articles

img

‘வாய்ச்சவடாலில் வல்லவர்கள்’

‘வாய்ச்சவடாலில் வல்லவர்கள்’

வடசென்னை மக்கள் சந்திப்பில் உ.வாசுகி சூடு

“நிரந்தரமான வேலை என்பது அனை வரின் கனவாகும். அந்த கனவில் இன்று மண் அள்ளிப் போடப்படுகிறது!” ஒன்றிய  அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பினாலே பல லட்சம் இளைஞர் களுக்கு வேலை கிடைக்கும். ரயில்வேயில் பல லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை ஏன் செய்யக் கூடாது? “வாயில் வடை சுடும் திறமையாளர்கள்!” “மோடி, அமித் ஷா வாயை திறந்தாலே பலவிதமாக பேசுவார்கள். வாயில் வடை சுடுவதில் திறமை வாய்ந்தவர்கள்!” தமிழகத்திற்கு வந்தால் ‘தமிழ் எங்களுக்கு முக்கியம்’ என்று பேசுவார்கள். திருக்குறளை தப்பு தப்பாகச் சொல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கிறார்கள்! ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் ஒன்றிய அரசு கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவச இடம். கட்டணத்தில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு முழுவதும் ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை! இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பறிக்கப்படுகிறது. “வளர்ச்சி யாருக்கு? -  அதானி, அம்பானிக்கா?” “இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்று கூறுகிறார்கள். ஏன் அந்த வளர்ச்சி ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டவில்லை?” உழைப்பவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை, அதானி, அம்பானி, டாடா, பிர்லா லாபமடை கிறார்கள். இதற்கு காரணம் நம் தலைவிதி அல்ல - அரசின் மோசமான கொள்கைகளே! இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பசு மாட்டை விற்றார் என அடித்துக் கொல்வது, வக்பு  திருத்தச் சட்டம், புல்டோசர் மூலம் குடியிருப்பு களை இடிப்பது, ஹிஜாப் தடை - இதுபோன்ற மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி நிற்கிறது. தமிழகத்தில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள்! தமிழகத்தில் அனைத்து வேலைகளும் ஒப்பந்த அடிப்படையில். நிரந்தர பணி இல்லை. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்பினால் படித்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அரசு வேலை கிடைக்கும். வடசென்னையின்  அடிப்படை பிரச்சனைகள் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக நடக்கவில்லை. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது, குப்பைகள் முழுவதும் கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது; சுவாசக் கோளாறு, தோல் வியாதிகள் பரவுகின்றன. பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்தும் வழங்கப்பட வில்லை. நீதிமன்ற உத்தரவைக் காட்டி குடியிருப்பு களை அகற்றுகிறார்கள். மாற்று இடம் கொடுத்து விட்டு அப்புறப்படுத்தினால் பிரச்சனை இல்லை. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். காவல் நிலையங்களில்  மனித உரிமை மீறல்கள்! காவல் நிலையங்களில் அதிகளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது! ஏழை மக்களை விசாரணைக்கு அழைத்தால் உட்காரக் கூட வைப்பதில்லை, கடுமையாக மிரட்டுவீர்கள், தவறு செய்தது போல் முத்திரை குத்துவீர்கள். அவர்கள் மனிதர்கள் இல்லையா? முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறைவேற்றுக! மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்; போக்குவரத்து தொழிலாளர் களின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்ற வேண்டும். ஒன்றிய அரசின் கொள்கை களை எதிர்த்து போராட அனைத்து தரப்பு மக்களும் முன்வர வேண்டும்! வடசென்னை ஆர்.கே.நகர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் (ஜூன் 11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரையிலிருந்து...