articles

img

இபிஎஸ் - 95 ஓய்வூதியர்களின் கோரிக்கை மாநாடு - ஆர்.கிருஷ்ணமூர்த்தி , கே.பி.பாபு

தொழிலாளர்கள் தங்களது உடல் வலு உள்ள காலத்தில்  தங்களது  குடும்பத்தை பாதுகாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களது உழைப்பைச் செலுத்தி வருகின்றனர். அவர்களது பணி ஓய்வுக் காலத்தில் சிரமம் இன்றி வாழ்வ தற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக, சோவி யத் சோஷலிச புரட்சிக்குப் பிறகு பல நாடு களில் ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.

வருங்கால வைப்புநிதி திட்டம் அமலாக்கம்

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு அன்றைய பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1952இல் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை சட்டமாகக் கொண்டு வந்தார். தொழிலாளியும் நிர்வாகமும் சம பங்களிப்புடன் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது.

குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971

1971இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971 என்ற திட்டத்தின் மூலம் தொழி லாளி மரணமடைந்த பிறகு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

இபிஎஸ் (EPS) 1995 ஓய்வூதியத் திட்டம்

தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவாக இபிஎஸ் (E.P.S) 1995 ஓய்வூதியத் திட்டம் 1995 நவம்பர் 16 அன்று அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவால் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் கோணல்,  முற்றும் கோணல்

நாடாளுமன்றத்தின் மூலம் உருவாக் கப்பட்ட வருங்கால வைப்புநிதி திட்டம் 1952 சட்டத்தின் ஒரு பகுதியான பென்ஷன் திட்டத்தை கொண்டுவரும் போது நாடாளு மன்ற உறுப்பினர்கள் கருத்துகளை கேட் காமலும் எந்த விவாதமும் இல்லாமலும் இ.பி.எஸ்1995 திட்டத்தை ஒன்றிய அரசு அவசர கதியில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசு 1.16% பங்களிப்பும் தொழிலாளி தனது பங்க ளிப்பாக, நிர்வாகம் செலுத்தும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பான 12% லிருந்து 8.33% ஐ பென்ஷன்  நிதிக்கான பங்களிப் பாகச் செலுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952  மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971 ஆகிய இரு திட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சட்டப் படியான அரசின் சம பங்களிப்பு மறுக்கப் பட்டது. ஒன்றிய அரசு இ.பி.எஸ் 95 திட்டம் ஒரு சிறந்த சமூகநல பாதுகாப்புத் திட்டம். இதில் பென்ஷன் மட்டுமல்ல, தொழி லாளி விரும்பினால் 1/3 பென்ஷனை விட்டுக் கொடுத்து தனது பங்களிப்பில் ஒருபகுதியை பெற்றுக்கொள்ளலாம். RETURN OF CAPITAL என்ற பெயரில் 20  ஆண்டுக்கு பிறகு அவரது பென்ஷனை போன்று 100 மடங்கு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இன்சூரன்ஸ் திட்டமும் உள்ளது என்று தெரிவித்தது.

இபிஎஸ் திட்டத்தின்  பல அம்சங்கள் ரத்து

2008இல் இந்தத் திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்று தெரிவித்த எல்லா அம்சங்களையும் தன்னிச்சையாக ரத்து செய்தது. இ.பி.எஸ்95  திட்டத்தில் உள்ள 10(2) ஷரத்தின்படி வழங்க வேண்டிய 2 ஆண்டுக ளுக்கான சர்வீஸ் வெய்ட்டேஜ் என்ற கூடு தல் தொகையை 2013 வரை வழங்கவில்லை. இ.பி.எஸ் பென்ஷனர்கள் நீதிமன்றங்களு க்கு சென்று வழக்கு தொடுத்த பிறகு 2015 இல்தான் சட்டத்தில் உள்ள உரிமையை வழங்கியது. இபிஎஸ் 95  திட்டத்தில் உள்ள கம்யூட் டேசன் செய்தவர்களுக்கு 100 மாதம் தொகையை முன்பணமாக அளித்து விட்டு 100 மாதம் முடிந்த பிறகும் அவர்கள் ஆயுள் காலம் முழுவதும் 1/3 தொகையை பிடித்தம் செய்து வந்தது. இ.பி.எஸ் பென்ஷனர்க ளின் தொடர் போராட்டத்தின் காரணமாக 2020 பிப்ரவரியில் 180 மாதம் முடிந்தவர்க ளுக்கு முழுபென்ஷன் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது.

குறைந்தபட்ச பென்ஷனுக்கான போராட்டம்

இபிஎஸ் பென்ஷனர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு  மத்தியில் ஆட்சியி லிருந்த  மன்மோகன்சிங் அரசு  குறைந்த பட்ச பென்ஷனை அமல்படுத்த  பா.ஜ.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் பகத்சிங் கோஷ்யாரி எம்.பி., தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்ட நாடாளுமன்றக் குழு தொழிலாளி செலுத்துவது போன்று ஒன்றிய அரசும் தனது பங்காக பென்ஷன் நிதிக்கு 8.33% பங்களிப்பு  செலுத்த வேண் டும் என்றும், பென்ஷன் தொகைக்கு செலுத்தப்படும் சம்பள வரம்பை ரூ.6500 லிருந்து ரூ.15,000/- ஆக உயர்த்த வேண்டும் என்றும், குறைந்தபட்ச பென்ஷனாக இடைக்கால நிவாரணமாக ரூ.3000 வழங் கப்பட வேண்டும் என்றும், பென்ஷனை பஞ்சப் படியுடன் இணைக்க வேண்டும் என்றும் 2013இல் ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.1000 மட்டும் 01/04/2014 முதல் வழங்குவதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை 2013 மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 01/04/2014 என்பதற்கு பதில் 01/09/2014 முதல் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.1000 வழங்க உத்தரவிட்டது.

ஆனால், அதுவும் குறைப் பிரசவமாக 58 வயது முடிந்து பென்ஷன் வாங்குபவர்க ளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டது. இ.பி.எஸ் திட்டத்தின் அடிப்படையில் 50 முதல் 57 வயதுவரையில் உள்ள குறைக்கப்பட்ட பென்ஷன் வாங்குபவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படுவதில்லை.  இடைக்கால நிவாரணமாக குறைந்த பட்ச பென்ஷனாக ரூ.3000/= மும். பஞ்சப் படியுடன் கூடிய பென்ஷனை அமல்படுத்த வும் தொழிலாளி செலுத்துவது போன்று 8.33% பங்களிப்பை ஒன்றிய அரசு செலுத்தவும் தொடர்ந்து பென்ஷன் அமைப்புகள் போராடி வருகின்றன. 

நமது தமிழகத்தை சார்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டங்க ளில் இபிஎஸ் பென்ஷனர்களின்  குறைந்த பட்ச பென்ஷன் உயர்வு உட்பட  பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்திட பல முறை ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள் ளார்கள். அதன் அடிப்படையில் ஒன்றிய அரசு இபிஎஸ் பென்ஷனர்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு உயர் அதிகார் கண்காணிப்பு கமிட்டி -2018இல் அமைக் கப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரை களை 2019இல் அளித்தது. அதில் குறைந்த பட்ச பென்ஷனை உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அறங்காவலர் குழுவும் (CBT) மத்திய தொழிலாளர் துறை அமைச்சரும் (MOLE) குறைந்தபட்ச பென்ஷனை ரூ.2000 ஆக உயர்த்த 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பரிந்துரை செய்துள்ளனர்.

ஒன்றிய அரசின் சொத்தை வாதம்

இ.பி.எஸ்- 95 திட்டத்தில் தொழிலாளி எந்த பங்களிப்பும் செலுத்துவதில்லை என்று சொத்தை வாதத்தை திரும்பத் திரும்ப கூறி வருகின்றது. உண்மையில் 1952 வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் தொழிலாளி யின் உழைப்பிற்காக அவரது கணக்கில் நிர்வாகத் தரப்பில் செலுத்தப்பட்டு வந்த 12% பங்களிப்பிலிருந்து, பென்ஷன் நிதிக் காக தொழிலாளிக்கு சேர வேண்டிய தொகையிலிருந்து 8.33% மடைமாற்றம் செய்ததால், தொழிலாளி தனது பணி ஓய்வு காலத்தில் பெறும் தொகையில் பல லட்சங்களை இழக்க வேண்டியுள்ளது.

உயர் பென்ஷனும் நீதிமன்ற வழக்குகளும்

ஆர்.சி.குப்தா என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி  பெற்றதை தொடர்ந்து இ.பி.எப் நிர்வா கமே தொழிலாளிகள் மற்றும் பணி ஓய்வு  பெற்றவர்கள், தங்களது சம்பளத்திற்கான 8.33% பங்களிப்பை 1955 நவம்பர் முதல் வட்டியுடன் பி.எப். நிர்வாகம் கணக்கிட்டு தெரிவிக்கும் தொகையைச் செலுத்தி முழு சம்பளத்திற்கு பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம் என்று 23/03/2017இல் சுற்ற றிக்கை வெளியிட்டது. அதன் அடிப்படை யில் இந்தியா முழுவதும் சுமார் 27,000 பேர் மனு செய்து அவர்களுக்கு பி.எப் நிர்வாகம் உயர்த்தப்பட்ட பென்ஷனை வழங்கி வந்தது. அதையும் தற்போது நிறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் வெளியிட்ட சுற்றறிக்கையை 31/05/2017 இ.பி.எப் நிர்வாகம் திரும்பப் பெற்றது. இதனை எதிர்த்து பல்வேறு  அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றங்க ளில் வழங்கு தொடுக்கப்பட்டு அனைத்து உயர் நீதிமன்றங்களும் பென்ஷனர்க ளுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கின. ஆனால் இ.பி.எப் நிர்வாகம் உயர்நீதிமன் றத் தீர்ப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்தது. அதனையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனையும் ஏற்க மறுத்த இ.பி.எப் மற்றும் ஒன்றிய அரசும் இணைந்து உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது 2019 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலவையில் உள்ளது.

2014 கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் ஏமாற்றங்களும்

2014 இல் இ.பி.எஸ் திட்டத்தில் பென்ஷன் பங்களிப்புக்கான சம்பள உச்ச வரம்பை ரூ.6500/-லிருந்து ரூ.15000/- ஆக உயர்த்தியது. இதன் மூலம் இ.பி.எப்க்கு வருவாயை அதிகரித்தும் கொண்டது. ஆனால் பென்ஷன் சம்பளத்தை கணக்கி டும் போது முன்பிருந்த 12 மாத சரசாரிச் சம்பளம் என்பதை 60 மாத சராசரிச் சம்ப ளம் என்று மாற்றியமைத்து பென்ஷன் தொகையை குறைக்கும் நடவடிக்கை களை மேற்கொண்டது. பென்ஷன் கணக்கிடும் காலத்தையும் 3 பிரிவுகளாக பிரித்து அதன் மூலம் பென்ஷன் தொகை குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவுகளை எதிர்த்து பென்ஷனர்கள் தொடுத்த வழக்கில் கேரள உயர்நீதி மன்றம், ஒன்றிய அரசு 2014இல் கொண்டு வந்த இந்த திருத்தங்களை ரத்து செய்து  தீர்ப்பு வழங்கியது.  

தமிழக அரசிற்கு வேண்டுகோள்

இ.பி.எஸ் பென்ஷனர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷனை ரூ.9000 ஆக உயர்த்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றவும், கேரள மாநிலத்திலும் பாண்டிச்சேரியிலும் உள்ளது போன்று இ.பி.எஸ் பென்ஷனர்களுக்கு மாநில அரசு வழங்கும் முதியோர் பென் ஷன் தொகையையும் சேர்த்து கேரள அரசு வழங்குவது போன்று இ.பி.எஸ்.பென்ஷ னர்களுக்கு கூடுதலாக ரூ.1600 வழங்கிட வும், தமிழக அரசின் முதலமைச்சர் மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தில் இ.பி.எஸ்  பென்ஷனர்களையும் அவரது துணைவர்/ துணைவியர் ஆகியோரையும் இணைத் திட வேண்டும்.

கோரிக்கை மாநாட்டின் அறைகூவல்

சமூக நலத்திட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் ஒரு பகுதியா கத்தான் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசின் பங்களிப்பை அதிகரிக்கா மல், தொழிலாளியின் பங்களிப்பால் மட்டுமே திட்டத்தை உருவாக்கியது. இதன் தொடர்ச்சிதான் ஒன்றிய அரசு ஊழியர்களு க்கு 2004 முதல் அறிமுகப்படுத்திய புதிய பென்ஷன் திட்டம்.  அதற்கும் மேலாக, தற்போதுள்ள வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள நிதியை பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வது என்றும், வருங்கால வைப்பு நிதி யின் மூலதனத்திலிருந்து 10 லட்சம் கோடியை தனி நிதியாக மாற்றியமைக்க கடந்த 2019இல்  முயற்சி செய்தது. இ.பி.எஸ் திட்டத்தில் 2014இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில்  புதியதாக பணியில் சேர் பவர்களில் ரூ.15000/=க்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு வருங்கால வைப்புநிதி  பிடித்தம் செய்யப்படாது என்றும் பென்ஷன் திட்டமும் கிடையாது என்றும் திருத்தங்களைச் செய்துள்ளது. 

ஒன்றிய அரசின் இ.பி.எப் திட்டத் தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை முறி யடித்து இ.பி.எஃப்-ஐ பாதுகாக்க பென்ஷ னர்களும் இன்றையதினம் பணியிலி ருக்கும் தொழிலாளர்களும் இணைந்து போராட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.  அதற்கான முறையில் 08/05/2022  அன்று சென்னையில் கேரள சமாஜம் அரங்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பென்ஷனர்களையும் ஒன்றிணைத்து கோரிக்கை மாநாடு நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு தொழிற்சங்கத் தலை வர்களும், ஓய்வூதிய சங்கங்களின் தலைவர்களும் 500 பிரதிநிதிகளும் பங் கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிட உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து பென்ஷனர்களும், தொழிலா ளிகளும் தங்களது ஆதரவை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கோள்கிறோம்.