அருணகிரிநாதரா...வாருங்கள் நலமாக இருக்கிறீர்களா...
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்... நடப்பதையெல்லாம பார்த்தேன்.. கால்கள் உன்னைத் தேடி வந்துவிட்டன...
முகத்தில் கவலை ரேகைகள் தெரிகிறதே...
உன்னை நினைத்துதான் முருகா...
என்னை நினைத்தா?
ஆம்... இப்போது உன் பெயரில் ஒரு மாநாடு நடத்தியுள்ளார்களே... இவர்கள் யார் தெரியுமா?
என்னுடைய பக்தர்கள்...
மண்ணாங்கட்டி...ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டவங்க... கோவில் கட்டுன இடத்துலயே தோத்தவுடனே ஜெய் ஜனந்நாத்னு கோஷம் போட்டு ராமரக் கடுப்படிச்சாங்க...
அது அரசியல்....
இதுவும்தான்,,, இன்னோட கவலை என்னான்னா, இப்ப இங்கயும் அவங்க ஜெயிக்கப் போறதில்லை... என்னை எப்படியெல்லாம் திட்டப் போறாங்களோன்னுதான் பயந்து போயிட்டேன்...
என்ன பண்றது...
கவலைப்படாதே முருகா... தோத்துட்டு ஒரு வாரம் திட்டுவாங்க.... அப்புறமா கலவரம் பண்றதுக்கு வேற சாமி கிடைக்குமான்னு பாக்கப் போயிருவாங்க... பொறுமையா இருக்கணும்... போயிட்டு வர்றேன்... சரி..சரி...