articles

img

தமிழ்நாட்டில் வரலாறு காணாத இயற்கைப் பேரிடர்-கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இயற்கைப் பேரிடரிலிருந்து மீண்டு வர ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். செவ்வாயன்று திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டியின் பகுதிகள்: 

தமிழ்நாட்டில் இதுவரை வரலாறு காணாத அள விற்கு இயற்கைப் பேரிடர் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே  நாளில் 45 சென்டிமீட்டர் மழை பெய்துபெரும் பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் சேதத்தை சென்னை சந்தித்துள் ளது. தமிழ்நாடு அரசின் துரிதமான செயல்பாடு காரணமாக வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி யுள்ளார்கள். 

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு கள் துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரு மோசமான நிலை இருந்தது.  சென்னையில் வசிப்பவர்களோடு வெளி மாவட்டங்க ளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நிலை இருந்தது. மக்களி டையே பெரும் பதற்றம் நிலவியது. அரசின் துரித நடவ டிக்கை காரணமாகவே விரைவில் இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியது.

அரசியல் செய்யும் அண்ணாமலை
மத்திய நிபுணர் குழு வந்து சென்னை வெள்ளப் பகுதி களில் ஆய்வுகள் மேற்கொண்டது. தமிழக அரசு சிறப்பாக பேரிடர் மேலாண்மையைக் கையாண்டுள்ளது என்று  பாராட்டி விட்டுச் சென்றார்கள். மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளே இவ்வாறு பாராட்டிச் சென்று இருக்கி றார்கள். ஆனால், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை, அதி காரிகள் பாராட்டிச் சென்றதில் எனக்கு எந்த உடன் பாடும் இல்லை என்று சொல்கிறார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து பார்வையிட்டு, பேரிடர் மேலாண்மையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல் பட்டதாக முதல்வரிடம் பாராட்டி சென்றுள்ளார். ஆனால்  அண்ணாமலை, அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்னதைக் கேட்க மாட்டார்; மத்திய பேரிடர் மேலாண்மை ஆய்வுக் குழு சொல்வதைக் கேட்க மாட்டார்; தான் சொல்வது தான் உண்மை என்று கண்களை மூடிக் கொள்கிறார். தமிழ்நாடு அரசு இந்த வெள்ளத்தை கையாளுவதில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறும் அண்ணாமலை, பேரிட ரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய பாஜக அரசு கொடுக்க வேண்டிய பேரிடர் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?

அதிக மழைப்பொழிவு: ஆய்வு செய்க!
ஒரு மிகப்பெரிய இயற்கைப் பேரிடரை ஒரு மாநில அரசு மட்டும் தனியாக சமாளித்து விட முடியுமா? இத்தகைய சூழ்நிலையில் தென் மாவட்டங்களிலும் தற்போது கன மழையின் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  காயல்பட்டினத்தில் மட்டும் 96 சென்டிமீட்டர் மழை பெய்துள் ளது. இத்தனை சென்டிமீட்டர் மழை பெய்தால் ஏராளமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுமே! எனவே ஒன்றிய அரசு, மாநில அரசு சுற்றுச்சூழல்,வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இதுபோன்று அதிகப்படியான மழை பெய்வ தற்கான காரணம் என்ன ? என்ற ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் 96 சென்டிமீட்டர், 46சென்டி மீட்டர் என்று மழை பெய்வதை போகிற போக்கில் நாம் எச்சரிக்கையின்றி கடந்துவிடமுடியாது. தமிழ்நாடு அரசாங் கம் இதுபோன்று அதிகப்படியான மழை பெய்யும் பொழுது எப்படி சமாளிப்பது என்று நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை பெற வேண்டும்.

நகரங்களுக்கு இடம் பெயரும் கிராம மக்கள்
சென்னை அல்லது தென் மாவட்டங்கள் பற்றி மட்டும் அல்ல; தமிழ்நாட்டின் எந்த மாநகரத்திலும் இதே போன்ற  மழைவெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வோடு,  அந்தந்த மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகமான நகரப் பகுதிகளை கொண்ட மாநிலமாக இருப்பதால் வேலை யில்லாத கிராமப்புற மக்கள் ஏராளமானவர்கள் நகர்ப் புறத்தை நோக்கி வருகிற நிலை உள்ளது. கிராமப்புறங் களில் இருந்து கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் நகர்ப்புறத்து க்கு வந்திருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இப்போது குறைவான மக்கள் தான் வசித்து வருகிறார்கள். நகர்ப் புறத்தை நோக்கி படையெடுக்கும் இந்த மக்களுக்கு அவர்களது குடியிருப்புகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை முறைப்படுத்த வேண்டும். ஏரி, குளங் கள், வாய்க்கால்கள் என எல்லாம் குடியிருப்பு வீடுகளாக மாறும் நிலை உருவாகிறது. இது ஒரு சமூகப் பிரச்சனை என்கிற அளவில் எல்லா மாவட்ட நிர்வாகங்களும், இது போன்ற இடர்ப்பாடுகள் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசிக்க வேண்டும்.

நீர்நிலை கட்டமைப்பை மேம்படுத்துக!
கடந்த காலத்தில் இருந்ததைப் போல, எல்லா மாவட் டங்களிலும் பேரிடர்களை சமாளிப்பதற்காக நீர்நிலைக ளில் வடிகால்களை சிறப்பாக மேம்படுத்த வேண்டும். நமது முன்னோர்கள் அதிகப்படியான நீர்நிலைகளை உரு வாக்கி வேளாண் செழிக்க நடவடிக்கை எடுத்தார்கள். காலப்போக்கில் நாம் அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டோம். இது போன்ற அடிப்படை பிரச்சனைகளை, கட்ட மைப்பை உருவாக்குவதில், பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில் தவற விட்டுள்ளோம். நீர் நிலைகளைப் பராமரிப்பதில், வாய்க்கால்களைப் பராமரிப்பதில், நாம்  அதிக கவனம் செலுத்தி இருந்தால் இன்றைக்கு பெய்தி ருக்கக்கூடிய இந்த அதிகன மழையை நாம் சமாளித்து  இருக்க முடியும். எல்லா நீர்நிலைகளிலும் இப்பொழுது நீரின் கொள்ளளவு நான்கில் ஒரு பங்கு தான் இருக்கிறது. அதனால் நீர்நிலைகள் நிரம்பாமல் தண்ணீர் வெளியேறு கிறது. வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் செல்ல இய லாத நிலை. நீர்நிலைகளில் கூட வீடுகளைக் கட்டி இருக்கி றார்கள். அரசாங்கமே பலநீர்நிலைகளில் தங்கள் அலுவல கங்களை கட்டி இருக்கின்றது. குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன; வேறு இடத்தை  வாங்கி அந்த நிலத்தில் குடிசை மாற்றுவாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு பதிலாக, குளம் காலி யாக இருக்கிறது என்று குளத்தில், ஏரிகளில் கட்டினால் எப்படி நீர் வடியும்? இதன் மூலம் ஒரு சமூக நெருக்கடி உருவாகிறது. இதனை மக்களும் உணர வேண்டும். அர சாங்கமும் இதன் மூலம் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனங்களிலிருந்து வெளியேறும் வன மக்கள்
வனங்கள் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. ஆனால் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக புதிய புதிய ரிசார்ட்டுக்கள் மலைப்பகுதிகளில் கட்டப்படுகின்றன. இத னால் வன மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை.  வனங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நகரங்களில் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கிறார் கள். வனப்பகுதியில் மேலும்மேலும் கட்டுமான பணிகள் உருவாகும் போது அதனை தடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் எதிர் விளைவுகள் தான் உண்டாகும். 

நீர்நிலைகளை ஆக்கிரமித்த பெரும் நிறுவனங்கள்
உண்மையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி யுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு,அவர்கள் வேறு பகுதியில் குடியிருப்பதற்கு உத்தரவாதம் செய்து மாற்று இடம் வழங்க வேண்டும். அப்படி செய்துவிட்டு அவர்க ளை அப்புறப்படுத்தினால் தவறில்லை. ஆனால் சென்னை  போன்ற நகரங்களில் கடலின் கழிமுகப் பகுதியில் கொகஸ் தலை ஆறு, கூவம் ஆறு,அடையாறு, பங்கிங்காம் கால்வாய் போன்ற பகுதிகளில் நீர்நிலைகளில் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் எப்படி பட்டா கிடைத் தது? பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டா வாங்கி பிரம்மாண்டமான கட்டிடங்களை கட்டி இருக்கிறார்கள். அந்த இடங்கள் ஒரு காலத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களாக இருந்தவைகள் தான். அரசியல் செல் வாக்கு மிக்கவர்கள் தங்கள் செல்வாக்கைப்  பயன்படுத்தி முறைகேடாக அந்த நிலத்தில் பட்டா வாங்கி இருக்கி றார்கள். எனவே அவர்களை அங்கிருந்து இப்போது அப்புறப்படுத்த இயலாத நிலை உள்ளது. ஆனால் அதே பகுதியில் வசிக்கும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு  பட்டா கொடுக்கவில்லை. அவர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அரசின் இது போன்ற நடவடிக்கை களால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆனால் வசதி படைத்த பெரிய நிறுவ னங்களை அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஏற்கனவே நீர் நிலைகளாக இருந்த பொழுது முறைகேடாக கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களை யும் ஏன் ரத்துசெய்யக்கூடாது? அந்த பெரிய நிறுவனங்க ளை ஏன் அப்புறப்படுத்த முடியவில்லை? சில நீதி மன்றங்கள் கூட நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளன. 

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை எதற்கு?
சென்னையை சுற்றியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி னால் சில ஆயிரம் கோடி செலவாகும். அதேபோல தமிழ் நாட்டில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை ஆழப்படுத்தி கரைகளை மேம்படுத்துகிற வேலையை ஒருதேசிய அளவிலான வேலையாக செய்ய வேண்டும். அதற்கு ஒன்றிய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு இந்திய நாட்டில் உள்ள முதலாளி களுக்கு 16 லட்சம் கோடிக் கடன்களை தள்ளுபடி செய்கிற போது ஏன் இதுபோன்ற மேம்பாட்டு பணிகளுக்கு நிதி வழங்கக் கூடாது? இது போன்ற மேம்பாட்டு பணிகள் செய்தால் மழைக்காலத்தில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்காது; கோடைகாலத்திலும் மழை நீருக்கு பஞ்சம் இருக்காது. இது போன்ற பணிகளை  ஏன் ஒன்றிய அரசு செய்வதில்லை.தேசிய பேரிடர் முகமை என்று எதற்கு ஒரு துறை வைத்திருக்கிறீர்கள்? அதன்நோக்கம் என்ன? வெள்ளம் வந்தால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கி செல்வது மட்டும் தான் தேசிய பேரிடர் முகாமின் பணியா?

பேரிடர் மேலாண்மை குறித்து சிபிஎம் ஆய்வு
நீர்நிலைகளைப் பாதுகாப்பது, வடிகால்களைப் பராம ரிப்பது போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் நாம் பெரிதாக எதையும் செய்யவில்லை. இது போன்ற பிரச்ச னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இது தொ டர்பாக சில நிபுணர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது. சென்னை வெள்ளப் பிரச்சனை போன்ற பேரிடர்க ளுக்கு மாற்று என்ன செய்யலாம் என்று அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம்.அப்படி ஆய்வு செய்த அறிக் கைகளை மாநில அரசாங்கத்திடம் வழங்க உள்ளோம்.

அதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட  தென் மாவட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாடு அரசாங்கம் மேலும் அக்கறையோடு செயல் பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண் டும் என்றால் ஒன்றிய அரசாங்கம்அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.