பொய்களின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...
மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் - சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியீடு
ஆள்தூக்கிச் சட்டங்கள்
l சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா). 2019இல் திருத்தம் செய்யப்பட்டது. 2015க்கும் 2019க்கும் இடையில், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் தொடர்ந்து வாடுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் உபா சட்டத்தின்கீழ் 814 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022இல் 1005ஆக அதிகரித்துள்ளது. 8947 பேர் கைது செய்யப்பட்டனர். 6503 பேர் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசுக்கு அதிருப்தி தெரிவித்தவர்களும் அடங்குவர். உபா விதிகளின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் இல்லை.
l இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தேசத்துரோக விதி அதீதமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2022 வரை 701 தேசத்துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. அரசை விமர்சித்தமைக்காக குடிமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் 96 சதவீத வழக்குகள் 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பதிவு செய்யப்பட்டவை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டத்தில் இந்த தேசத்துரோக விதி மேலும் கடுமையான தண்டனையுடன் புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மோடி சொன்னது
l “ஜனநாயகத்தின் அழகு பொதுமக்களின் பங்கேற்பில்உள்ளது” - 2024 மார்ச் 14 அன்று பொதுமக்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் நரேந்திர மோடி.
l “பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தல்கள், சுயேச்சையான நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் போன்ற கட்டமைப்பு அம்சங்களே ஜனநாயகத்தின் மிக முக்கியமான கருவிகள் ஆகும்” – 2021 டிசம்பரில் நடை
பெற்ற ஜனநாயக ரீதியாகச் செயல்படும் நாடுகளின் உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி.
உண்மை நடப்பு என்ன?
l மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வந்துள்ளது.
l இந்தியாவில் ஜனநாயகம் கடுமையாக அரிக்கப்பட்டு வருவதாக பல்வேறு சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
l பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தின் தரம் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது.
l முதலாவது மோடி ஆட்சியில் (2014 - 2019) மக்களவையில் சராசரி அமர்வு நாட்கள் 135 ஆக இருந்தது. கடந்த பிப்ரவரியில் முடிவடைந்த தற்போதைய 17வது மக்களவையில் சராசரி அமர்வு என்பது 55 நாட்கள் மட்டுமே!
l 2019 முதல் நாடாளுமன்றத்தின் சமீபத்திய பதவிக் காலம்வரை சட்ட மசோதாக்களில் 13 சதவீதம் மட்டுமேநாடாளுமன்றக் குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பப் பட்டன. 2009-2014 காலப்பகுதியில் செயல்பட்ட நாடாளுமன்றத்தில், அதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 71 சதவீத மசோதாக்கள் குழுக்களின் ஆய்விற்கு அனுப்பப்பட்டன.
l 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது, முன்னெப்போதும் இல்லாதது.
l 2019க்கும் 2023க்கும் இடையில், சராசரியாக, சுமார் 80 சதவீத பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. 2023ஆம் ஆண்டில் முழு பட்ஜெட்டுமே விவாத
மின்றி நிறைவேற்றப்பட்டது.
l அரசியலமைப்பின் 19வது பிரிவு கருத்து சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்றவற்றை குடிமக்களுக்கு வழங்குகிறது. இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் இப்போது பறிக்கப்பட்டு வருகின்றன.
ஊடக சுதந்திரம் பறிப்பு
l ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ அமைப்பு தயாரித்த உலகபத்திரிகையாளர் சுதந்திர குறியீட்டின்படி ஊடக சுதந்திரத்தில் உலகில் உள்ள 180 நாடுகளில் இந்தியா
161வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
l ஊடகங்களின் பெருநிறுவன உரிமையாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் பெருமளவிலான வாசகர்களைக் கொண்ட முக்கிய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
l சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொலைத்தொடர்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள்; ஒளிபரப்பு மசோதா ஆகிய அனைத்துமே ஊடகங்கள் மீதுஅரசின் கட்டுப்பாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு வழி வகுப்பவை ஆகும்.
l நியூஸ் கிளிக் நிறுவனர் விஷயத்தில் நடந்ததுபோல, தேசத்துரோக விதி மற்றும் உபா சட்டம் கூட அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம்.
l ஆளும் கட்சிக்குச் சாதகமான பெருவணிக நிறுவனங்களின் கைகளில் ஊடகங்களின் குவிப்பு மற்றும் கட்டுப்பாடு 80 கோடி பார்வையாளர்களைக் கொண்ட 72 தொலைக்காட்சி சேனல்களுக்குச் சொந்தக்காரராக முகேஷ் அம்பானியை இட்டுச் சென்றுள்ளது.
எதிர்ப்பை ஒடுக்குதல்
l ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒடுக்குவதன் மூலம் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவுவதே மோடி மற்றும் பாஜகவின் நோக்கமாகும். இதற்காக, அம
லாக்க இயக்குநரகம் (இடி), சிபிஐ மற்றும் வருமானவரித்துறை போன்ற ஒன்றிய அரசின் அமலாக்க அமைப்புகள் எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை மற்றும் வழக்குகள் உள்ளன.
l ஜார்க்கண்ட் முதல்வரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. தில்லி துணை முதல்வர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறையில் அடை பட்டுள்ளார். இப்போது தில்லி முதல்வரும் சிறையில்தள்ளப்பட்டுள்ளார்.
l ஒன்றிய அரசு நிறுவனங்களின் விசாரணை மற்றும் கைது அச்சுறுத்தல் காரணமாக பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பாஜகவிற்கு தாவிவிட்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இத்தகைய தந்திரங்களால் உடைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு
l எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளில் பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் பதிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
l டிஜிட்டல் முறையிலான தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு சட்டம் தனிநபர் அந்தரங்க உரிமையை கடுமையாக மீறுகிறது. தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அரசு கண்காணிப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என விதி உருவாக்கப்பட்டுள்ளது.
l சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தபால் அலுவலகச் சட்டம், சந்தேகத்திற்கு உரியதாக இருப்பின், ஒரு பார்சலை திறந்து மேலதிக விசாரணைக்காக சுங்கத்துறை அல்லது வேறெந்த ஓர் அரசு நிறுவனத்திற்கும் அனுப்பிவைக்க எந்தவொரு அரசு அதிகாரிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
l பல்வேறு அரசுத் திட்டங்களுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள ஆதாரின் பயன்பாடு அனைத்து தனிப்பட்ட தரவையும் கைப்பற்ற அரசிற்கு உதவுகிறது.
l மோடி அரசின் உத்தரவின் பேரில் 2022இல் 84 முறை இணைய தள செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி முறை
l மக்களாட்சி முறையின் இன்றியமையாத அம்சம் கூட்டாட்சிக் கோட்பாடு ஆகும். இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும். ஆனால் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சி மாநிலங்களின் நியாயமான
உரிமைகளையும் வளங்களையும் பறிக்கும்படியான ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறையை உருவாக்க விரும்புகிறது.
l மாநிலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிஆளும் மாநில அரசுகளின் உரிமைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்து வருகிறது.
l ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட விதம் தான் மாநிலங்களின் உரிமைகள் மீதான மிக மோசமான தாக்குதல் ஆகும்.
l மாநில விவகாரங்களில் தலையிட ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்துவது; போதிய நிதி ஆதாரங்களை மறுப்பது; கடன் வாங்கும் உரிமை மறுக்கப்படுவது; மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசின் உத்தரவுகளை திணிப்பது ஆகிய அனைத்தும் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதலேஆகும்.
இந்துத்துவ – கார்ப்பரேட் கூட்டணியில் இருந்தே ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் தடையும் உருவெடுக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்துத்துவ விழுமியங்களை சமூகத்தின் மீது திணிக்கவும் அதிக அளவு எதேச்சதிகாரம் தேவைப்படுகிறது. மோடி அரசால் முன்னெடுக்கப்படும் இந்துத்துவா சர்வாதிகார ஆட்சியின் இருப்பு ஜனநாயகம் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு நீடித்த அச்சுறுத்தலை முன்னறிவிப்பதாக அமைகிறது. எனவே, ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் இந்தப் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மையமான பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்! பாஜகவை தோற்கடிப்போம்!!