articles

நலவாரிய ஆன்லைன் தரவுகள் அழிவு: உண்மை நிலவரம் என்ன? -டி.குமார்

தமிழக அரசு உடனடியாக முறைசாரா தொழிலாளர் ஆன்லைன் சர்வர் பிரச்சனையில் தலையிட்டு உண்மையைக் கண்டறிந்து தொழிலாளர்களின் அழிந்துபோன ஆவணங்களை மீட்டு எடுப்பதுடன், இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடாதவாறு கட்டுப்படுத்த வேண்டும்

தொழிலாளர் துறை அமைச்சர் முறைசாரா தொழி லாளர் நலவாரியங்களில் சர்வர்ஆன்லைன் பதிவு ஆவணங்கள் அழியவில்லைஎன்றும், ஒரு லட்சத்து 79 ஆயிரம் தொழிலாளர்களுக்கு புது பதிவு  செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி யுள்ளார்.மேலும், சுமார் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கணக்கை கூறியுள்ளார். 

தமிழகத்தில் உள்ள சுமார் 60 லட்சம் கட்டுமான தொழிலாளர்களில்   தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் துவங்கப்பட்ட 30.11.1994 முதல் 30/11/2022 வரை 21,14,693 தொழி லாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ள னர். 12 லட்சம் தொழிலாளர்கள் புதுப் பித்துக் கொள்ளாமல் விடுபட்டுள்ளனர். 

ரூ.5585 கோடி நலநிதி

கட்டுமான பணியின் மொத்த மதிப்பீட்டில் ஒரு சதவீதம் பங்களிப்பு தொகையாக நலநிதி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பெறப்படுகிறது. 30-11-2022 வரை 5585,67,78,338 ரூபாய் பங்களிப்புத் தொகையாக பெறப்பட்டுள்ளது. 2020 முதல் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாரியம் துவங்கப்பட்டது முதல் 30/11/2022 வரை 23,73,5816 தொழிலாளர்களுக்கு ரூ.1222,37 லட்சம் நலஉதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த வாரிய நிர்வாகச் செலவினங்களுக்கு கட்டுமான வாரிய நல வரி இருப்புப் பணத்திலிருந்து அறுபது சதமானம் எடுக்கப்பட்டு வருகி றது. கட்டுமானம் தவிர மற்ற வாரி யங்களுக்கான நிர்வாகச் செலவினங்க ளை அரசே மேற்கொள்ள வேண்டும்.

2023 டிசம்பர் மாதம் ஆன்லைன் சர்வர் (போர்ட்டல்) முழுவதும் ஒரே நாளில் முடக்கப்பட்டது. அதை மீட்டெ டுக்க முடியவில்லை. பல மாதக் கணக்காக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாரியப் பயன்கள் கிடைக்கவில்லை. 

தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை

இதனையடுத்து, தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பால கிருஷ்ணன் அறிக்கையின் அடிப்படை யிலும் தொழிலாளர் துறை அமைச் சரே 07.07.2024 அன்று மத்திய தொழிற் சங்கங்களுக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில், சர்வர் பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும், வருகிற சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே பணப் பயன் கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் போர்க்கால அடிப்படை யில் பரிசீலனை செய்யப்பட்டு பணப் பயன் உதவிகள் வழங்கப்படும் என்றார்.  இது அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. 

முரணான தகவல்

ஆனால் தற்போது தொழிலாளர் துறை அமைச்சரே ஆன்லைன் சர்வரில் ஆவணங்கள் அழியவில்லை என ஒரு தகவலை பரப்புவது, முன்னுக்குப் பின் முரணாக பேசுவது தொழிலாளர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. 

மேலும், தில்லி மற்றும் கர்நாடக மாநில கட்டுமான வாரியத்தில் வழங்கு வது போல் தமிழக கட்டுமான தொழி லாளர்களுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 3000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; கட்டுமானம் மற்றும் 17 அமைப்புசாரா வாரிய அலுவலகம் சார்ந்த நிர்வாகச் செலவுகளுக்கு வாரி யங்களுக்கு கட்டுமான வாரியப் பணம் 80 சதவீதம்  செலவு செய்யும் முறையை மாற்றுவதுடன் மற்ற 17 வாரியங்க ளுக்கும் அரசு நிதி ஒதுக்கி செலவு செய்ய வேண்டும்; கட்டுமானப் பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; அரசு கட்டுமான பணிகளில் தனியாருக்கு ஒப்பந்தம் தரும் முறையை ரத்து செய்து பொதுப்பணி  துறை மூலம் கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு கூட்டுறவு முறையை உரு வாக்கி வேலை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைக ளை முன்வைத்து கட்டுமானத் தொழி லாளர்கள் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் தொழிலாளர்களிடம் கையெழுத்துப் பெற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி வருகிறார்கள். 

தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரக்கூடிய இந்த தருணத்தில், 74 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஆவ ணங்கள் அழிக்கப்பட்டதை மறைத்தும் தொழிலாளர் கோரிக்கைகளை முடக்கக் கூடிய வகையிலும் தொழிலா ளர் துறை அமைச்சரே பேசி இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, கட்டுமானம், உடல் உழைப்பு நல வாரியங்களை மட்டும் அமைத்த தோடு மற்ற நல வாரியங்களை செயல் படுத்துவதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லாத நிலையிலே உள்ளது. அமைக்கப்பட்ட வாரியங்க ளையும் முறையாக கூட்டுவதில் தொடர்ச்சியாக முயற்சி எடுக்கும் ஏற்பாடுகள் இல்லை. கூட்டப்பட்ட கட்டுமான வாரியத்தில் கூட எடுக்கப் பட்ட முடிவுகளை அரசாணையாக வெளியிட மனு கொடுத்தும் இதுவரை அதற்கான அரசாணை வெளியிடாத போக்கையே கடைப்பிடித்து வருகிறது. 

எனவே தமிழக அரசு உடனடியாக முறைசாரா தொழிலாளர் ஆன்லைன் சர்வர் பிரச்சனையில் தலையிட்டு உண்மையைக் கண்டறிந்து தொழிலா ளர்களின் அழிந்துபோன ஆவணங்க ளை மீட்டு எடுப்பதுடன், இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடாதவாறு கட்டுப்படுத்த வேண்டும் எனவும்; கட்டு மானம் மற்றும் முறைசாரா தொழிலா ளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மே ளனம் (சிஐடியு) கேட்டுக் கொள்கிறது.

டி.குமார்

மாநில பொதுச் செயலாளர், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)