மானுட உரிமையைக் காக்கும் செங்கொடி
மக்களின் ஒற்றுமையை வளர்க்கும் செங்கொடி
ஆணவப் போக்கினை அடக்கும் செங்கொடி
செங்கொடி
அறியாமை நீக்கிட உழைக்கும் செங்கொடி
அனைவர்க்கும் சமத்துவம் கேட்கும் செங்கொடி
அதிகாரத் தோரணையை உலுக்கும் செங்கொடி
செங்கொடி
போராட வேண்டும் எல்லோரும்
ஒண்ணு சேருங்க
போராடாமல் வாழ்க்கை இங்கு ஏதுங்க
நம்ம உரிமையை விலைபேசி நம்மள
ஊமைகளா ஆக்கிப்புட்டா..
இந்திய இறையாண்மையை அத
சுக்கு நூறா ஒடச்சுப்புட்டா..
இளைஞர்கள் மாணவர்கள் வாழ்வை
இருளெனும் தீய வெச்சா
மக்கள் மறந்திடுவோம் என்று
மறுபடியும் கேட்டு வாரா……
(போராட வேண்டும்)
பத்து வருஷமா பல தொழில் அழிஞ்சு (2)
பட்டப் பகலிலே கொலைகளும் நடந்து
பாலியல் வன்முறையால் பல பெண்கள்
சாவதேன்
விடுதலைப் போரினிலே நாட்டுக்கென
உயிரைக் கொடுத்தனரே
சந்ததிகள் வாழ்வதற்கு பல
பேர் தியாகம் செய்தனரே
அந்தத்தியாகங்கள் எல்லாத்தையும்
மண்ணில் போட்டுப் புதைச்சா
மக்கள் கண்ணீரின் கதறல்களை
பார்த்து பார்த்து ரசிச்சா..
மீண்டும் இவர்கள் ஆண்டா நாடு என்னாகும்
மனிதா மனிதா விழிப்பாய் இல்லை
என்றால் வாழ்வேதடா
எழுவாய் எழுவாய்
துணிந்தால் தானே தடைகள்
தெறித்தோடுமே….
பிரிவினை சக்திகள் நாட்டை ஆள்வதா?
சாதிவெறி மதவெறி மனிதரைக் கொல்வதா?
மனித மாண்புகளை மதவெறிக் கூட்டம்
அழிப்பதா?
பத்து வருஷமா பல தொழில் அழித்து
பட்டப் பகலிலே பல கொள்ளை அடித்து
பாமர மக்களை மோதவிட்டு ரசிப்பதா?
மதச் சார்பற்ற நம் நாடு
பல மதக்கொள்கை கொண்ட நாடு
இதை சிதைத்து விடக் கூடாது
காப்போம் வா தோழா வா
இங்கு கருத்துரிமையும் உண்டு
பல வேற்றுமை ஒற்றுமை உண்டு
இதை கெடுக்க விடக் கூடாது
காப்போம் வா.. தோழா வா..
காஷ்மீர் மக்கள் மணிப்பூர் மக்கள்
காணும் துயரங்கள் தன்
கண்முன்னே சொந்தம் பந்தம்
அழியும் கோலங்கள் இனியும்
மதவெறி வேண்டாம் – மனிதம் காப்போம் வா
வா தோழா
தோழா தீய சக்திகளை அகற்றி நம் இந்திய
நாட்டைக் காப்போம்
(போராட வேண்டும்)
மக்களைக் காப்பாற்ற சேர்ந்த கூட்டணி
மதவெறி கார்ப்பரேட்டை அகற்றும் கூட்டணி
இளைஞர்கள் மாணவர்கள் வாழ்த்தும்
இந்தியக் கூட்டணி
சுரண்டலை ஒழித்திட எழுந்த கூட்டணி
ஊழல் கூட்டத்தை ஒழிக்கும் கூட்டணி
மக்கள் ஆட்சியை அமைக்கும்
வெற்றிக் கூட்டணி…