articles

img

காவியம் படைத்த கம்யூனிஸ்ட் அமீர் ஹைதர் கான்

காவியம் படைத்த கம்யூனிஸ்ட்  அமீர் ஹைதர் கான் 

அசாத்தியங்களை நிகழ்த்திய சாகச வீரன்

நாங்கள் எதார்த்த வாதிகள்; ஆனால், அசாத்தியங்களைக் கனவு காண்கி றோம். எதார்த்தத்திலிருந்து அசாத்தி யங்களைப் படைப்போம்” என்றார் சே குவேரா. அத்தகைய அசாத்தி யங்களை நிகழ்த்திய மனிதர்தான் அமீர் ஹைதர் கான்.  பாகிஸ்தான் ராவல்பிண்டியின் தொலைதூர கிராமத்தில் வறுமை யில் பிறந்த ஹைதர் கான், கல்வி மீதான தீராத ஆர்வத்தால் வீட்டி லிருந்து விரட்டப்பட்டும் கல்வி பயின்றார். 14 வயது வரை கொடிய வறுமையிலும், குழந்தைத் தொழிலாளியாகவும் வாழ்ந்தார்.  கப்பலில் கிடைத்த வேலை மூலம் உலகின் ஜன்னல்கள் திறந்தன. 1917இல் எஸ் எஸ் கேவா கப்பலில் பம்பாயிலிருந்து லண்டன், பின்னர் நியூயார்க் சென்றார். அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர் ஜோசப்புடன் நடந்த உரையாடல் அவரது வாழ்க்கையை மாற்றியது.  “தொலைதூரத்திலிருந்து கையளவே ஆன பிரிட்டிஷர்கள் எப்படி அரசு அமைத்தார்கள்?” என்ற கேள்விக்கு ”பிரித்தாளும் சூழ்ச்சி” என்ற பதில் கிடைத்தது. இதற்கு மாற்று ”மக்களின் ஒற்றுமை” என்று உணர்ந்த ஹைதர் கான், “நான் என் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடுவேன்” என்று உறுதியேற்றார்.  அமெரிக்காவில் ஆங்கிலம், கடற்கல்வி, விமானப் பயிற்சி பெற்று குடியுரிமையும் பெற்றார். தொழி லாளர் வேலைநிறுத்தங்களை அறிந்து சோசியலிசக் கருத்துக்கள் அறிமுகமாயின. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் ரஷ்யாவுக்குச் சென்று ஏகாதிபத்திய சுரண்டல் பற்றிய விரிவான வகுப்புகளிலும், ஆயுதப் பயிற்சியிலும் பங்கேற்றார்.  மகத்தான விடுதலைப் போராட்ட வீரராக மலர்ந்து பம்பாய் திரும்பிய அவர், டாங்கே, அதிகாரி,  ரணதிவே, பிராட்லி ஆகியோரைச் சந்தித்தார். இந்தியா வில் மையப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் மகத்தான பங்கு வகித்தார்.  சென்னையில் வீட்டு வேலை செய்துகொண்டு கட்சி கட்டும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டார். தென்னிந்திய வரலாற்றில் முதல்முறையாக போல்ஷிவிக் சதி வழக்கில் மெட்ராஸ் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற விசார ணையின்போது சுபாஷ் சந்திர போஸுடன் சந்திப்பு நடந்தது. சுபாஷ் அவரை “சபாஷ்” என்று பாராட்டியது போராட்டத்திற்கு நல்ல விளம்பரம் அளித்தது.  சுந்தரையா துவங்கி பி சீனிவாச ராவ், இ எம் எஸ் என்று பல தோழர் களைக் கம்யூனிஸ்டுகளாக ஆக்கி, அடக்குமுறைக் காலத்தில் தலை மறைவாக ஆற்றிய பணிகள் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.  1946இல் தொழிலாளர்கள், தபால் தந்தி ஊழியர்களின் போராட்டத் தைத் தொடர்ந்து புரட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென் கோரிக்கை விடுத்தார். கட்சி மறுத்ததை ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின்படி ஏற்றுக்கொண்டார்.  சுதந்திரத்திற்குப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பி பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் பணியைத் தொடர்ந்தார். ராவல்பிண்டி சதி வழக்கை சந்தித்தார். அடக்குமுறை, தலைமறைவு, சிறை,  சாகசங்கள் என அவரது வாழ்க்கை ஒரு காவிய மாகும்.  கொடிய வறுமையிலிருந்து குழந்தைத் தொழிலாளியாக உலகம் சுற்றிக் கம்யூனிஸ்டாக மாறி,  வாழ்நாள் முழுவதும் விடுதலைக்காக அர்ப்பணித்த அமீர் ஹைதர் கானின் வாழ்க்கை வரலாறு உருது மொழியில் டாக்டர் அயூப் மிர்சா நாவலாக எழுதியுள்ளார். அதை சிபிஐஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் முகமது அமீன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நமக்கு அதன் சாரம் குறையாமல் அளித்துள்ளார்.