articles

img

நூறாண்டுகளுக்கு முன்னர்... ஏரியை மேடுறுத்தி நகர் சமைத்தோம் ! - ராமச்சந்திர வைத்தியநாத்

1688 செப்டம்பர் 29 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நகரைச் சுற்றிலும் பத்து மைல்களுக்குட்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து  உருவான மதராஸ்   கார்ப்பரேஷன் கிழக்கிந்திய கம்பெனியால்  நியமனம் செயப் பட்ட நதானியல் ஹிக்கின்ஸனை முதல்  மேயராகக் கொண்டு செயல்படத் துவங்கியது. 1922ல் ரயத்துவாரி மற்றும் இனாம் கிராமங்கள் 15ஐக் கொண்டதாக 27 சதுர மைல் பரப்பில்  5,22,951 மக்கள் வாழ்ந்து வரக்கூடிய தாக  மதராஸ் நகராட்சி விளங்கியது.    

ராயபுரம், தொண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, துறைமுகம்,  முத்தியால்பேட்டை, கச்சாலே ஸ்வரம், கொத்தவால்  பஜார், அம்மன்  கோவில், ஏழு கிணறு, சௌகார் பேட்டை, பெத்துநாயக்கன் பேட்டை, டிரவெல்யான் பேசின்,  எஸ்ப்ளனேட், பார்க்டவுன், பெரம்பூர், சூளை, புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், கீழ்பாக்கம், நுங்கம் பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவட்டீஸ்வரன் பேட்டை,  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அமீர் மஹால், மீர் சாஹிப் பேட்டை,  ராயப்பேட்டை, மைலாப்பூர் ஆகிய முப்பது வட்டங்களைக் கொண்ட தாகவும் இது விளங்கியது. 

துவக்க காலந்தொட்டு 1801 வரை மேயர் என்பவரே நகரின் தலைமை நிர்வாகியாக இருந்தபோதிலும்,  1801 முதல் 1896 வரை நீதித் துறையைச் சார்ந்தவர்களே இப்பொறுப்பை ஏற்றிருந்தனர். பின்னர் 1886ல் மாற்றம்  உருவாகியது.  தலைமை நிர்வாகி  உறுப்பினர்களால் தேர்ந்தெடுக் கப்பட்டு தலைவர் என்று அழைக்கப் பட்டு வந்தார்.  1933ல் மீண்டும் மாற்றம்.  பழையபடி மேயர் பதவி உருவாகியது. 1996முதல் மக்களால் நேரடியான மேயர் தேர்ந்தெடுக்கப்படுவது தொடங்கியது.  பதவிக்காலமும் இரண் டுக்கு பதிலாக ஐந்தாண்டுகளாகியது.  

தி.நகர் எப்படி உருவானது?

1922ல் மூன்றாவது வட்டம்  வண்ணாரப்பேட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகரும், நிலப்பிரபுவுமான  திவான் பகதூர்  சர் தியாகராய செட்டி  சென்னை நகராட்சியின் தலைவராக செயல் பட்டிருக்கிறார்.  இரட்டை ஏரிகளான  நுங்கம்பாக்கம் ஏரி மற்றும் மயிலாப் பூர் ஏரி ஆகியவை மேடடிக்கப்பட்டு உருவான புதிய நகரம் சர் தியாகராயர்  பெயரால் அமைந்தது. 22 வட்டப் பிரதிநிதியான பி.ரங்கநாதம் செட்டி பெயரிலான தெருதான் இன்றைய தினம் பிரபலமாக உள்ள ரங்கனாதன் தெருவாக  மாறியிருக்கிறது.   

பச்சையப்பன் கல்லூரி முதல்வர்   எம்.ரத்னஸ்வாமி, மொகமத் உஸ் மான், ஓ.தணிகாசலம் செட்டி,  சி.நடேச  முதலியார் ஆகியோர் மட்டுமின்றி தலைவர் பிட்டி தியாகராயரும் நக ராட்சி உறுப்பினராக இருந்த   அதே  தருணத்தில் மாகாண மேலவையின் உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்திருக்கின்றனர். இந்த 30 பேரில்  பிராமணர் அல்லாதவர்கள் 14 பேரும், வைசியர்களும் பிராமணர்களும் தலா அறுவரும், முகமதியர் இரு வரும், நாடார்  இந்திய கிருத்துவர்  தலா   ஒருவரும் இருந்திருக்கின்றனர். பட்டணத்திற்கே உரிய சமூகத்த வர்களான நாயக்கர், கிராமணி, ஆதி திராவிடர்  எவரும் இச்சபையில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.   

முன்னாள் அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், நிலப்பிரபுக்கள், அரசு ஒப்பந்ததாரர், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த மாநகராட்சியில் சாதாரணமானவர் எவரும் இடம் பெறவில்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்பதே இதன்  அடிப்படைக் காரணமாகும்.  

யார் யாருக்கெல்லாம் வாக்குரிமை?

முந்திய ஆண்டில் 120 நாட்கள் அந்த நகராட்சியில் வசித்தவராகவும்,   அவ்வாறே முந்தைய ஆண்டில்  சொத்து வரி, நிறுவன வரி, தொழில்  வரி, வருமான வரி மீதான சர்சார்ஜ்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச்  செலுத்திவராகவும் இருந்தால் மட்டுமே வாக்களிக்கும் உரிமை  அளிக்கப்பட்டிருந்தது.  இத்தகுதி களுக்கு அப்பால் வேறு சில பிரிவின ரும் வாக்குரிமையைப் பெற்றிருக் கின்றனர்.   அரசுப் பணியிலிருந்து ஓய்வு  பெற்றோர்,  ஓய்வூதியம் பெறுகின்ற வர்கள், அரசுப் பணியிலிருந்து விடு விக்கப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் மட்டுமின்றி, நிரந்தர நியமனம் அளிக்கப்படாத உயர்நிலையில் அல்லாத அரசு அதிகாரிகளும், மேன்மைமிகு மன்னரின் வழக்கமான  ராணுவப் பணியில் உள்ளோரும் வாக்காளர்கள் என்ற தகுதிநிலையைக்  கொண்டிருந்தனர். 

நியமன உறுப்பினர்கள் 

தவிர பல்வேறு தொழில் அமைப்பு கள் மூலம் உறுப்பினர்கள் நியமனம்  செய்யப்படுவதும் இருந்து வந்தது.   ஹார்பர் டிரஸ்ட் போர்ட், தென்னிந்திய  ஆங்கிலோ இந்தியன் அசோசியே ஷன் லிமிடெட்,  யூனிவர்சிட்டி ஆஃப்  மெட்ராஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் தலா ஒருவரும்,  மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ், ஸவுத் இந்தி யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்  ஆகிய வற்றின் மூலம்  தலா இருவரும், மதராஸ் டிரேட்ஸ் அசோசியேஷன் மூலம் மூவரும்,  தவிர அரசு சார்பில் 9 பேரும் நகராட்சிக்கு  நியமிக்கக்கப்பட் டிருக்கின்றனர்.  

இதில் பல்கலைக் கழகம் சார்பில்  கேப்டன் லட்சுமியின் தந்தையான புகழ்பெற்ற பாரிஸ்டர்  டாக்டர் சாமி நாதனும், அரசு சார்பில்  சென்னை  மாநகர காவல்துறை ஆணையர் சாலை பெட்ஃபோர்ட் ஹவு சில் வசித்து வந்த சட்ட மேலவை உறுப்பினருமான ராவ் பகதூர்  சர் எம்சிடி முத்தையா செட்டியாரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.    

பாண்டிபஜார்  எப்படி உருவானது?

இதில் இன்னொரு வினோதமான அம்சமும் உள்ளது.  புது நகரின் பிரதான  வீதி  மாநகராட்சித் தலைவர் பெயரைக்  கொண்டிருப்பினும் மேற்கில் ராம கிருஷ்ணா பள்ளியிலிருந்து கிழக்கில்  ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி வரை அது  பாண்டி பஜார் என்றே  அழைக்கப்பட்டு  வந்தது.  அடுத்த கட்டத்தில் அது நீதிக்  கட்சியின் முக்கியப் பிரமுகர் சவுந்தர பாண்டியன் பெயரைக் கொண்டது என்று கருதி சவுந்தர பாண்டியனார்  பஜார் என்று அழைக்கப்பட்டு வருவ தோடு பலகைகளில் பொறித்தும் வைத் துள்ளனர்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் மேனகா காந்திக்கும் வித் தியாசம் தெரியாதவர்களால் மட்டுமே  இதைச் செய்ய முடியும்.  அன்றைய மாநகராட்சி நிர்வாகத்தின் அதிகார பூர்வ ஆவணங்களில் இப்பெயர்  கிடையாது என்பதும் பாண்டிச்சேரி யைச் சார்ந்த வர்த்தகர் சொக்கலிங்க முதலியார் கீதா கேப் அருகில் பத்துக்  கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்ட தோடு  பாண்டி பஜார் என்ற  பெயர்ப்  பலகையை அக்கட்டிடத்தின் உச்சி யில் நிறுவியிருந்தார்.  இதனால்  வாய்  வார்த்தைகளில் 1930க்குப் பின்னர் உரு வான பெயர்தான் பாண்டி பஜார் என்பதும் அறியப்பட வேண்டியதாகும்.   

பனகல் பூங்கா   

அன்றைய தினம் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜஸ்டிஸ்  கட்சி அமைச்சரவை வளர்ச்சி மற்றும்  தேவைக்கேற்ப நகரை விரிவுபடுத் திடும் திட்டத்தைக் கொண்டிருந்தது. முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் இதில் பெரிதும் முனைப்பு கொண்டிருந்தார். அதற்கேற்ப 1919 முதல் 1923 வரை தலைவராக இருந்த பிட்டி தியாகராயர் தலைமையிலான சென்னை நகராட்சி அரசு அதிகாரி களின் துணையுடன் முழு மூச்சாக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கி  குறுகிய காலத்தில் மாம்பலம் கிராமத்தையொட்டி ரயில் பாதைக்கு கிழக்கே புத்தம் புதிய  நகரை உருவாக்கியது.  அதன் மைய மாக உருவான பூங்காவின் கீற்று களாய்  சாலைகளும் தெருக்களும் திட்டவட்டமான ஒழுங்குடன் மேலை நாடுகளைப் போன்று குறிப்பாக பிரெஞ்சு வடிவமைப்பில்  நிர்மாணிக் கப்பட்டது.  புத்தம் புதிய நகரமும் அதன் பிரதான சாலையொன்றும்  நகராட்சித் தலைவர்  தியாகராய பெயரையும்,    பூங்கா மாகாண முதலமைச்சர்  பன கல் பெயரினையும் பெற்றன.  இவை இரண்டும் தான் இன்று சென் னையில் புகழ்பெற்று விளங்கும் தியா கராயநகரும் பனகல் பூங்காவும்.

(இன்று சென்னை தினம்)
 ஆக.22-1639.