articles

img

சிங்கங்களைக் கண்டாலும் ஓடி ஒளியாத கழுதைப்புலிகள்

சிங்கங்களைக் கண்டாலும்  ஓடி ஒளியாத கழுதைப்புலிகள்

வெப்ப இரத்த விலங்குகளில் காணப்படும் புரோட்டோசோவன் பாரசைட் ஒட்டுண்ணியான டாக்ஸோப்ளாஸ்மா கோண்டீ (toxoplasma gondii) என்ற கிருமி கழுதைப்புலிகள் உட்பட்ட வனவிலங்குகளை பாதிக்கிறது என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்நோயினால் கென்யாவில் வாழும் கழுதைப்புலிக் குட்டிகளில் பெரும்பாலானவை உயிரிழக்கின்றன.

இந்த உயிர் பறிக்கும் கிருமி இவ்வுயிரினங்களின் சுபாவத்திலும் ஆபத்தான  மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கங்களைக் கண்டால் ஓடி ஒளியும் சுபாவம் உள்ள கழுதைப்புலிகளின் இயல்பில் மாற்றங்கள்  ஏற்பட்டுள்ள்லன. டாக்சோப்ளாஸ்மா பாராசைட் என்ற இந்த ஒட்டுண்ணிகள் பூனை களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை விலங்குகளில் உருவாக்கக்கூடிய மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்தபோது அதிர்ச்சியூட்டும் இந்த கண்டுபிடிப்பு நடந்தது. ஒட்டுண்ணி நிபுணர்களும், வனவிலங்குகளின் குணங்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளும் இணைந்து கென்யா மசாய் மாரா தேசியப் பூங்காவில் கழுதைப்புலி களிடம் இந்த ஆய்வுகளை மேர்கொண்டனர். நோய்த்தொற்றிற்கும் சுபாவத்தில்  ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை கழுதைப்புலிகளை ஆராய்வதன் மூலம் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் இந்த விலங்குகள் ஆய்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கழுதைப்புலிகளில் நோய்த்தொற்று ஏற்பட்  டால் அவற்றின் சுபாவத் தில் உருவாகக்கூடிய மாற் றங்களே முக்கியமாக ஆராயப்பட்டன. நேச்சர் கம்யூனி கேஷன்ஸ் (Nature Communications) என்ற  ஆய்விதழில் இந்த ஆய்  வுக்கட்டுரை வெளியிடப்  பட்டுள்ளது.  கழுதைப்புலி களை மயக்க வெடி வைத்து பிடித்தபின் அதன்  இரத்த ப்ளாஸ்மா சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஆய்வுக்  கட்டுரையின் இணை ஆசிரியர் ஏபன் கெய்ரிங் கூறுகிறார். நோய்வாய்ப்பட்ட கழுதைப்புலிகளை அடையாளம் காண இவ்வாறு செய்யப்பட்டது. பொதுவாக சிங்கங்கள் போன்ற பெரிய இரை பிடி விலங்குகளைக் கண்டால் இவை ஓடி ஒளியும் இயல்புடையவை. ஆனால் நோய்வாய்ப்பட்ட கழுதைப்புலி குட்டிகள் சிங்கங்களுடன் சரிசமமாகப் பழகுவது கண்டறியப்பட்டது. இவ்வாறு நடந்துகொள்ளும் கழுதைப்புலிகள் பலவும் சிங்கத்தின் தாக்குதலாலும், மற்ற காரணங்களாலும் மரணமடைகின்றன. ஒரு வயதிற்குள் இருக்கும் கழுதைப்புலிக் குட்டிகளே இவ்வாறு சிங்கங் களின் தாக்குதல்களுக்கு இரையாகி பரிதாபமாக மடிகின்றன. ஒரு வயதிற்கும் குறை வாக இருக்கும் ஆரோக்கியமான கழுதைப்புலிக் குட்டிகளில் 17% குட்டிகள்  மட்டுமே சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கின்றன. ஆனால் அதிக வயதுள்ள  கழுதைப்புலிகளில் நோய் எதிர்ப்பு சக்தி இது போன்ற நோய்த்தொற்றைத் தடுக்கிறது. நோய்வாய்ப்பட்ட வளர்ப்புப் பூனைகளை கையாளும் மனிதர்களிடமும் இந்த  நோய் தசை வலி, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படக் காரணமாகிறது. நோய்வாய்ப்பட்டு இறக்கும் விலங்குகளிடம் இருந்து நோய் மனிதர்களுக்கும், வளர்ப்பு விலங்குகளுக்கும் பரவுவதற்குள்ள சாத்தியத்தைக் குறித்து கூடுதல் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில மனிதர்களிடம் இது ஸ்கிரிசோபீனியா என்னும் மனநோய்க்குக் காரணமாகலாம் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா என்ற ஒற்றை வைரஸ் மனிதகுலத்தையே ஆட்டிப்படைத்தபோது நடுங்கிப்போன மனிதன் வனவிலங்குகளிடம் ஏற்படும் இது போன்ற வினோத நோய்கள் பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். எதிரியிடம் தன்னைத்தானே வலியப்போய் பலி கொடுக்கும் கொடூரத்திற்கு ஆளாக்கும் இந்நோய் நாளை ஒருவேளை மனிதரிடமும் பரவினால் நிலைமை என்னவாகும்? இதனால் இது குறித்த தீவிர ஆய்வுகள் நம்மை மட்டும் இல்லாமல் வன உயிரி னங்களின் உயிரையும் காக்க உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.