articles

img

முழு வீச்சில் களமிறங்குவீர்! - தபன் சென்

வீரஞ்செறிந்த  விவசாயிகள் போராட்டம் தொழி லாளர் வர்க்கத்தின் உறுதியான, செயலூக்க முள்ள ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்து,  வரலாறு படைத்து, ஓராண்டு நிறைவடைந்த பின்னர், பிடிவாதமாக இருந்து வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியை படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ள பின்னணியில், இப்போது மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையும், சுயேச்சையான துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்புகளும் இணைந்து, மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நாசகரமான தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக, “மக்களைக் காப்பாற்றுவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அனைத்து மக்களுக்கும்  மார்ச் 28-29 – இரு நாள் அகில இந்தய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கின்றன.

விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகிய நாட்டின் பிரதான இரு உற்பத்தி வர்க்கங்களும் இணைந்து, இவ்வாறு அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவ்வேலை நிறுத்தத்தின் நோக்கம், நாட்டை ஆட்சி செய்துவரும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான எதேச் சதிகார சக்திகள் நாட்டின் பொருளாதாரத்தையே விரல் விட்டு எண்ணக்கூடிய அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஏலம் விடும் நாசகர, தேச  விரோதக் கொள்கைக்கு எதிராகவும், ஆட்சியா ளர்களே, நாட்டின் கஜானாவையும் மக்களின் சொத்துக் களையும் கொள்ளையடித்துக் கொண்டிருப்ப தற்கு எதிராகவும் இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவர்களின் ஆட்சி யில் உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு, அல்லாடிக்கொண்டிருக்கின் றனர். இதற்கு எதிராகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் இந்த வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

விரிவடைந்து கொண்டிருக்கும் ஒன்றுபட்ட மேடை

இப்போது நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தமானது, நாட்டில், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கை 1991இல் அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டபின், இக்கொள் கைக்கு எதிராக நடைபெறும் 21ஆவது வேலை நிறுத்த மாகும். கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவந்த போராட்டங்களின்போது, ஒவ்வொரு வேலை நிறுத்தத் தின்போதும் ஸ்தாபனரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், அவ்வாறு அணிதிரட்டப்படாத முறைசாராத் தொழிலாளர்களும் முந்தைய வேலைநிறுத்தத்தைவிட அடுத்த வேலைநிறுத்தத்தில் கூடுதலாகப் பங்கேற்று வருகின்றனர். மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை விரிவடைந்து, வலுப்பட்டு, இறுதியாக அனைத்து பெரிய மத்தியத் தொழிற்சங்கங்களையும் 2009இல் ஒரே மேடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அதன் அங்க மாக இருந்துவந்த தொழிற்சங்கமான பிஎம்எஸ், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், அது எவ்விதத் தாக்கத்தை யும் ஏற்படுத்திடவில்லை. மாறாக, பாதுகாப்புத்துறை (Defence Sector) போன்று துறைவாரி சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளின்போது, அவற்றில் அங்கம் வகித்திடும் பிஎம்எஸ் சங்கங்களும் பங்கேற்பது தொடர்கிறது.

மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடை விரிவடைந்துகொண்டிருப்பது மற்றுமொரு முக்கிய அம்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை என்பது மத்தியத் தொழிற்சங்கங்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக அது மேலும் மேலும் அநேகமாக அகில இந்திய அளவில் சுயேச்சையாக செயல்பட்டு வரும் நிறுவனங்களான அகில இந்திய அரசு ஊழியர்களின் சம்மேளனங்கள், கூட்டமைப்புகள், சங்கங்களையும் தழுவிக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள், அனைத்து மாநில அரசு ஊழியர்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டெலிகாம், பாதுகாப்பு முதலான அனைத்துத்தரப்பு ஊழியர்களும் இச்சங் கங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை விரி வடைந்துகொண்டிருப்பது தொடர்கிற அதே சமயத் தில், ஒவ்வொரு துறையிலும் மற்றும் பணிபுரியும் மட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கிடையேயும் ஒன்று பட்ட மேடைகள் உருவாகி, நடவடிக்கைகளில் இறங்கு வது என்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் இதுநாள்வரை எந்த சங்கத்திலும் இணை யாத தொழிலாளர்களும் பெரிய அளவில் பங்கேற்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தொழிலா ளர் வர்க்க இயக்கம் அடித்தட்டு உழைக்கும் மக்க ளையும்  விரிவாகவும் ஆழமாகவும் ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது.

உணர்வுமட்டம் உயர்கிறது இயக்கம் விரிவடைகிறது

இன்றைய வரலாற்றுப் பின்னணியில், மற்று மொரு பிரச்சனையையும் ஆழமானமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஆட்சி யாளர்கள் பின்பற்றத் தொடங்கியதிலிருந்தே அதற்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக, செங்கொடி யின்கீழ் இயங்கிடும் இயக்கங்கள் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கிளர்ச்சி நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன. நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு எதிராக ஆவேசத்துடன் தொழி லாளர்கள் பங்கேற்பதும் அதிக அளவில் இருந்தது. செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், படுபிற் போக்கான நவீன தாராளமயக் கொள்கைகளின் விளை வுகளையும் அதன் அரசியலையும் தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி வந்தபோதிலும், ஆரம்ப காலங்க ளில் தொழிலாளர்களின் எதிர்ப்பை இதனை அமல் படுத்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திருப்புவதில் தொழிற்சங்க இயக்கம் அவ்வளவாக முன்னேறி யதாகக் கூறுவதற்கில்லை. தொழிலாளர்கள் தற்போது அவதிக்குள்ளாகி இருப்பதற்கான மூலகாரணமே இந் நவீன தாராளமயக் கொள்கைதான் என்பதைத் தொழி லாளர்கள் மத்தியில் புரிய வைப்பதில் பெரிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆனால், கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, துறைவாரியாகவும், தேசிய அளவிலும் எண்ணற்றக் கூட்டுப் போராட்டங்களை நடத்திய பின்பு, இவற்றின் விளைவுகள் வீண் போகவில்லை என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆட்சி யாளர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், இத்த கைய அரசியலைப் பின்பற்றும் கயவர்களுக்கு எதிராக வும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்து வது ஒரு தொடர் நடவடிக்கையாகும்.

முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில், அதன் கடும் பாதிப்புகள் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ள பின்னணியில், தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான தலையீடுகள் படிப்படியாக சமூகத்தின் இதர பிரிவினரையும் போராட்டப் பாதைக்கு இழுத்து வர உதவியிருக்கிறது, அவர்களும் தங்கள் குரலை உயர்த்தி, ஒன்றுபட்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

விவசாய நெருக்கடி கடுமையான நிலைக்குச் சென்ற பின்னணியில் விவசாயிகள் போராட்டங்களும் தொடங்கி, அவை படிப்படியாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, அதன்மூலம் அவை நவீன தாராளமயத்திற்கு எதி ரான போராட்டமாகவும் படிப்படியாக உயர்ந்தது. இந்த செயல்முறை,  மக்களின் அனைத்து துன்பதுயரங்களுக் கும் ஆட்சியாளர்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளும், அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும்தான் என்பதை அடையாளம் காட்டுவதற்கான தலத்தைத் தொழி லாளர் வர்க்கத்திற்குத் தயாரித்துத் தந்துள்ளது.  

ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு தொடங்குகையில், குறிப்பாக, இரண்டு தனித்துவ மான அம்சங்கள், வெளியே தெரியத் தொடங்கின. ஒரு பக்கத்தில், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடி அதன் திவால்தன்மையை வெளிச்சத்தி ற்குக் கொண்டுவரத் தொடங்கியது. மறுபக்கத்தில், முதலாளித்துவ வர்க்கம் மக்களைப் பெரிய அளவில் துன்ப துயரங்களுக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கை களை விரைவுபடுத்தி, அதன் கொடூரமான காட்டு மிராண்டித்தனமான குணத்தை  அம்பலப்படுத்தியி ருக்கிறது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்தபின்னர், குறிப்பாக அதன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் உச்சத்திற்கே சென்றுள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இப்போது அதன் கொள்கைக்கும் அதனை உந்தித்தள்ளும் ஆட்சியாளர்களுக்கும் இடையே யுள்ள  நச்சுப் பிணைப்பின் கோர முகத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிற அளவுக்கு முன்பு தெரிந்து கொள்ளவில்லை.

நாடு தற்போது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வா தாரங்களின் மீது எதேச்சதிகாரத்தின் மிகவும் மோச மான தாக்குதல்கள் ஏவப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காலம் ஆள்வோரின் மனிதாபிமானமற்ற குரூர முகத்தை அதன் அனைத்துக் கோரப் பற்களுடனும் நகங்களுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறது. கொரோ னா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களையும், கையறு நிலையையும் பயன்படுத்திக்கொண்டும், தங்களுடைய பொருளா தாரக் கொள்கையின் மோசமான அம்சங்களை மறைக்க வேண்டுமென்று முயற்சிக்கக்கூட எண்ணா மல், மிகவும் வெட்கமற்ற முறையில், எதேச்சதிகார முறையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை ஒழித்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் கார்ப்பரேட் வர்க்கத்தின் லாப வெறியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் விவசாயத்தைக் கொண்டு வருவதற்காகக் கொண்டுவரப்பட்டது. வேளாண் சட்டங்கள் நிறைவேறியிருந்தால் அவை உணவுப் பாதுகாப்புக்கு மேலும் ஆபத்தைக் கொண்டுவந்து, ஏற்கனவே பசி-பட்டினிக்கு ஆளாகியிருக்கும் மக்களை யும் நாட்டின் தற்சார்பையும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும்.

தொடர்ச்சி... நாளை