சூர்யபிரகாஷின் மரணம்: கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கொடுமையும் மனநலப் பாதுகாப்பின் தேவையும்
நவீன கார்ப்பரேட் உலகின் கொடுமை யான முகத்தை அம்பலப்படுத்தும் ஒரு சோகமான நிகழ்வு நடந்தேறியது கடந்த ஜூன் 9ஆம் தேதி. சென்னை பெருங்களத்தூரில் உள்ள அசென்சர் (Accenture) நிறுவனத்தில் பணிபுரிந்த சூர்யபிரகாஷ் என்ற இளைஞன் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், நம் சமூகத்தின் மனநலப் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை யும், கார்ப்பரேட் கலாச்சாரத்தின் மனிதாபி மானமற்ற தன்மையையும் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறது. எப்போதும் போல் ஜூன் 9ஆம் தேதி காலை, தன் நண்பர் அறையிலிருந்து அலுவல கத்திற்குக் கிளம்பினான் சூர்யபிரகாஷ். காலை 9 மணிக்கு நடைபெறும் தினசரி ஸ்டாண்ட்-அப் மீட்டிங்கிற்கு தாமதமாகாமல் சென்றிருக்க வேண்டும். இந்த மீட்டிங்கு களில் தான் செய்த வேலைகள், செய்ய போகும் வேலைகள் பற்றி விவரிக்க வேண்டும். வேலை எதிர்பார்த்த அளவுக்கு முடிய வில்லை என்றால் கேள்விகளும், உத்தரவு களும் வந்துவிடும். இத்தகைய மீட்டிங்குகளில் சக ஊழியர்கள் முன்னிலையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பயந்து, அடுத்த நாள் அதே அவமான நிலையை எதிர்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் அன்றைய வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் காலை 10 மணி அளவில் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.
காவல்துறையின் மேலோட்டமான விசாரணை
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட காவல்துறை உடனடியாக சென்று, சிதறிக் கிடந்த சூர்யாவின் உடலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. காவல்துறை ஆய்வாளர் தன் விசாரணையைத் தொடங்கி, அதை காதல் தோல்வியில் முடித்தார். “காதல் தோல்வி யின் வலி தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டார்” என்று ஆய்வறி க்கையை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால், ஆய்வாளரின் கூற்றுப்படி, சூர்யா கடந்த ஒரு மாத காலமாக நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அவர் மாதக்கணக்கில் மன உளைச்சலுடன் இருந்திருக்கிறார் என்பதை ஆய்வாளர் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். அதற்கு ஆதாரமாக சூர்யாவின் டைரியும், அவருடைய தந்தையின் வாக்குமூலமும் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இந்த விசாரணையில் முக்கிய மான கேள்விகள் கேட்கப்படவில்லை. காதல் தோல்வியைத் தன் பெற்றோரிடம் கூறி, ஒரு மாத காலம் மன அழுத்தத்துடன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த சூர்யாவிற்கு ஏன் திடீரென்று - அதுவும் தான் பணிபுரியும் இடத்தில் - இப்படி ஒரு முடிவெடுக்கத் தோன்றி யது என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் செய்யப்படவில்லை. சூர்யாவின் குடும்பம் திருவொற்றியூரில், நிறுவனத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நிறுவனம் அருகில் இருந்திருந்தால், தன் மன உளைச்சலைக் கொட்டித் தீர்க்கவும், அழுது புலம்பவும் வாய்ப்பு இருந்திருக்கலாம். சூர்யாவின் நிலை பல ஐடி ஊழியர்களின் நிலைதான் - வேலைக்காக உறவுகளை விட்டு வாழும் வாழ்க்கை.
அலுவலகக் கலாச்சாரத்தின் கொடுமை
அலுவலகத்தில் அவருடன் பணிபுரியும் ஊழியர்கள், டீம் லீடர், புராஜெக்ட் மேனே ஜர், நிறுவனத்தின் எச்.ஆர்., என யாராவது அருடைய சோகத்தைப் புரிந்து ஆறுதல் சொல்லியிருக்கலாம். ஆனால் சூர்யா மன உளைச்சல் காரணமாக சரியாகப் பணி செய்ய முடியாத நிலையை, அவன் வேலை செய்யாமல் ஏமாற்றுபவனாகச் சித்தரிக்கும் அலுவலகக் கலாச்சாரம். மாதம்தோறும் நிறைய சம்பளம் தரும் நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் இருக்கும் நபரிடம் சக ஊழியர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? “சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யவில்லை என்றால் அது அநியாயம்” என்பதுதானே கற்பிக்கப்படும் அலுவலகக் கலாச்சாரம். சூர்யாவைத் தடுத்து நிறுத்துவதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் தவறவிட்டது யார் குற்றம்? காவல்துறை ஆய்வாளர் கூறு கிறார்: “மன உளைச்சலைக் கையாள முடி யாத திறமையற்ற நிலைதான் காரணம்” என்று. காவல் ஆய்வாளர் சூர்யாவின் மர ணத்திற்குக் காரணம் அவருடைய இயலாமை என்று எழுதிக் குற்றம் சாட்டுவது, ஆய்வாள ரின் தவறு மட்டுமல்ல, இந்த சமூகத்தில் இருக்கும் அறிவியல்பூர்வமற்ற கற்பிதம்.
வேலையின் அடிப்படை யதார்த்தம்
இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் வேலைக்குச் செல்வதே நாளைய அல்லது உடனடிப் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நெருக்கடி யினால்தான். அப்படியான நிர்பந்திக்கப்பட்ட செயலான வேலை, அடிப்படையில் மன உளைச்சலுக்கு இட்டுச் செல்லும் வழிதான். ஆகையால் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் மன உளைச்சலோடுதான் பணி செய்துகொண்டிருக்கின்றனர். அப்படி மன உளைச்சலுடன் பணி செய்வது இயல்பான ஒன்றாக இந்த சமூகத்தில் மாற்றப்பட்டிருக்கிறது.
மன அழுத்தத்தின் அதிகரிப்பு
இந்தச் சூழலில் காதல் தோல்வியோ, மன முறிவோ, குடும்பத்தினர் இறப்போ, நோய்வாய்ப்படுதலோ, இயல்பாக இருக்கும் மன உளைச்சலைப் பல்மடங்கு அதிகரிக்கின்றது. அப்படி அதிக மன உளைச்சல் இருக்கும் சூழலில் பணிபுரியும் ஊழியரிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்துப் பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மனநலம் சம்பந்தமாகப் பேரளவில் இருக்கும் நிறுவனக் கொள்கைகள் செயல்திற னற்றவை என்று இவ்வாறான நிகழ்வுகள் காட்டுகின்றன. இத்தகைய வெற்றுக் காகிதக் கொள்கைகளைக் கொண்ட பன்னாட்டு நிறு வனமான அசென்சர் தன் கொள்கைகளின் படி இவ்வாறு பெரும் மன உளைச்ச லுக்கு ஆளான சூர்யாவிடம் “வேலைப்பளு குறைத்துக்கொள்” என்று கூறியிருக்கும், “மருத்துவரை அணுகு” என்று வலியுறுத்தியிருக்கும், மருத்துவரின் அறிவுரைப்படி சில மாதங்கள் ஓய்வெடுக்க வும் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் சிறிதுகூட மனிதாபிமானமற்ற முறையில் “வேலை செய்யவில்லை” என்றும், அதற்குத் தண்டனை என்றும் மிரட்டி யிருந்தால்; இருக்கும் மன உளைச்சலில் வேலையும் பறிபோகும், அதனால் கடன் திருப்பிக் கட்ட முடியாது, குடும்பத்தின் கேள்வி களுக்கு என்ன பதில் சொல்வது என்று திக்க ற்ற நிலைக்குக் கொண்டுசென்றி ருக்கக்கூடும்.
அரசின் கவனம் தேவை
25 ஆண்டுகளுக்கு மேலான ஐடி துறையில் ஏற்படும் இத்தகைய பணிச்சூழல் ஆபத்துகளை ஆய்வு செய்யாமல், அதை நடக்காமல் தவிர்க்கச் சட்டம் இயற்றாமல் அரசும் அக்கறையற்று இருக்கிறது; வேலையிடத்தில் அதிகப்படியான மன உளைச்சலுடன் இருக்கும் ஒரு நபரும் மற்ற சக ஊழியர்களும் ‘சமமாக’ நடத்தப்படும் இந்த வேலை முறை, பாதிக்கப்பட்டவருக்கு எதிரான பாகுபாடுடைய வேலை முறை யாக மாறுகிறது. நம் சமூகமும், நிறுவனங் களும் அரசும் சூர்யபிரகாஷின் மரணத்தி லிருந்து பாடம் கற்று, மனநலப்பாதுகாப்பை யும், மனிதாபிமானமான பணிச்சூழலையும் உருவாக்க முன்வர வேண்டும்.