தகவல் தொழில் நுட்பத்துறை, பிபிஓ போன்ற துறைகளில் நாளொ ன்றுக்கு 14 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிக்கும் விதத்தில் கர்நாடக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய கர்நாடக அரசு முன்மொழிவினைக் கொண்டுவந்திருப்ப தற்கு இந்தியத் தொழிற்சங்க மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு-வின் பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறி க்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கர்நாடக அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் திருத்தம், தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலாகும். இந்தத் திருத்தமானது இப்போது தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் நாளொ ன்றுக்கு மூன்று ஷிப்ட் என்றிருப்பதை இரண்டு ஷிப்ட்-ஆக மாற்றுவதற்கு அனுமதித்திடும். இதன்மூலம் ஒரு ஷிப்ட் ஊழியர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்படும் நிலை ஏற்படும்.
மூன்றாவது தாக்குதல்
இது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவியுள்ள மூன்றாவது தாக்குதலாகும்.
முதலில் 2023 ஆகஸ்டில் இதுபோன்று ஒரு திருத்தத்தை தொழிற்சாலை சட்டத்தில் கொண்டு வந்தது. இதற்கு முன்பிருந்த பாஜக அரசு வேலை நேரத்தை அதிகரித்து, பெண் தொழிலாளர்களை இரவு ஷிப்டு களில் பணியமர்த்த அனுமதித்தது, இது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங் களால் அப்போது கடுமையாக எதிர்க்கப்பட்டது.
இரண்டாவதாக, மாநிலத்தில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மாநில தொழில் வேலைவாய்ப்பு நிலை யாணைகள் சட்டத்திலிருந்து (Industrial Employment Standing Orders Act) ஐந்தாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டது. இப்போது மூன்றாவதாக அந்நிறு வனங்கள் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரித்திட அனுமதித்திருக்கிறது.இப்போது கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இதேபோன்று தெலுங்கானா மாநில அரசும் சட்டங்களைத் திருத்தியிருக்கிறது.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி சொன்னபடி...
மேலும் கர்நாடக மாநில அரசு மாநிலம் முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திலும் (Shops and Establishments Act), வேலை நேரத்தை, வாரத்திற்கு 72 மணி நேரம் என மாற்றும் விதத்தில் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இவ்வாறு திருத்தம் கொண்டுவர இன்போசிஸ் நாராயணமூர்த்தியால் வெகுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிடும் மோடி அரசாங்கம் பின்பற்றி டும் முதலாளிகள் ஆதரவு கொள்கையை அடியொட்டி, கர்நாடக அரசும் இந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இப்போதுள்ள சட்டம் ‘ஓவர்டைம்’ பணி (overtime work) உட்பட நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலையைத்தான் அனுமதிக்கிறது.
ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டுகோள்
கர்நாடக அரசு இத்தகைய ஊழியர் விரோத சட்டத் திருத்தங்களைக் கைவிட வேண்டும் என்று சிஐடியு கோருகிறது. இத்தகைய கொடுங்கோன்மைமிக்க சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிவரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, அவர்களுடன் கைகோர்த்துநின்று, இச்சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல் முறியடித்திட வேண்டும் என்று தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு தபன் சென் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். (ந.நி.)