articles

img

ஓர் எதேச்சதிகாரியின் ‘தங்க பாரதம்’ கனவு

ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் ஆற்றிய  பதினோராவது சுதந்திரதின உரை அவர் இது வரை ஆற்றிய உரையிலேயே மிகவும் நீண்ட தாகும்; அதே சமயத்தில் தரத்தின் அடிப்படை யில் பார்த்தால்கூட மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியதுமாகும்.    

அவருடைய உரையின் பெரும்பகுதி, தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தில் துவங்கி, கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்னும் திட்டம் வரை கூறியதுடன், எரிசக்தி யைப் புதுப்பித்தல் (renewable energy) என்பதி லிருந்து வங்கித்துறையை வலுப்படுத்துவது உட்பட சீர்திருத்தங்கள் பலவற்றைப் பேசி அவற்றைத் தங்கள் ஆட்சியின் சாதனைகளாக பீற்றிக்கொண்டவை. இவை அனைத்தையும் 2047க்குள் ‘விக்சித் பாரத்’ (புதுமை இந்தியா) ஆகும் என்று தெளிவற்ற பேச்சுடன் இணைத்துள்ளார்.

இவர் கூறியுள்ள சாதனைகள் என்பவ ற்றுக்கு எதார்த்தத்தில் எந்த அடிப்படையும் கிடையாது. உதாரணமாக, எரிசக்தியைப் புதுப்பித்தல் என்பதன் கீழ் அவர், “இந்தியா இந்தத் துறையில் ஜி.20 நாடுகளைவிட அதிக மான அளவில் சாதனைகளை எட்டியிருக் கிறது” என்று கூறியுள்ளார். இதனை அவர் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது எவருக்கும் தெரியாது.

மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப் பேற்றிருக்கிறார், எனவே தன்னுடைய அரசா ங்கம் புதிதாக ஏதாவது அணுகுமுறைகளை அல்லது கொள்கைகளைப் பின்பற்றும் என்று அவர் கூறுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவர் கொடுத்துள்ள ஒரேயொரு உறுதிமொழி என்னவெனில், நாம் அனைவரும் “பாரதத்திற்காக ஒரு பொற்காலத்தை நோக்கி” தலைமையேற்று சென்று கொண்டிருக்கிறோம் என்பதேயாகும்.

வேலைவாய்ப்பு என்னாயிற்று?

மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது மிகவும் முக்கியமான பிரச்சனைகளில்  ஒன்றாக  இருந்தது வேலைவாய்ப்புகளை உருவாக்கு வது என்பதாகும். இது தொடர்பாக மோடி பேசுகையில்,  “இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகள் அவர்களின் வீட்டு வாசல்களில் உள்ளன” என்று பிரகடனம் செய்தி ருக்கிறார். ஆனால், அந்த வேலைவாய்ப்புகள் என்ன என்பதை அவர் குறிப்பிடவே இல்லை.

மோடி அரசாங்கம் செய்திட்ட ஒரேயொரு விஷயம், ஒன்றிய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டங்களை (employ ment-linked incentive schemes) அறிவித் திருப்பதுதான். இந்தத் திட்டங்கள் பொது கரு வூலத்தின் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை மானியத்துடன் ஓராண்டிற்கு 500 முன்னணி நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. தொழி லாளர்கள் ஓராண்டுக்கு மட்டும் இவற்றில் பயிற்சி (internship) என்ற பெயரில் வேலை செய்வார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிற வர்கள் ஓராண்டுக்கு மட்டுமே வேலை செய்வார்கள். பின்னர் அவர்கள் கழற்றிவிடப் பட்டு புதிதாக ஆட்கள் சேர்க்கப்படுவார்கள். இதனால் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த வகையிலும் தீராது.

உற்பத்தித் துறையின் கதி என்ன?

வேலைவாய்ப்பு தொடர்பாக மோடி கூறிய மற்றொரு கூற்று, வேலையின்மைக்குத் தீர்வு  காண  உற்பத்தித் துறை முக்கியமானது (manu facturing sector) என்று குறிப்பிட்டுவிட்டு, “இந்தியா ஒரு தொழில்துறை உற்பத்தி மைய மாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று உறுதிமொழி அளித்திருக்கிறார். ஆனால், உற்பத்தித் துறை மற்றும் தொழில் துறை வளர்ச்சியின் சாதனை இந்த விஷ யத்தில் அதிக நம்பிக்கையை அளிக்கக் கூடிய விதத்தில் இல்லை. அரசின் தரவுகளின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில்,  உற்பத்தித் துறை (manufacturing sector)யின் பங்கு 2014 நிதியாண்டில் 15 விழுக்காடாக இருந்தது, இப்போது 2024இல் 13 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2024 ஜூலை 25 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதில் ஒன்றில் இது தொடர்புடைய அமைச்சர், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 50  ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கள் (MSMEs) மூடப்பட்டதன் காரணமாக 3,17,641 வேலைகளை இழந்துள்ளன என்று கூறியிருக்கிறார். எனவே, மோடி “இந்தியா உல களாவிய தொழில்மையமாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று பிதற்றுவது வெற்றுத் தனமானதென்று தெளிவாகவே தெரிகிறது.

ஊழல் எதிர்ப்புப் பாசாங்கு

அடுத்து ஊழலுக்கு எதிராக அவருடைய யுத்தம் குறித்து அவர் பேசியிருப்பதைப் பார்க்க வேண்டுமே! “ஊழல் என் நற்பெயரைக் இழக்க வைத்திருக்கிறது” என்று கூறும் அவர் “ஊழலுக்கு எதிரான போராட்டம் முழு நேர்மையுடனும், வேகத்துடனும் தொடரும்” என்றும் கூறியிருக்கிறார். அவருடைய ஒட்டு மொத்த பேச்சிலும் இதுதான் மிகவும் பாசாங்குத் தனமான கூற்றாகும். கௌதம் அதானி மற்றும் அவரைச் சார்ந்த குழுமங்கள் கார்ப்ப ரேட் ஊழல்கள் மற்றும் சட்ட மீறல்களைச் செய்திருக்கின்றன இந்த கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவற்றைக் காப்பாற்றிட எந்த அளவிற்கு பிரதமர் சென்றுள் ளார் என்பதையும், அதானி குழுமங்களைப் பாதுகாத்திட, ‘செபி’ (SEBI) என்னும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலை வரே உதவிவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் அந்த நபரைப் பாதுகாத்திடவும் மோடி அரசாங்கம் என்னவிதமான தில்லுமுல்லு களையெல்லாம் செய்துகொண்டிருக்கிறது என்பதையும் பார்க்கிறோம். மோடியைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிரான போர் என்பது எதிர்க்கட்சித் தலைவர்களை அம லாக்கத்துறை மற்றும் மத்தியக் குற்றப்புல னாய்வுக் கழகம் போன்றவற்றால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொய் வழக்குகளைப் பதிவு செய்வதும், அவற்றின் மூலமாக அவர்களை வேட்டையாடுவதுமேயாகும்.

ஆர்எஸ்எஸ் செயல்திட்டம்

மோடி பிரதமராகப் பதவியேற்றாலும், மக்களவையில் அவரது கட்சி பெரும்பான்மை யை இழந்த பிறகு, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் முக்கிய நிகழ்ச்சி நிரல் பின்பற்றப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்ட விரும்புகிறார். பாஜக-வின் முக்கிய செயல்திட்டங்கள் மூன்றா கும். முதலாவது அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்தல். இரண்டாவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல். மூன்றாவது நாட்டில் கடந்த 75 ஆண்டுகளாக மதங்களின் அடிப்படையில் இருந்துவரும் சிவில் சட்டத்தை பொது சிவில் சட்டமாக மாற்றுதல். முதல் இரண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவதைக் கையிலெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு இவர் வைத்துள்ள பெயர் ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ (secular civil code) என்பதாகும்.

ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் பொதுசிவில் சட்டம் கொண்டுவர விரும்புவது என்பது பல்வேறுபட்ட மதத்தினருக்கும் பாலின சமத்துவம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அல்ல; இதற்கு தனிநபர் சட்டங்களில் (personal laws) முதற்கண் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. மாறாக அவர்கள் கொண்டுவர விரும்பும் ஒரேசீரான சிவில் சட்டம், முஸ்லீம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குவதற்கேயாகும்.

உறுதியுடன் எதிர்ப்போம்!

பாஜக அரசாங்கமானது, பழங்குடியின ருக்கான தனிநபர் சட்டங்கள் பொது சிவில்  சட்டத்தின் வரையறைக்கு வெளியேதான் இருக்கிறது என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. உத்தர்கண்ட் மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டத்தில் காணப்படும் ஷரத்துகள் பெண்களின் பாலியல்  தன்னுரிமையின் மீது ஏவப்பட்டுள்ள நேரடி தாக்குதலாகும். பாரம்பரிய பழக்க வழக்கங் களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள குண்டர்படைகள் தங்கள் ரவுடித்தனங்களை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியாக உரிமம் அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய படுபிற்போக்குத்தனமான முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும்.

மக்களவைத் தேர்தல் தீர்ப்பின் படிப்பினைகளை மோடியோ பாஜக-வோ உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பாஜக மக்களவையில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றால் அரசமைப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படை அம்சங்களையும் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளிலும் இறங்கிடும் என்று மக்கள் அஞ்சியதே பாஜக பெரும்பான்மை இடங்களை இழந்ததற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே, மோடி, தன்னுடைய உரையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று மீண்டும் கூறியது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதனைச் செயல்படுத்த வேண்டுமானால் இப்போதுள்ள அரசமைப்புச் சட்டத்திலும், பல்வேறு சட்டங்களிலும் தொடர்ச்சியாகப் பல திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவற்றை நிறைவேற்றக்கூடிய அள விற்கு பாஜக-விற்கும் அதன் கூட்டணிக் கட்சி களுக்கும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலை யில், அவற்றை அவர்களால் நிறைவேற்றிட முடியாது. எனினும்கூட, மோடி, ‘தங்க பாரதம்’ (‘Golden Bharat’) என்று கனவு காண்பது அவ ருடைய இந்துத்துவா எதேச்சதிகார மனோ நிலையைப் பிரதிபலிக்கிறதே தவிர வேறல்ல.

ஆகஸ்ட் 21, 2024 
தமிழில்: ச.வீரமணி