articles

img

மாநில அளவில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் ஒருங்கிணைப்புகள் தேவை!

சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் பர்வேஸ் சுல்தானுக்கு அளித்த பேட்டியின் தமிழ் சுருக்கம்: அ.அன்வர் உசேன்

கேள்வி: ‘இந்தியா’ அணியின் (INDIA) அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 31 (இன்று) நடக்க உள்ளது. இந்த அமைப்புக்கு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப் பட உள்ளதாகவும் குறைந்தபட்ச பொது திட்டம் வடிவமைக்கப்படும் எனவும் இந்த அமைப்பு க்கு ஒரு செயற்குழு உருவாக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் உள்ளன. இந்த அமைப்பின் திசைவழி என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: ‘இந்தியா’ அணி, மக்களி டம் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பல முக்கிய அம்சங்களில் ஒத்த கருத்தில் உள்ளன. நமது குடியரசின் அடிப்ப டை தன்மையை- மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு எனும் தன்மையை பாதுகாப்பது என்பதும் இதில் அடங்கும். அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதப் படுத்தும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் நமது அடிப்படைநோக்கம். குறைந்தபட்ச பொது திட்டம் என்பது வழக்கமாக அரசாங்கம் அமைத்த பின்னர்தான் முன்வரும். தேர்தலுக்கு முன்பே அது உருவாக்கப்படுவது இல்லை. ஆனால் நிச்சயமாக பிரச்சார இயக்கத்தின் பொழுது நாங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சில பொதுவான பிரச்சனைகள் உள்ளன. செயற்குழுவோ அல்லது வேறுவிதமான ஒருங்கிணைப்பு குறித்தோ மும்பையில் நிச்சயமாக விவாதிக்கப்படும். ஒரு ஒருங்கிணைப்பாளரோ அல்லது செயற்குழுவோ அல்லது அதுபோன்ற வேறு ஒன்றோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே ஒருங்கிணைப்பை எப்படி உருவாக்குவது என்பதை நாங்கள் விவாதிப்போம்.

கேள்வி: நீங்கள் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு மாநில அளவில் தொகுதி உடன்பாடு காண வேண்டும் என கூறுகிறீர்கள். முடியுமா?

பதில்: தொகுதி உடன்பாடு என்பது, எதிர்க் கட்சிகளின் வாக்குகள் பிரியாமல்; பா.ஜ.க. பலன் அடை வதை வலுவாக தடுக்க வேண்டும் எனும் நோக்கம் கொண்டது. கேரளத்தில் நாங்கள் நேரடியாக காங்கிரசு டன் மோதுகிறோம். அங்கு பா.ஜ.க.வுக்கு நாடாளு மன்ற உறுப்பினர் என்பதை மறந்துவிடுங்கள்; ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. எனவே காங்கிர சும் இடதுசாரிகளும் மோதுவதால் அங்கு பா.ஜ.க. வுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை. பா.ஜ.க. அங்கு அறவே தேர்தல் களத்தில் வெல்லும் வாய்ப்பு இல்லை. 

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்/ காங்கிரஸ்/ ஏனைய மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மோது கிறோம். இது பா.ஜ.க.வை பலவீனப்படுத்தும். ஒரு  வேளை அங்கு திரிணாமுல் உட்பட நாங்கள் அனை வரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு எதிராக களம் காண்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். ஆட்சி யின் மீது உள்ள அதிருப்தி அனைத்தும் பா.ஜ.க. அறுவடை செய்யும். எனவே, மேற்கு வங்கத்தில்  முக்கோண போட்டிதான் பா.ஜ.க.வுக்கான சாதக அம்சத்தை குறைக்கும். எனவே நாம் ஒவ்வொரு மாநிலத்தையும் வெவ்வேறு கோணத்தில் அணுக வேண்டிய தேவை உள்ளது.

கேள்வி : இந்த கூட்டணியில் உள்ள பல கட்சிகளி டையே ஆழமான வேறுபாடுகளும் உள்ளன. அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து செய லாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: மக்கள் இந்த கட்சிகளை வெவ்வேறு திசை களில் செல்லாமல் ஒன்றாக சேர்த்து வைப்பார்கள் என நான் நினைக்கிறேன். மக்களின் நிர்ப்பந்தம்தான் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. மக்களின் ஆதரவுடன்தான் 1970களில் அவசர நிலைக் காலம் தோற்கடிக்கப்பட்டது. மக்களின் ஆதரவுடன்தான் வாஜ்பாய் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மோடி அரசாங்கத்துக்கும் அதே கதிதான் ஏற்படும். மக்க ளின் விருப்பத்துக்கு துரோகம் செய்வது எந்த ஒரு எதிர்க்கட்சிக்கும் மிக கடினமான ஒன்று!

கேள்வி: நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வலிமை கணிசமாக குறைந்து விட்டது. இந்த சரிவுக்கு காரணம் என்ன? மீண்டும் எண்ணிக்கையை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்?

பதில்: பல காரணங்கள் உள்ளன. எங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவுக்கு வலது மற்றும் இடது அதிதீவிர சீர்குலைவு அமைப்புகள் ஒன்றாக கும்பல் சேர்ந்தன. இது ஒரு காரணி. எங்களிடமும் சில தவறு கள் இருந்தன. இதன் விளைவாக தேர்தல் ஆதரவு கணிசமாக குறைந்தது. அதே சமயத்தில் தேசத்தின் முன்பு நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதில் எங்களின் வலு அதிகரித்துள்ளது. மக்கள் போராட்டங்களின் நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதிலும் நாங்கள் வலு வடைந்துள்ளோம். மோடி தனது அரசியல் வர லாற்றில் பின் வாங்கியது மாபெரும் விவசாயிகள் எழுச்சி போராட்டம் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களில்தான்! இந்த சட்டங்கள் திரும்பப் பெறப் பட்டன. இந்த போராட்டங்களில் கட்சியின் பங்கு மகத்தானது. பொதுத்துறைகளை தனியார்மயமாக் கும் வேகம் கணிசமாக குறைந்ததற்கு தொழிற்சங்கங்க ளின் போராட்டம் மிக முக்கிய காரணம். இந்த போராட் டங்களின் மையமாக இருந்தது எமது கட்சியின் நிகழ்ச்சி நிரல்தான்! ஆகவே மக்களின் போராட்டங்க ளுக்கு நிகழ்ச்சி நிரலை உருவாக்கும் பங்கு இடதுசாரி களுடையது! ஆனால், தேர்தல் களத்தில் அது பிரதி பலிக்க வேண்டியுள்ளது. அந்த பணியை செய்து கொண்டுள்ளோம்.