articles

img

...ஏனென்றால் அவர் மோடியின் பாதுகாப்பில் இருக்கிறார் - ஜதீந்தர் கவுர் தூர், சுனில் காஷ்யப்

2021 செப்டம்பரில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் அருகே நடைபெற்ற தொரு நிகழ்ச்சியில் ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆற்றிய உரையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் வீடியோ அக்டோபரில் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படு கொலைச் சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பிரபல மானது. “உங்கள் வழிகளைச் சரிசெய்து கொள் ளுங்கள் அல்லது நான் உங்களைச் சரி செய்வேன். அதற்கு எனக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே போதும். நான் ஒரு அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பி னர் மட்டுமல்ல; தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு நான் யார் என்பதை அறிந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். ஒருபோதும் சவாலிலிருந்து நான் தப்பி ஓட மாட்டேன்” என்று அந்த நிகழ்வில் அஜய் மிஸ்ரா பேசி யிருந்தார். அந்தப் பேச்சின் உண்மையான பொருள் என்ன என்பதை அஜய் மிஸ்ரா  குறிப்பிடவில்லை. ‘அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நாளில், பாலியா, லக்கிம்பூரிலிருந்து அவர்கள் (விவசாயிகள்) ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்றும் அஜய் மிஸ்ரா அங்கே பேசியிருந்தார்.      அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மற்றும் அவரது ஆட்கள் விவசாயிகள் மீது தங்களது கார்களை மோதி ஏற்றியதாக 2021 அக்டோபர் 3 அன்று சம்பவ இடத்தில் இருந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி னர். அந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த விவசாயி கள் தங்கள் மீது மோதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர். கார் ஏற்றிய தாக்குதலில், நான்கு விவசாயிகள், பத்திரி கையாளர் ஒருவர் உட்பட எட்டு பேர் இறந்தனர்.   

அந்த சம்பவம் குறித்து அக்டோபர் 4 அன்று முதல் தகவல் அறிக்கையை உ.பி., மாநிலக் காவல்துறை பதிவு செய்தது. ஆசிஷ் அதில் குற்றவாளியாகக் குறிப் பிடப்பட்டிருந்தார். அலட்சியத்தால் ஏற்படுத்தப்படும் மரணம் தொடர்பான இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 மற்றும் பிரிவு 304-ஏ உட்பட எட்டு பிரிவு களின் கீழ் அந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளின் வருகை குறித்ததாக இருக்கின்ற குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 160 இன் கீழ், அக்டோபர் 7 அன்று, டிகுனியா காவல் நிலை யத்தில் மறுநாள் ஆஜராக வேண்டுமென்று ஆசிஷுக்கு காவல்துறை அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது. ஆனால் அன்றைய தினம் ஆசிஷ் ஆஜராகவில்லை. அக்டோபர் 8 அன்று மீண்டும் அதேபோன்ற அறி விக்கையைப் பிறப்பித்த காவல்துறை, அடுத்த நாள் ஆஜராகுமாறு ஆசிஷிற்குத் தகவல் அளித்தது. காவல் துறை அதிகாரிகள் பலரின் துணையுடன் டிகுனியா காவல் நிலையத்திற்கு அக்டோபர் 9 அன்று ஆசிஷ் காவல்துறை விசாரணைக்காக வந்தார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.        ஆசிஷும் அவருடன் இருந்த மற்றவர்களும் தங்களு டைய துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாகவும், விவ சாயிகளில் ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றதாகவும் போராடிய விவசாயிகள் கூறினர். “குற்றம் சாட்டப்பட்ட வர்களிடமிருந்து நான்கு ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன என்றும், அதில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சொந்த மான துப்பாக்கி, ரிவால்வர் ஆகியவையும் அடங்கும் என்றும் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரித்த சிறப்பு  புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மீது நடத் தப்பட்ட பரிசோதனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய தற்கான ஆதாரங்களுடன் அவை இருந்ததாக தடவியல் அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) அறிக்கை கூறுகிறது” என்று மாவட்ட அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.  

ஆயினும் அஜய் மிஸ்ரா குற்றம் நடந்த இடத்தில் தனது மகன் இருக்கவில்லை என்றே கூறி வந்தார். “நான் அவ்வளவு பலவீனமானவன் இல்லை. இது எனது குடும்பத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற சதி” என்று இந்தியா டுடே நேர்காணலின் போது அவர் கூறியிருந்தார். அடிக்கடி குற்றச் செயல் புரிபவராக இருப்பது குறித்து அஜய் மிஸ்ராவிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, “​இது எனக்கு எதிரான சதியின் ஒரு பகுதி. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் எனக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் என் மீது வழக்கை பதிவு செய்துள்ளார். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு என் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. காவல்துறையின்  காவலில் இதுவரை நான் இருந்ததில்லை. சிறையில் அடைக்கப்பட்டதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் என் மீதுள்ள துவேஷம் காரணமாக என் மீது வழக்குப் பதிவு செய்யத் தொடங்கினர். எனது குடும்பத்தின் பாது காப்பிற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். 2005ஆம் ஆண்டில் யாரும் பெற்றிராத அளவிலே அதிக வாக்குக ளைப் பெற்று மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரா னேன்” என்று அஜய் மிஸ்ரா  கூறியிருந்தார். உண்மை யில் அஜய் மிஸ்ரா இதற்கு முன்பும் பெரிய குற்ற வாளிதான். படுகொலை, கடத்தல், கொள்ளைக் குற்றவாளி அவர்.    

2000 ஆம் ஆண்டில் இதே லக்கிம்பூர் கேரி மாவட் டத்தில் உள்ள பன்வீர்பூர் பகுதியில் பிரபாத் என்ற இளம் அரசியல் பிரமுகரை பகிரங்கமாக சுட்டு படுகொலை செய்தார் அஜய் மிஸ்ரா. அப்பகுதியில் வளரும் அரசியல் தலைவராக பிரபாத் உருவாகி வரு வதை சகிக்க முடியாமல் அவரது கதையையே முடித்த வர் இந்த குற்றவாளி. வெறும் 29 வயதே ஆன பிரபாத் லக்னோ பல்கலைக்கழகத்தில் பிரபலமான மாணவர் தலைவராக இருந்தவர். சமாஜ்வாதி கட்சியின் இளை ஞர் பிரிவான சமாஜ்வாதி யுவஜன் சபாவின் மாநிலச் செயலாளராகவும் இருந்தவர். படிப்பு முடித்து பன்வீர் பூருக்கு திரும்பிய பிரபாத், 2000 ஆம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் மிகப் பெரிய ரவுடியாகவும், அதே வேளை பாஜக பொறுப்பிலும், மாவட்ட கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக வும் இருந்தார் அஜய் மிஸ்ரா. பிரபாத்தின் வளர்ச்சி தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்து என்பதால் தீர்த்துக் கட்டினார். பிரபாத் கொலை வழக்கு பற்றிய குற்றப்பத்திரிகை 2000 டிசம்பர் 13 அன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு நடந்தபோது, மிகத் தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், சாட்சிகளையெல்லாம் துப்பாக்கி முனையில் மிரட்டி பிறழ் சாட்சிகளாக்கினர். ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் சரணடையுமாறு மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட அஜய் மிஸ்ரா சரணடையவில்லை. பிறழ்சாட்சிகள் காரணமாகவும், பாஜகவின் உயர் மட்டம் முதல் உள்ளூர் பிரமுகர் வரை கொடுத்த நிர்ப்பந்தங்களின் காரணமாகவும், பிரபாத் கொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி 2004 மார்ச் 29 அன்று அஜய் மிஸ்ராவை மாவட்ட அமர்வு நீதி மன்றம் விடுதலை செய்தது.  அதற்கு முன்பு 1996லும் இதேபோன்ற கொலை வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டது.  பிரபாத் படுகொலைக்கு பிறகு லக்கிம்பூர் கேரி பகுதியில் கேள்வி கேட்பார் இல்லை என்ற நிலைக்கு அஜய் மிஸ்ரா வந்தார். மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, வன்முறை, துப்பாக்கி ராஜ்ஜியம், கடத்தல் என அந்த பிரதேசத்திலேயே ஒரு தாதா போல வளம் வந்த அஜய் மிஸ்ராவை 2021 ஆம் ஆண்டில் எம்எல்ஏ சீட் கொடுத்து சட்டமன்ற உறுப்பினராக்கியது பாரதிய ஜனதா கட்சி.   

எல்லை தாண்டிய கடத்தல்காரன்

நிகாசன் பகுதிக்கு அடுத்துள்ள நேபாளத்தில் இருந்து வர்த்தகம் மற்றும் கடத்தலில் அஜய் மிஸ்ரா ஈடுபட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்றாலும் 2000ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்த சாட்சிகள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் “நேபாள நாடு அரு காமையில் இருப்பதால், கடத்தலில் ஈடுபட்ட அஜய் மிஸ்ராவின் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருந்தது என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1980 முதல் லக்கிம்பூர் கேரியில் வசித்து வருகின்ற, பெயர் குறிப்பிட விரும்பாத, அஜய் மிஸ்ராவைப் பற்றி நன்கு அறிந்து வைத்தி ருக்கும் மூத்த கல்வியாளர் ஒருவர் “நேபாளத்திலி ருந்து கொண்டு வரப்படும் மலிவான மசாலாப் பொருட்க ளை அவர்கள் இந்தியாவில் அதிக விலைக்கு விற்று வந்தனர். யூரியா மற்றும் காய்கறிகளை அவர்கள் எல்லை தாண்டி அனுப்பியும் வந்தார்கள்” என்று கூறினார். 

அதே போன்ற கருத்துக்களையே மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள விவசாயி கள் தலைவரான ராகேஷ் திகாயத்தும் 2021 அக்டோபர் 26 அன்று தெரிவித்திருந்தார். லக்கிம்பூர் கேரி வன்முறை யில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய போது, அஜய் மிஸ்ரா சந்த னக்கட்டை கடத்துபவர் என்றும் கருப்பு மிளகு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை நேபாளத்திற்கு கடத்துவது அவருடைய வழக்கம் என்றும் திகாயத் கூறினார். அமைச்சரவையில் சேர்ப்பதற்கு முன்பாக அஜய் மிஸ்ரா குண்டராக இருந்தார் என்றும் திகாயத் கூறினார். மேலும் கூறுகையில் “இன்று, இவ்வளவு மோச மான சம்பவம் நடந்திருந்தாலும், அவருக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த அளவிற்கு மக்களிடம் அவர் ஏற்படுத்தியிருக்கும் அச்சம் இருக்கிறது” என்றார் திகாயத்.   லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளி அஜய் மிஸ்ராதான் என்ற போதிலும் அவரது நிழலைக் கூட நெருங்கவில்லை விசாரணை வளையம்.ஏனென்றால் அவர் மோடியின் பாதுகாப்பில் இருக்கிறார்.

நன்றி : கேரவன் இதழ், 2021 டிசம்பர் 14; 
தமிழில் : பேரா.தா.சந்திரகுரு