இன்றைய ஒன்றிய ஆட்சி யாளர்களைப் பொறுத்தவரை யிலும், மிகப்பெரிய அளவில் பேரிடர் நிகழ்ச்சிகள் ஏற்பட்டால் ஒழிய, அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இவர்கள் புவியி யலின்கீழ் சுற்றுச்சூழல் அல்லது சமூக நிலை மைகளைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப் படாது, கண்ணை மூடிக்கொண்டு கட்டி டங்களைக் கட்டிக்கொண்டு செல்வது, முன் னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது என்பதை அறியாதவர்கள் ஆவார்கள். இமயமலை யின் அடிவாரத்தில் உள்ள பத்ரிநாத் சன்ன திக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள புனித நகரமாகக் கருதப்படும் ஜோஷி மத்தில் ஏற்பட்டுள்ள துயர சம்பவங்கள் இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாகும். உத்தர்கண்ட் மாநிலத்தில் இமயலையில் வகைதொகையின்றி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களும், நகர்மயமாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு வசதிகளும் மலைகளைச் சிதறடித்துத் தகர்த்துக் கொண்டிருக்கின்றன. இமாசலப் பிரதேசத்திலும், ஜார்கண்டிலும் இமயமலை யின் மேற்குப் பகுதியில் மனிதர்களால் ஏற் படுத்தப்பட்டு வரும் கட்டுமானப்பணி கள்தான், இந்தப்பகுதிகளில் அதீத மழை பெய்வதற்கும், நிலச்சரிவுகள் முதலானவை ஏற்படுவதற்கும் காரணங்களாகும்.
ஆறாயிரம் அடி உயரத்தில் உள்ள ஜோஷிமத் நகரம், பெருமளவில் ஏற் பட்டுள்ள நிலச் சரிவுகளால், சாலைகளிலும், கட்டிடங்களிலும் மற்றும் பல உள்கட்ட மைப்பு வசதிகளிலும் கடும் சேதங்கள் ஏற் பட்டு, நகரத்தின் நான்கில் ஒரு பங்கு அளவிற்குக் கடும் பாதிப்புகள் ஏற்பட்டி ருக்கிறது. நகரத்தின் நான்கு மண்ட லங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டதன் விளைவாக இதுவரை 720 வீடுகளுக்கும் அதிகமாகவும், குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்கள் உட்பட 89 கட்டிடங்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், மக்கள் வசிக்கப் பாதுகாப்பற்றவைகளாக மாறியிருப்பதால் அவற்றை உடனடியாக இடித்துவிட வேண்டும் என்றும் மதிப்பி டப்பட்டிருக்கிறது.
எச்சரிக்கைகளுக்கு காது கொடுக்காததால்
நூற்றுக்கணக்கானவர்கள் பாது காப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். மேலும் பலர் இவ்வாறு அப்புறப்படுத்தப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில், பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கள் நக ரங்கள் இடிக்கப்படுவதை கண்டு ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கே நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளி னால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட, மாநில, ஒன்றிய ஆட்சியாளர்க ளைத் தொடர்ந்து பலமுறை இதற்குமுன் எச்சரித்து வந்தவர்கள். அவற்றை எவரும் காதுகொடுத்துக் கேட்காது இப்போது இந்த மோசமான நிலையை உருவாக்கியி ருப்பதால் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். இப்போது இவ்வாறு அழிவு ஏற்பட்டி ருக்கும் நிலையில் அதிலும் ஆதாயம் அடையக்கூடிய விதத்தில் ஒப்பந்தக்காரர்க ளும், வர்த்தக நிறுவனங்களும் இறங்கியி ருக்கின்றன. பாதிப்புகளுக்கு ஆளான குடும்பங்களுக்குத் தற்காலிகப் புகலிடங்க ளை உடனடியாக அமைத்துத் தரக்கூடிய விதத்தில் தற்போது ஆட்சியாளர்களின் அணுகுமுறை இருந்து வருகிறது. ஜோஷிமத் பேரழிவுக்கு ஆளாகியுள்ள மக்க ளுக்கு முழுமையாகப் புனர்வாழ்வு அளிக் கப்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு களை உடனடியாக வழங்கிட வேண்டும். இழப்பீடுகளுக்காக அவர்களை நீண்ட நாட்கள் காக்க வைக்கக் கூடாது. எனினும், மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் அதன் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமைகளையும் நன்கு ஆய்வு செய்தபின்னரே, அப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், நீர்மின் திட்டங்க ளை ஏற்படுத்துல் மற்றும் நகர்மயப் பணிக ளுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிட வேண்டும்.
நிலைத் தன்மையற்ற மண், பனிப்பாறை இயக்கம்
தற்போதைய மாநில மற்றும் ஒன்றிய ஆட்சியாளர்கள் ஜோஷிமத் பேரழிவுக்குப் பின்னர் உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான முடிவுகளை மேற் கொண்டுள்ள அதே சமயத்தில், இமயமலை புவியியல் குறித்தும் அங்கே அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆபத்து அடையாளங்கள் குறித்தும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்தியப் புவியியல் ஆய்வு மையம், தேசிய நீர்வள இயல் ஆய்வகம் மற்றும் இமயமலைப் புவியியல் தொடர்பான வாடியா நிலையம் முதலானவை அதிக ரித்துவரும் இந்தப் பகுதியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்துப் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்துள்ள போதிலும், அவற்றையெல்லாம் மாநில அர சாங்கமும், ஒன்றிய அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் உதாசினம் செய்துள்ளன. இந்நிறுவனங்களின் ஆய்வறிக்கைகளும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மாநில அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற எம்.சி.மிஸ்ரா தலைமையிலான உயர் நிலைக் குழுவினரால் அளிக்கப்பட்ட அறிக்கை, மற்றும் பல வல்லுநர்களின் அறிக் கைகள் இந்தப் பகுதியில் பெரிய அள விற்குக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வ தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நில அதிர்வுகள் குறித்தும் அடிக்கோடிட்டுக் கூறி யிருக்கின்றன.
இந்த வல்லுநர்கள் அறிக்கைகள் அனைத்துமே இந்தப் பகுதியில் உள்ள மண், நிலைத் தன்மையற்ற மண் (unstable soil) என்றும் மிகவும் பலவீனமான ஒன்று என்றும், இங்கே ஏற்படும் பனிப்பாறை இயக்கமும், நிலச் சரிவுகளும் அடிக்கடி ஏற் படுமாதலால், இந்தப் பகுதியில் பெரிய கட்டி டங்கள் கட்டுவது ஆபத்து என்று சுட்டிக் காட்டி இருக்கின்றன. எனினும், இவற்றை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இங்கே மக்கள் குடியிருப்புகள் அதிகமாயின, சுற்று லாப் பயணிகளின் வரத்தும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
நிலச்சரிவு மண்டலம்-V
இந்தப் பகுதி, நிலச்சரிவு ஏற்படும் மண்ட லம்-5 (seismic zone-V) என வகைப் படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இங்கே பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உயர் மட்டத்தில் இருக்கிறது. எனினும் இதனை யெல்லாம் பொருட்படுத்தாமல் இங்கே பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப் பட்டிருக்கின்றன, மலையைக் குடைந்து சுரங் கப்பாதைகளும் போடப்பட்டன. கட்டுமா னப் பணிகள் மிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக, பல இடங்களில் இயற்கை வடி கால் அமைப்புகளில் அடைப்பு ஏற்பட்ட தால், அதுவும் நிலத்தின் உறுதியற்ற தன் மைக்கும், நிலச்சரிவுகள் அதிகமாக ஏற்படு வதற்கும் காரணங்களாக அமைந்தன. இவற்றின் விளைவாக, ஜோஷிமத் பகுதி, ஒவ்வோராண்டும் 6.5 செண்டிமீட்டர் விகி தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று செயற்கைக்கோள் தரவுகள் வெளிப்படுத்தி யிருக்கின்றன.
உண்மை நிலைமைகள் இவ்வாறி ருக்கக்கூடிய அதே சமயத்தில் இவற்றை யெல்லாம் கண்டுகொள்ளாமல், உத்தர் கண்ட் மாநில பாஜக அரசாங்கத்தின் முதல மைச்சர், புஷ்கர் சிங் தாமி, இங்கே ஏற்பட்ட பேரழிவு, “இயற்கையான பேரழிவு” என்று சித்தரித்திருக்கிறார். தேசிய அனல் மின் நிறுவனத்தின் சார்பில் ஓடும் தபோவன்-விஷ்ணுகார் ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்தை அமைப்பதற்காக, ஜோஷிமத்-பத்ரிநாத் நெடுஞ்சாலையிலும், நகரத்தின் மிகவும் நெருக்கமான பகுதியிலும் சுரங்கப் பாதைப் பணிகளை மேற்கொண்டது. மக்கள் இதற்கெதிராகக் கடுங் கோபத்துடன் கிளர்ந்தெழுந்ததை அடுத்து, இந்தப் பணி கள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கின்றன.
தடையிருந்தும் வெடி வைப்பு
இந்தப் பகுதியில் வெடிகுண்டுகள் மூலம் மலைகளைத் தகர்க்கும் பணிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், கட்டுமா னப் பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்க ளில் “வெடிகுண்டுகள் வெடிக்கும், எச்ச ரிக்கை” என அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை மக்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். இப்போதும்கூட, கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யிலும், இந்தப் பகுதியில் ஒருவிதமான கட்டுமான நடவடிக்கை நடந்து கொண்டி ருப்பதை, தொலைக்காட்சி அலைவரிசை கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. ஏனெனில் இவற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் நிர்வாக ஏற்பாடு எதுவும் இல்லை.
இவ்வாறு இந்தப் பகுதியில் கட்டுமா னப் பணிகளை முறைப்படுத்தி, அமல் படுத்தும் விதத்தில் எவ்விதமான நிர்வாக ஏற்பாடும் முற்றிலுமாக இல்லை. பெரிய அளவிலான மதஞ்சார்ந்த இடங்களை இணைத்திடும், புகழ்பெற்ற சார் தாம் நான்கு வழி நெடுஞ்சாலையை இணைத்திட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதன் காரணமாகக் கட்டப்பட்டுவரும் வேலை களை ஒழுங்குபடுத்திட எவ்விதக் கட்டுப் பாடும் விதிக்கப்பட வில்லை. எப்படியா வது சாலை அமைக்கப்பட்டாக வேண்டும் என்கிற வெறித்தனத்திற்கு, ஜோஷிமத் இன்று காவு கொடுக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது.
ருத்ரபிரயாக் நகரிலும்
வரவிருக்கும் நாட்களில் ஜோஷிமத் நகரத்தின் இதர பகுதிகளும் பாதிக்கப் படும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள இதர நகரங்களும் இவ்வாறு ஊறுபடத்தக்கவை களேயாகும். இந்தப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ருத்ர பிரயாக் நகரத்திலும் வீடு களிலும் பல்வேறு கட்டிடங்களிலும் பெரிய அளவிற்கு விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருக் கின்றன. இப்போது ஜோஷிமத் பேரழிவு தொடர் பாக பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப் பட்டு வருகின்றபோதிலும், இமயமலையின் மேற்குப் பிராந்தியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அங்கே மேற் கொள்ளப்பட்டுவரும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஓர் ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது தெளிவாகி இருக்கிறது. அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிக ளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தி டும் விதத்திலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படா விதத்திலும், நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஜனவரி 11, 2023,
தமிழில்: ச.வீரமணி