஜுவிட்டி, சினிமா தொழிலாளர் நல நிதி ,கட்டுமான தொழிலாளர் நல வரி சட்டம், முறைசாரா தொழிலாளர் சமூக பாது காப்பு சட்டம் 2008 ஆகிய சட்டங்கள் சட்டத் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளன. கட்டடம் கட்டுவோர் எஸ்டிமேட் தொகையில் ஒரு சதவிகிதம் சட்டப்படி நல வாரியத்திற்கு நல வரி செலுத்தவேண்டும். இச்சட்டம் சட்டத் தொகுப்பில் இணைக்கப்பட்டதால் 29 மாநில கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் உள்ள நல வரி இருப்பு ரூபாய் 40,000 கோடியை ஒன்றிய அரசு கபளீகரம் செய்து விடுமா என்ற பெரும் ஐயப்பாடு எழுந்துள்ளது. சினிமா தொழிலாளர் நல நிதி வசூ லிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான முற்போக்குக் கூட்டணி அரசு 2008 இல்அகில இந்திய முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி யது. இந்தச் சட்டத்தை அமலாக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத நிதி சமூக பாதுகாப்பிற்காக ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றன. அதாவது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
எடுபடாத அடல்பென்சன் திட்டம்
தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற மாதாமாதம் அரசுக்கு நிதி செலுத்த வேண்டும் என்ற அடல் பென்சன் யோஜனா போன்ற எடுபடாத திட்டங்களை மோடி அரசு முயற்சித்து வருகிறது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர் மட்டுமே இதில் சேரலாம். மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வயதிற்கு ஏற்றார் போல் அரசுக்கு நிதி பங்களிப்பை தொழிலாளி செலுத்த வேண்டும். இத்திட்டம் தற்போது பிரதான் மந்திரி சிரம் யோகி மந்தன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 முறைசாரா நல வாரியங்கள் செயல் படுகின்றன. தொழிலாளர்கள் பல நலத்திட்ட உதவி களை பெற்று வருகின்றனர். இவை மேலும் மேம்பட ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசோ மாநிலங்களின் உரிமைகளை பல வழிகளில் பறித்து வருகிறது. மாநிலத்திற்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி பாக்கிகளை கூட காலத்தில் கொடுப்ப தில்லை. சமஸ்கிருதம், புதிய கல்விக் கொள்கை, நீட்தேர்வு போன்றவைகளைத் திணிக்கிறது.
புரியாத புதிர்
இ-ஷ்ரம் என்ற புதிய இணையதளத்தை 2021 ஆகஸ்டில் துவங்கி நாடு முழுவதும் இதுவரை 10 கோடி முறைசாரா தொழிலாளர், புலம்பெயர்ந்த தொழிலா ளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். என்னென்ன சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல் செய்யப்படும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அனைத்தும் தனியார் மயம் என்ற திசைவழியில் மோடி அரசு வேகமாகப் பயணித்து வருவதால் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படுமானால் பாதுகாப்பு இருக்குமா என்பது உண்மையான கேள்வி .இப்பின்னணியில் அனைத்து முறைசாரா தொழிலாளர்க்கும் சமூக பாது காப்பு வழங்கு என்ற கோரிக்கை உள்பட தொழிலா ளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர், சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்காக மார்ச் 28, 29 இல் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் முறைசாரா தொழிலாளர்கள் பங்கேற்று தேசப் பாது காப்பு கடமையை நிறைவேற்ற வேண்டும்.
கட்டுரையாளர் : தலைவர்,
இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம்!