articles

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கோரியும் ஜூன் 17 அன்று தேசிய தினம் அனுசரித்திடுக!

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கோரியும் ஜூன் 17 அன்று தேசிய தினம் அனுசரித்திடுக!

இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் புதுதில்லி, ஜுன் 12 -  காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை யில் ஈடுபட்டிருப்பதைக் கண்டித்தும், பாலஸ்தீனர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், இந்திய அரசின் நிலைப் பாட்டில் மாற்றம் கோரியும் ஜூன் 17 அன்று தேசிய தினம் அனுசரித்திடுமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இருபது மாதங்களுக்கும் மேலாக, இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக 55,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அகதிகள் தங்கு மிடங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்ட மைப்புகள் வேண்டுமென்றே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் காசா மக்கள் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு பேரழிவிற்கு ஆளாகி இருக்கின்ற னர். காசாவிற்கு உதவிக்காக வருவதை யும் மிகவும் மனிதாபிமானமற்ற முறை யில் இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. சர்வதேச கடல் பகுதியில், ‘ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா - காசாவின் மாட்லீன்’ என்ற  மனிதாபிமானக் கப்பலின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் நாங்கள் கண்டிக் கிறோம். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சர்வதேச தன்னார்வலர்களை யும் விடுவிக்கவும், காசாவிற்கு தடை யற்ற மனிதாபிமான உதவியை உறுதி  செய்யவும், மனிதாபிமானமற்ற முற்றுகை யை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும் இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வ தேச நீதிமன்றம் உட்பட உலகளாவிய அள வில் சீற்றம் அதிகரித்து வரும் போதிலும், அமெரிக்கா மற்றும் அதன் சில நட்பு நாடுகளின் ஆதரவுடன், நேதன்யாகு அர சாங்கம் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் தனது மிருகத்தனமான பிரச்சாரத்தைத் தொடர்கிறது. ரஃபா மீதான சமீபத்திய தாக்குதல், ஏற்கனவே இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை மீண்டும் இடம்பெயரச் செய்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனிதநேயத்தை முற்றி லும் புறக்கணித்து செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. சர்வதேச கடல் எல்லையில் இருந்து ‘சுதந்திர புளோட்டிலா’ கடத்தப் பட்டதற்கான சமீபத்திய நிகழ்வு பரவலான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இந்தியா வரலாற்று ரீதியாக பாலஸ்தீனக் கோரிக்கையையே ஆத ரித்து வந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் அதற்கு மாறாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை திருப்திப்படுத்தும் நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது மிக வும் கவலையளிக்கிறது. இது காலனித்துவ எதிர்ப்பு ஒற்றுமை மற்றும் தேசிய விடு தலை இயக்கங்களுக்கான ஆதரவில் வேரூன்றிய இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையிலிருந்து வெட்கக்கேடான விலகலைக் குறிக்கிறது. l    இஸ்ரேலிய அரசாங்கத்தால் செய்யப் பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களைக் கண்டித்தும், l    தேசம், கண்ணியம் மற்றும் சுதந்திரத் திற்கான நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியும், l    பாலஸ்தீனக் கொள்கைக்கு நமது வர லாற்று ஆதரவுடன் ஒத்துப்போகும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளான நாங்கள், நாடு  முழுவதும் ஜூன் 17 அன்று நடைபெறும் பாலஸ்தீனத்துடனான தேசிய ஒற்றுமை தினத்தில் இணையுமாறு அமைதியை விரும்பும், ஜனநாயக மற்றும் மதச்சார் பற்ற சக்திகள் அனைவரையும் அறை கூவி அழைக்கிறோம். தில்லியில், ஜூன் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இனப்படுகொலை, நிறவெறி மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்திய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் விதத்தில் மக்கள் மிகவிரிவான அளவில் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.  (ந.நி.)