தோழர் இ.எம்.எஸ் அவர்கள் அம்பேத் கரின் நூற்றாண்டு விழா உரையில், அவரை ‘நவ இந்திய சிற்பி’ என்று போற்றினார். அம்பேத் கர் நவீனத்துவத்தின் மீது கொண்டி ருந்த ஆழ்ந்த ஈடுபாடே இதற்குக் காரணம். அவரது பார்வையில் ஜன நாயகம் என்பது வெறும் ஆட்சி முறை மட்டுமல்ல; மாறாக, மக்கள் ஒருவரு டன் ஒருவர் இணைந்து வாழும் சமூக அனுபவமாகும். “சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஜனநாயக சமூகமே எனது லட்சிய சமூகம்” என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக நீதிக்கான போராட்டம்
அரசியல் விடுதலையின் அடித்தள மாக சமூக விடுதலையும், பொருளா தார சமத்துவமும் அமைய வேண்டும் என்று கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியதோடு, பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டு உரிமைக்கா கவும் போராடினார். பிற்படுத்தப்பட்டோ ருக்கான கமிஷன் அமைக்கப்படாத தும், அவரது அமைச்சர் பதவி ராஜினாமா வுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
பெண்ணுரிமைக்கான குரல்
பெண்களின் சொத்துரிமை, திருமண உரிமை, வாரிசு உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டத் தொகுப்பு நிறைவேற்றப்படாததும் அவரது ராஜினாமாவுக்கு காரண மாயிற்று. ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுப்பு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அவரது வாதம் குறிப்பிடத்தக்கது. “பெண்கள் தேசத் திற்காக பிரசவிக்கிறார்கள், எனவே தேசம் அவர்களுக்கு விடுப்பும் ஊதி யமும் வழங்க கடமைப்பட்டுள்ளது” என்ற அவரது கருத்து முற்போக்கானது.
பொருளாதார சிந்தனைகள்
அரசு சோசலிசம் அவரது அடிப்ப டைக் கொள்கைகளில் ஒன்று. அனை த்து நிலங்களும் அரசுடைமை யாக்கப்பட வேண்டும் என்றும், சோவி யத் கூட்டுப்பண்ணை வேளாண்மை முறை இந்தியாவுக்கு பொருத்தமானது என்றும் வலியுறுத்தினார்.
தற்கால சவால்கள் குறித்த கவலை
சாதி, மத துவேசம், மூடநம்பிக்கை ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட மக்கள் திரள் ஒரு நல்லெண்ண அர சைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்ற அவரது கவலை இன்றும் பொருத்தமா னதாக உள்ளது. அம்பேத்கரின் முற்போக்கான சிந்தனைகளை புரிந்து கொள்வது இன்றைய காலகட்டத்தின் தேவையாக உள்ளது.
நெல்லையில் டிச.6 அன்று
நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்
ஆற்றிய உரையில் இருந்து.