articles

img

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது!

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது!

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற நிலையில் பாசிச சக்திகளின் வீழ்ச்சியும், அதில் செஞ்சேனை வகித்த பாத்திரமும் உலகை உலுக்கிய நிகழ்வுகளாகும். இந்திய அரசியல் நிகழ்வில் இவை ஏற்படுத்திய தாக்கம் வலு வானது. இடதுசாரி இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் இதனால் அடைந்த உத்வேகம் மகத்தானது. பாசிசத்தின் வீழ்ச்சி அவற்றின் அன்றைய நடவடிக்கைகளில் பிரதிபலித்தது.

போராட்டங்களின் எழுச்சி

1920-இல் கம்யூனிஸ்ட் இயக்கம் உரு வான காலத்திற்கு பின் நிகழ்ந்த மிகப்பெரும் எழுச்சி நாட்களாக 1945-46ஆம் ஆண்டு நிகழ்வுகள் இருந்தன. கப்பற்படை மாலுமி களின் எழுச்சி, தெலுங்கானா போராட்டம், புன்னப்புரா - வயலாறு போராட்டம், கையூர் தியாகிகளின் வீரம், தேபாகா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி ஆதிவாசி மக்களின் வீர மிக்கப் போராட்டம், லட்சோபலட்ச தொழி லாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தங் கள், தேசம் தழுவிய பொதுவேலைநிறுத்தம் - பந்த், மத்திய தர வர்க்க ஊழியர்களின் மகத்தான போராட்டங்கள் - இவை யனைத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கம் வகித்த பாத்திரம், எதிர்கொண்ட அடக்குமுறைகள் வீர வரலாறாகும். இந்த அடக்குமுறைகளை பின்னுக்குத் தள்ளி கிடைத்த வெற்றி வெள்ளை ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தது. இந்திய மண்ணில் அவர்களது எடுபிடிகளாகச் செயல்பட்ட ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், அரச குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் அடைந்த பீதிக்கோ அளவே இல்லை. அப்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இந்திய வைஸ்ராயாக ஆர்க்பால்டு வேவல்  செயல்பட்டார். மேற்கண்ட போராட்டங்கள் குறித்து வரிசையாக பல அறிக்கைகளை அவர் அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். அப்போது பிரிட்டனிலும் அரசு மாற்றம் ஏற்பட்டிருந்தது. வில்சன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமர் பொறுப்பிலிருந்து வெளியேறி லேபர் கட்சியைச் சார்ந்த கிளமண்ட் அட்லி பிரதமராக பொறுப்பேற்றி ருந்தார்.

பிரிட்டன் நலனுக்கு ஆபத்து

வேவலின் அறிக்கைகள் பிரிட்டிஷ்  பிரதமர் அட்லிக்கு மிகுந்த கவலையளிப்ப தாக இருந்தன. இத்தகைய உயர்ந்தபட்ச கொதிநிலையை அதற்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் சந்தித்தது இல்லை. வேவல் நிலைமையை விவரித்த தோடு மட்டுமில்லாமல் பல பரிந்துரைகளை யும் அனுப்பியிருந்தார். அதில் பிரதானமான ஒரு ஆலோசனையாக தாமதமில்லாமல் இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேறு வதே நல்லது என்பதுதான். அதற்கு இது தான் பொருத்தமான தருணம் என குறிப்பிட்டிருந் தார். இந்திய விடுதலைப் போரின் உருவமும், உள்ளடக்கமும் மாறிக்கொண்டிருப்பதையும் காங்கிரசின் கைகளிலிருந்து கம்யூனிஸ்ட்டு களின் கைகளுக்கு விடுதலைப் போராட்ட தலைமை செல்லும் காலம் துவங்கி விட்டதை யும் குறிப்பிட்டிருந்தார். இப்பின்னணியில் பிரிட்டன் தாமதமில்லாமல் இந்தியாவி லிருந்து வெளியேறாவிட்டால் பின்னர் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்படும் நிலைமை ஏற்பட்டு விடும் என்றும் அதனால் பிரிட்டன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் பிரிட்டன் உட்பட ஏகாதிபத்திய நாடு களின் மூலதனத்திற்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகி விடும் என்றும் எச்சரித்திருந்தார்.

மணிமகுடமாக இந்தியா

அப்போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு மகத்தான பெருமை சேர்க்கும் காலனி நாடாக விரிந்து பரந்த இந்தியா இருந்தது என்பது உண்மை. கைபர் கணவாயில் துவங்கி குமரி முனை வரை விரிந்து பரந்த பாரதம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மிக கேந்திரமான கண்ணி யாக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பெருமை சேர்த்த பல காலனி நாடுகள் இருந்த போதிலும் அவற்றில் ஜொலிக்கும் நட்சத்திரமாக இந்தியா இருந்தது. வங்கத்தின் புகழ் வாய்ந்த சர்வதேச பள்ளிக் கூடங்கள், பளபளக்கும் பட்டாடை அணிந்த அரச குடும்பத்தினர், மலைப்பிரதேசங்களில் இருந்த புலிகளின் சரணாலயங்கள்,  டர்பன் அணிந்த பஞ்சாபியர்கள், உலகப்புகழ் பெற்ற மைதானங்கள், யானைக் கூட்டங்கள் நிறைந்த வனப்பிரதேசங்கள், இந்தியா வுக்கே உரித்தான பல அறுசுவை உணவு வகைகள், சுவை மிக்க பானங்கள் ஏராள மான இந்திய பெருமைகளையும், அடை யாளங்களையும் கூறிக்கொண்டே போக லாம். இவையனைத்தும் நிறைந்த இந்தியா  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக இருந்தது. இவற்றை உள்ளடக்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைமையகம் என்ற முறை யில் லண்டனின் எண் 10, டவுசிங் தெருவிற்கு உலக அளவில் தனிப்பெருமையும் உண்டு. இவையனைத்தும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டு விட்டதே என்பது தான் பிரிட்டிஷ் பிரதமர் அட்லியின் பெரும் கவலையாக இருந்தது.

வெளியேற முடிவு

ஒவ்வொரு நாள் காலையிலும் இந்தியா வில் புதிது புதிதான இடங்களிலிருந்து மக்கள் பங்கேற்ற வலிமையான போராட்டங்கள் வெடித்த செய்திகளை அறிவிக்கும் தந்திகள் பிரிட்டன் தலைமையகத்திற்கு வந்து கொண்டே இருந்தன. இந்தியாவில் அன்றைய நிலைமையின் அனைத்து அம்சங்களையும் குறித்த பரிசீலனையை பிரிட்டனின் தொழில் கட்சி தலைமை விவாதித்தது. ஆழமான விவாதங்களுக்குப் பிறகு இறுதியாக அக்கட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் சாராம்சம் இதுதான். “இந்திய வரலாற்றுப்போக்கில் தற்போது வலுவடைந்து வரும் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தாலும் - பின்னர் உருவெடுக்க வாய்ப்புள்ள ஆயுத மோதல்களாலும் பிரிட்டன் பலவந்தமாக வெளியேற்றப்படுவதை விட சரியான தருணத்தில் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவதே நல்லது”. பிரதமர் அட்லி மற்றும் தொழில் கட்சியின் முடிவை அறிந்த பிரிட்டனின் முன்னாள் பிர தமர் வில்சன் சர்ச்சில் பின்வருமாறு குறிப் பிட்டார். “இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளி யேறுவது மிகவும் துக்ககரமான நிகழ்வு. உலகளவில் பிரிட்டன் பெற்றுள்ள உயர்ந்த கௌரவம், பெருமை இவையனைத்தும் இதன் மூலம் தவிடுபொடியாகிவிடும்” இது அவர் கொடுத்த எச்சரிக்கை. ஆயினும், இந்திய நிலைமைகளை கணக்கில் எடுத்து அங்கிருந்து பிரிட்டன் வெளியேறுவது என எடுத்த முடிவில் பிரதமர் அட்லி உறுதியாக இருந்தார்.

யாருடன் பேச்சுவார்த்தை?

இதனை எவ்வாறு அமல்படுத்துவது என்பது தான் அவர் முன்பிருந்த பிரதான கேள்வியாக இருந்தது. இந்தியாவில் செயல்பட்டு வந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய முதலாளித்துவக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றின் தலைமை யிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதே பிரிட்டனின் எதிர்கால நிலைக்கு உகந்தது என்பதே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் நிலைபாடு. இந்நிலைபாடு எதிர்பார்த்த ஒன்று தான். முதலாளித்துவ அமைப்பை வீழ்த்து வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் கம்யூ னிஸ்ட் இயக்கத்துடன் பிரிட்டன் அரசு ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்தியது இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தின் கணிசமான காலம் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலமாகவும், சதி வழக்கு களையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்ட காலமாகவும் இருந்தது. இவையனைத்தையும் எதிர்கொண்டு தான் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது வர்க்க மற்றும் வரலாற்றுக் கடமைகளை அக்காலத்தில் நிறைவேற்றி வந்தது. அடக்குமுறைகள் நிகழ்ந்த போதும் 1945-46களில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான மக்கள் எழுச்சியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் தடுக்க முடியவில்லை.

காந்தி - காங்கிரஸ் பங்கு 

விடுதலைப் போராட்ட வரலாற்றில் காங்கிரசின் பங்களிப்பை கம்யூனிஸ்ட் இயக்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டது இல்லை. இந்தியாவில் சுரண்டும் வர்க்கங் களின் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும் அந்த வர்க்கங்கள் ஏகாதிபத்திய ஆதிக்கத்தி லிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளையும், போராட்ட ங்களையும் இக்கட்சி நடத்தி வந்துள்ளது. இந்த போராட்டம் இந்திய மக்களின் விடு தலையுடன் இணைத்தே நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் காந்தியின் தலைமை விடுதலை இயக்கத்திற்கு ஒரு வெகுஜனத் தன்மையை உருவாக்கித் தந்தது. சத்தியா கிரகம் - ஒத்துழையாமை - உண்ணாவிரதம் போன்ற இயக்கங்களில் லட்சோபலட்சம் மக்களை அவரால் அணி திரட்ட முடிந்தது. காங்கிரஸ் தலைமையிலான விடுதலை இயக்கம் மகத்தான மக்கள் இயக்கமாக மாறும்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதனை ஒடுக்க அரசு இயந்திரத்தின் மூலம் அடக்குமுறைகளை ஏவியது. அரசு வன் முறை மூலம் விடுதலை இயக்கத்தை முடக்க முனைந்தது. இவ்வாறு போராட்டங்கள் ரத்தக் களறியாக மாறியபோதெல்லாம் காந்தி அப்போராட்டங்களை நிறுத்தி வைப்பதும், வாபஸ் பெறுவதுமான அணுகுமுறையை கடைப்பிடித்தார். பல காங்கிரஸ் தலைவர்கள் இதனை விரும்பவில்லை என்றாலும் காந்தி யின் முடிவை அவர்களால் தடுக்க முடிய வில்லை. விடுதலை பெற்ற பிறகு மட்டுமல்ல, விடுதலைக்கு முன்பே ஏகாதிபத்தியத்தின்பால் காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறை, போராட்டம் - சமரசம் என்ற வடிவிலிருந்ததை எவரும் மறுக்க முடியாது. இது ஏகாதிபத்திய காலத்தில் சுரண்டும் வர்க்கங்களின் பொதுவான அணுகுமுறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமை பெருமுதலாளிகளின் நலன் கருதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்பால் பிரச்ச னைகள் அடிப்படையில் எதிர்ப்பு - சமரசம் என்ற அணுகுமுறையை கையாண்டதை நாம் அறிவோம். 1945-46 காலம் இந்தியாவில் கம்யூ னிஸ்ட்டுகளின் தலைமை வளர்ந்து வந்த காலம். இக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய அனைத்து வர்க்கப் போராட்டங் களையும் காங்கிரஸ் எதிர்த்தது. அக்காலத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமான போராட்ட நட வடிக்கைகளிலும் பெரிதாக ஈடுபடவில்லை. ஆனால், விடுதலை கோரி பிரிட்டிஷ் அரசுக்கு அது அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலை யில்தான், முன்பகுதியில் குறிப்பிட்டதை போல பிரிட்டனின் அட்லி அரசு காங்கிரஸ் - முஸ்லீம் லீக் தலைவர்களுடன் இந்திய விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மவுண்ட் பேட்டன் பிரபுவை இந்திய வைஸ்ராயாக நிய மித்து அனுப்பி வைத்தது. இக்காலத்தில் இந்தியா மற்றொரு சவாலை எதிர்கொண்டிருந்தது. ஆம், இந்தி யாவை மத அடிப்படையில் பிரிவினை செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் வலுவாக இருந்த காலம் அது. ஆர்எஸ்எஸ் - இந்து மகா  சபை கும்பல் ஒருபுறமும், முஸ்லீம் லீக் மறுபுற முமாக இந்த பிரிவினைக்கு விதை போட்டன. காங்கிரஸ் தலைவரான காந்தி பிரிவினைக்கு எதிராக உறுதியான நிலை எடுத்தார். ஆயி னும், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. ஜவஹர்லால் நேரு உள்பட இதர பல தலை வர்கள் எப்படியாவது விடுதலை கிடைத்தால் சரி என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்பிரச்சனை யை பிறகு தனியாக நாம் ஆய்வு செய்யலாம். காங்கிரஸ் - முஸ்லீம் லீக் தலைவர்களுடன் பிரிட்டன் சார்பாக பேச்சுவார்த்தை நடத்திய மவுண்ட்பேட்டன் பிரபு தலைமையிலான குழு  இந்தியா - பாகிஸ்தான் என நாட்டை மத அடிப் படையில் இரு கூறாக பிரிவினை செய்து விடு தலை வழங்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் என நாட்டை பிரிவினை செய்து முறையே காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைமை களிடம் ஆட்சி அதிகாரத்தை வெள்ளை ஏகாதிபத்தியம் ஒப்படைத்தது. ஆம். வெள்ளை ஏகாதிபத்தியத்திட மிருந்து இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டது. தேச விடு தலை கிடைத்த பின்னணி இதுதான்.

வரலாற்றுப் பதிவு

ஆயினும், 1947 ஆகஸ்ட் 15இல் நாடு விடு தலை அடைவதற்கு காரணமான வலுவான பின்புலமாக கம்யூனிஸ்ட்டுகள் தலைமை யிலான எழுச்சிமிக்க போராட்டங்கள் திகழ்ந்தன என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. முதலாளித்துவ ஆசிரியர் களும் ஊடகங்களும் இப்போராட்டங்களின் உள்ளடக்கத்தையும், வீரியத்தையும் குறைத்தும், திரித்தும் வெளிக்காட்டலாம். ஆனால், உண்மைச் சம்பவங்களை - உண்மையான  வரலாற்றை ஒருபோதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.