செப்டம்பர் 17ஆம் நாள். இந்த தினத்திற்கு இயல்பாக ஒரு பெருமை உண்டு. அது தந்தை பெரியாரின் பிறந்த தினம். அந்த தினத்திற்கு மற்றொரு சரித்திரப் பெருமை யையும் சேர்த்தன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும். 2007 ஆம் ஆண்டு இதே தினத்தில் விருதுநகர் தேச பந்து மைதானத்தில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டி ருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திறந்த வெளி மேடை. மேடையின் உச்சியில் போர்க்களம் புகும்புரவி போல ஆர்ப்பரித்துப் பறந்து கொண்டி ருந்தது உதிரச் செங்கொடி. உலகத் தொழிலாளர்க ளே ஒன்று சேருங்கள் என்று அறைகூவி அழைக்கிற கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மேடை “தலித் அருந்த தியர் வாழ்வுரிமை மாநாடு” என்கிற வாசகத்தைத் தாங்கி நின்றது.
செங்கொடியின் நிழலில்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த அனு பவத்தில் இருந்து உருவாக்கிய முழக்கம் இது. 2003 அக்டோபர் 2ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சியின் முன்னெடுப்பில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு. விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா பங்கேற்றார். இம்மாநாட்டிற்கு அழைப்பதற்காக நேரடி யாக மக்களுடன் உரையாடுகிற மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தினோம். இச் சந்திப்பில் மக்கள் தொகையில் மிகுந்திருக்கிற பட்டியலினத்தின் மூன்று பிரதான பிரிவுகளான தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர், அருந்ததியர் ஆகிய பகுதிகளில் வெவ்வேறு விதமான வெளிப்பாடுகளைக் கண்டோம்.
மூன்று தரப்புமே உணர்ச்சிப்பூர்வமாக ஆத ரித்தார்கள், தலித் அருந்ததியர்களோ அருகில் வந்து ஆரத்தழுவிக் கொண்டார்கள். திரும்பும் திசை எங்கும் தீண்டாமைக் கொடுமையின் வெக்கையில் துடித்துக் கொண்டிருந்த வர்கள் செங்கொடியின் நிழலில் இளைப்பாறுதல் தேடுவதை உணர முடிந்தது.
ஏக்கப் பெருமூச்சு!
2003 இல் துவங்கிய அருந்ததியர் பிரச்சனைக்கான தனித்த போராட்டம் என்கிற சிந்தனை, 2007 செப்டம் பர் 17 ஆம் நாள் செயல்வடிவம் பெற்றது. அன்று மாலை மாநாடு துவங்குவதற்கு முன்பாக தோழர்.கு. ஜக்கை யன் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இயங்கி வந்த தமிழ்நாடு அருந்ததியர் ஒருங்கிணை ப்பு குழுவின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராஜன், பி.சம்பத், எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன், கே.பாலபாரதி மற்றும் விருதுநகர் மாவட்டத் தலைவர்களையும் சந்தித்து தமது நன்றியைத் தெரி வித்தார்கள். கால் நூற்றாண்டு காலமாக இக்கோரிக் கையை முன்னெடுத்து வந்த அருந்ததிய இயக்கங்க ளின் தொடர்புகளும் பலப்பட்டன.
சாதிக் கொடுமை, இரக்கமற்ற வன்கொடுமைகள் மட்டுமல்லாமல்; கண் முன்னே முன்னேறிச் சென்று கொண்டிருக்கிற இந்திய சமூகத்தில் எனக்குரிய இடம் எங்கே என்கிற அருந்ததியர் மக்களின் ஏக்கப் பெருமூச்சு விருதுநகர் மாநாட்டில் வெளிப்பட்டது. அந்த ஏக்கத்தை, விடுதலையின் தாகத்தை உழைக்கும் மக்களின் இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்வாங்கி, வடிவமைத்து தமிழ்ச் சமூ கத்தின் மனசாட்சியோடு உரையாடியது.
ரத்தமும் சதையுமான உதாரணம்
“மக்களிடமிருந்து மக்கள் திரளுக்கு” என்பாரே தோழர் மாவோ, அதன் ரத்தமும் சதையுமான உதார ணம்தான் இந்த அணிவகுப்பு. ஏப்ரல் 29 என்கிற சரித்திரம் விருதுநகரில் ஒலித்த உரிமைக் குரலை திண்டுக்கல், திருநெல்வேலி, சாயல்குடி, அவிநாசி, சங்ககிரி, ஈரோடு என மாவட்டம் தோறும்; புதுச்சேரி மாநிலத்திலும் முழங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இத்தனை மாநாடுகளின் முகப்பிலும் இருந்த ஒரே முழக்கம் ‘அருந்ததியர் வாழ்வுரிமை மாநாடு’ என்பதே. இந்த திட்டமிட்ட முயற்சிகள் வழியாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உள் ஒதுக்கீட்டுக் குரல் தமிழ்நாட்டு அரசியல் அரங்கின் மையத்தை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நகர்த்தப் பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராஜன் அவர்கள் இந்த எழுச்சியின் முகமாக இருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சொந்தக் கோரிக்கையாக இம் முழக்கம் மாறியது.இதன் தொடர்ச்சியாகவே ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008ஜூன் 12-ல் தலைநகர் சென்னை யில் பேரணி. கால் லட்சம் பேர் பங்கேற்ற வரலாற்றின் அழிக்க முடியாத சாட்சியாக இப்பேரணி அமைந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றைக் கோரிக்கைக் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மகத்தான சமூகநீதிப் படையெடுப்பு இப்பேரணி.
வீதிகளின் அதிர்வை கோட்டை அறிந்து கொண்டது; மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அருந்ததியர் இயக்கத் தலைவர்கள் இரா. அதியமான், கு.ஜக்கையன் ஆகியோரும் முதல்வருட னான சந்திப்பில் உடன் இருந்தனர். இச் சந்திப்பு கோரிக்கை மீதான கூர் கவனத்தை அரசிடமும், பொது வெளியிலும் ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதனையே மன்றத்திலும் முழங்கினார்கள்.
19 மாதங்களில்...
இத்தனைக்கு மேலும் 2008இன் இறுதியிலும், 2009 ன் துவக்கத்திலும் இயக்கங்கள் நடைபெற்றன.
மறியல் போரில் பங்கேற்று கட்சியின் தலை வர்கள் என்.வரதராஜன், ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத் உள்ளிட்டோர் வீதிகளில் அமர்ந்து மறியல் செய்தார் கள். காவல்துறை கைது செய்தது. இதன் தொடர்ச்சி யாகவே காரியங்கள் நகர்ந்தன. திரு. ஜனார்த்த னன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு தரவுகள் திரட்டப்பட்டன. அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு கருத்தறியப்பட்டது. வி.சி.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்தன. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் சட்டம் நிறைவேறியது.
2007 செப்டம்பர் முதல் 2009 ஏப்ரல் வரை 19 மாதங்க ளில் வென்றெடுக்கப்பட்ட சரித்திர நிகழ்வு இது. வன் முறைகள் நிகழவில்லை, உயிர்கள் ஏதும் பறி போக வில்லை,
சொத்துகள் அழிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் திறனுக்கு இது ஒரு முன்மாதிரி.
2009 இல் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கிடைத்த போது அடைந்த மகிழ்ச்சியை விட 2024 ஆகஸ்ட் 1 இல் பெற்றிருக்கிற தீர்ப்பு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசனஅமர்வு உள் இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.
ஏன் இடஒதுக்கீடு?
100 ஆண்டுகளைக் கடந்து இத்தேசத்தில் இட ஒதுக்கீட்டு முறை இருக்கிறது. இதன் அடிப்படை என்ன?
“இந்து மதத்தில் சமமான இரு சாதிகள் என்பது இல்லை. சாதி அமைப்புமுறை என்பது ஏணியின் படிகளைப் போன்றது. ஒவ்வொரு சாதிக்கும் மேலான வேறொரு சாதி இருக்கிறது. அவற்றுக்கிடையே மரி யாதை ஏறு வரிசையிலும் அவமதிப்பு இறங்கு வரிசை யிலும் இருக்கின்றன” என்கிற அண்ணல் அம்பேத் கரின் அவதானிப்பு இன்றும் கவனம் கொள்ளத் தக்கது அல்லவா!
எந்த அறிவியல் அடிப்படையும் அற்றதாக இருந்தா லும் இன்னும் இந்திய மண்ணில் “ஆசிர்வதிக்கப் பட்ட” சாதிகளும் “சபிக்கப்பட்ட” சாதிகளும் இருக்கத் தானே செய்கிறார்கள்! இந்தியா போன்ற ஒரு தேசத் தில் இட ஒதுக்கீடு ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்வதும், அங்கீகரிப்பதும் அவசியமாகிறது.
இட ஒதுக்கீடு தான் எல்லாவற்றுக்கும் மாற்று என்பதல்ல. ஆனால் ஏற்கெனவே சமத்துவம் நிலவாத சமூகத்தில் எதிர்காலத்தில் சமத்துவத்தை ஏற்படுத்து வதற்கு நிகழ்காலத்தில் அசமத்துவமான ஏற்பாடுகள் அவசியப்படுகின்றன. இதுவே இட ஒதுக்கீடு என்கிற பிரதிநிதித்துவ முறை.
உள் ஒதுக்கீடும் சமூக நீதியா?
இத்தகைய புரிதலோடு தான் தலித் அருந்ததியர் மக்களின் உள் ஒதுக்கீட்டையும் முன்வைக்கிறோம். இது குறித்து 1990 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, “டாக்டர் அம்பேத்கரும் தலித்து களின் எதிர்காலமும்” என்கிற தலைப்பிலான கருத்த ரங்கத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர், பட்டியலின சாதிகளும் படி நிலை அடுக்குகளைக் கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சாதிகளுக்குள்ளும் அதிகமாக அழுந்தப்படும் பிரிவினரின் முன்னேற் றத்திற்கு குறிப்பான ஏற்பாடுகள் தேவை எனக் குறிப்பிட்டார்.
இதற்கான தரவுகளை வேறெங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டிலேயே நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது. இப்போராட்டங்களுக்காக அருந்ததியர் குடியிருப்புகளுக்கு செல்கிற போது இங்கே ஒரு ஆசிரியர் இருக்கிறாரா? அரசு ஊழியர் இருக்கிறாரா? என்கிற கேள்விக்கு அனேகமாக கிடைக்கிற பதில் இல்லை என்பதுதான். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்ந்த துப்புரவு பணி யாளர்களைத் தவிர வேறு ‘அரசு ஊழியர்கள்’ யாரும் இல்லை என்பது நெஞ்சைச் சுடுகிற உண்மை அல்லவா?
உழைப்பாளிகளிலேயே மிகவும் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கிற அடித்தட்டுத் தொழிலாளியின் இந்த அவ லத்தை எத்தனை நாள் சகிப்பது என்கிற வர்க்க உணர்வு தான் இந்த போராட்டத்திலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உந்தித் தள்ளியது.
கே.சாமுவேல்ராஜ்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தலித் அருந்ததியர் உள்ஒதுக்கீடு
உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று மாபெரும் சிறப்பு மாநாடு
ஆகஸ்ட் 29 திண்டுக்கல்
-சிறப்புக் கட்டுரை
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை வலுத்துப்படுத்துவோம்!
தமிழ்நாட்டில் நடைபெறுகிற சாதி ஆணவப்படு கொலைகள் கூட இந்த படிநிலை சாதி வரிசையை பிரதிபலிக்கிறதாகவே இருக்கி றது. பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவ ருக்கும் இடையில் நடைபெறுகிற இணையேற்பில் சில படுகொலைகள் நடைபெறுவதைப் போன்றே பட்டியலினத்தவர்களுக்கிடையே நடைபெறுகிற இணையேற்பிலும் சில படுகொலைகள் நடைபெறு வதும் கசப்பான உண்மையாகவே இருக்கிறது.
தீண்டாமை, வன்கொடுமை ஆகியவற்றால் கொடூரமாக பாதிக்கப்படுகிற பகுதியினர் என்கிற முறையில் பட்டியலினத்தவரிடையே ஒருங்கி ணைப்பு அவசியம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. தலித் என்கிற சொல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் சொல்லாக பிரயோ கிக்கப்பட்டு வந்த காலம் இன்றைக்கு சீர்குலைக்கப் பட்டுள்ளது. சாதியத்தையே மைய அச்சாக வைத்து செயல்படுகிற சங் பரிவாரம், பட்டியலின மக்களை உட்சாதி அடிப்படையில் பிரித்து பகைமைச் சாதிகளாக மாற்றிவருகிறது. இட ஒதுக் கீட்டையே காவு வாங்கும் நோக்கத்துடன் காய் களை நகர்த்தவும் செய்கிறது.
விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், இட ஒதுக்கீட்டு முறை ஒரு நூற்றாண்டு காலம் செயல்பாட்டில் இருக்கிற நிலையிலும் அதன் பயனை ஒடுக்கப்பட்ட பிரிவினரில் ஒரு பகுதியினர் அடைய முடியாமல் போவதும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை பாதிக்கிற ஒன்றாகவே மாறும்.
76 சாதிகளைக் கொண்ட இந்த பட்டியலில் புதிரை வண்ணார் உள்ளிட்ட பல சாதியினர் இன்றைக்கும் கூட தங்களுடைய நியாயமான பங்கைப் முடிய வில்லை. வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்கும் ஆந்திர உள் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் முன்னர் தடை செய்த பின்னணியில், இது குறித்து ஆராய ஒன்றிய அரசு, தில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மெஹ்ரா தலைமையில் அமைத்த தேசிய ஆணையம் இவ்வாறு கூறுகிறது: “ஒருமிப்பு என்ற பெயரில், வகைப்படுத்தி ஒதுக்கீடு வழங்குவதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பானது, சம வாய்ப்புக்கான உரிமையை நிரந்தரமாக குலைத்து விடுவதாக இருந்து விடக்கூடாது.”
மேலும், “தொழில், சாதி ஆச்சார நடைமுறைகள், கிராமங்களின் பௌதீக ரீதியான அமைப்பு முறை முதலியவை பட்டியல் சாதிகள் என்பவை ஒரு மித்த குழுவாக விளங்கவில்லை என்னும் உண்மையை சுட்டிக்காட்டுவனவாக உள்ளன; சாதிப் படிநிலை அடுக்கு பட்டியல் சாதிகளுக்கு இடை யிலும் நடைமுறையில் உள்ளது” என்றும் ஆணை யம் தெளிவுபடுத்துகிறது.
உள் ஒதுக்கீடு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் ஏழு பேர் கொண்ட அந்த அமர்வில் நான்கு நீதிபதிகள் “கிரீமி லேயர்” பற்றிய கருத்துக்களை வெளியிட்டு இருப்பதும் நமது கவனத்திற்குரியது. பட்டியல் சாதியினர் மத்தி யில் கிரீமிலேயரை திணிப்பதை ஏற்க இயலாது. அவை நீதிபதிகளின் கருத்துக்கள் தான் எனினும் அவற்றுக்கு எதிரான கருத்து திரட்டலும் அவசியமா கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு முறைமை நீர்த்துப் போகாமல் இருப்பதையும் உறுதி செய்ய முன் முயற்சிகளை மேற்கொள்ளும்.
இதனைக் கணக்கில் கொண்டு தான் ஒடுக்கப் பட்ட மக்களின் ஒற்றுமையை பாதுகாத்திட முடியும். இவ்வாறே ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான ஒற்று மையைக் கட்டவும்; இரு தரப்பினரும் தொழிலாளர் வர்க்கம் என்பதை இருவரையும் போராட்டங்களில் அணி திரட்டுவதன் மூலமாக ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்தை திரட்டுகிற கடமையையும் நிறைவேற்றுகிறோம்.