சிறுதானியங்கள் உள்ளூர் மக்களுக்கு மிகவும் எளிமையான, முக்கியமான உணவாகும்.இந்த நிலையிலிருந்து, இன்று உலகளாவிய விரும் பத்தக்க உணவு என்ற பெருமையை இறுதியாக பெற்று விட்டது. ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா முன் மொழிந்து 72 நாடுகள் ஆதரவளித்த பின்னர் ஐ.நா. 2023 ஆம் ஆண்டை சிறு தானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது. (சிறுதானியங்கள் என்று சொல்வதே சரியானதல்ல. பதிலாக, அவைகள் திணை வகைகள் என்று அழைக் கப்படுகின்றன). உடனே, இந்திய அரசு நாடாளுமன்ற உணவகத்தில் உணவுப் பட்டியலில் சிறுதானிய உணவுகள் இடம் பெற வேண்டும் என்று உத்தர விட்டது. ஆனால் ,வேளாண் வல்லுனர்கள் இது போன்ற அடையாளப் பூர்வமான நடவடிக்கைகள் மட்டும் போதாது. சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்க, அரசின் கொள்கைகளில், சிறு விவசாயிகளும், பெண்க ளும் முதலிடம் பெற வேண்டும். ஒன்றிய அரசின் கொள்கைகள் சிறு விவசாயிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.ஒருங்கிணைந்த கொள்கையுடன் அரசு செயல்பட்டால் அது ஊட்டச்சத்து மற்றும் சிறு தானிய விவசாயத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்கின்றனர்.
ஏற்றுமதி ஒரு சதவீதமே
இந்தியா சிறுதானிய உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 12 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் மொத்த உற்பத்தியில் 41 சதவீதம் ஆகும். சிறுதானிய உற்பத்தி யில் உலகில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இருந்தா லும், மொத்த சிறுதானிய உற்பத்தியில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது சிறுதானியங்கள் உற்பத்தியில் விவசாயிக ளின் வீட்டு நுகர்வே முதலிடம் வகிக்கிறது என்பதை உணர்த்துகிறது. கவிதா குருகந்தி என்பவர் “நிலை யான மற்றும் முழுமையான விவசாயம் “எனும் அமைப் பின் நிறுவனர்களில் ஒருவராவார். அவர் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வீட்டு நுகர்வை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானி யம் விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்பதற்காக, விவசாயிகளுக்கு பாதுகாப்பான, அவர்களுக்கு சொந்தமான தானியம் எளிதாக கிடைப்பது பறி போய்விடக்கூடாது என்கிறார்.
சூப்பர் உணவு
சிறுதானியங்கள் நார்ச்சத்து மிக்கவை. மக்னிசி யம், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, நியாசின்(பி3 வைட்டமின்), அதிக அளவிலான புரதச்சத்து நிறைந் துள்ளது. அதே வேளையில், குறைவான குளுக்கோஸ் குறியீடு கொண்டதாக உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் விகிதம் குறைவானதாக இருக்கி றது. குளுட்டன் பசைத் தன்மை கொண்ட புரதம் இல்லாத (gluten free) புரதச்சத்து உணவாக உள்ளது. எனவே உயர்வான ஊட்டச்சத்து கொண்ட தாக சிறுதானியங்கள் உள்ளன. சிறுதானியங்கள் வறட்சி, காலநிலை மாற்றம் ஆகியவற்றை தாக்குப்பிடிக்கும் திறன் பெற்றவை. பல்வேறு மாறுபட்ட தட்பவெப்ப நிலையும் கொண்ட மண் வகைகளிலும் அவை நன்றாக வளர்கின்றன. குறைவான இடுபொருட்கள் போதும். ஆனால் மகசூல் அதிகம். நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். அவை அறுவடை ஆனதிலிருந்து 12 வருடம் வரை கூட உணவுக்கு பயன்படுத்த முடியும். உணவுப் பாதுகாப்பை வழங்குகிறது. சேதாரம், வீணாதல் மிகவும் குறைவு.
சிறு விவசாயிகளே மையமானவர்கள்
சிறுதானிய விளைச்சலில் பெரும் பகுதி சிறு விவ சாய அளவிலேயே நடக்கின்றன. இந்திய விவசாயி களில் 86 சதவீதம் பேர் சிறு, மிகச்சிறு விவசாயிகளே( இரண்டரை ஏக்கர் - ஐந்து ஏக்கர்). எனவே சிறுதானிய உற்பத்தி பெருக்கத்தில், சிறு, மிகச்சிறு விவசாயிகளை முதன்மைப்படுத்துவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசின் கொள்கைகள் சிறுதானியங்கள் உற்பத்தி யாகும் பகுதிகள் என்று இல்லாமல், அவற்றை உற்பத்தி செய்பவர்கள் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும். வேளாண் வல்லுனர்கள் அரசின் சிறுதானியக் கொள்கைகள் அதீத முதலீட்டை மையப்படுத்தியதாக அமைந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கின்றனர். வீரிய ரக சிறுதானிய விதைகள், ரசாயன இடுபொருட்கள், பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை அரசு அறிமுகம் செய்தால் அது முட்டாள்தனம் என்கின்றனர். சிறுதானியத்தை பாலிஷ் செய்து அதன் ஊட்டச்சத்தை நீக்கிவிடக்கூடாது. விவசாய செயல்பாட்டாளர்கள் சூழலியல் ரீதியாக நிலைத்தன்மை பெற்றுவிட்ட சிறு தானியங்கள் மீது பசுமைப் புரட்சி மாதிரியை திணித்து விடக்கூடாது என்று அச்சம் தெரிவிக்கின்றனர். அரசு உரிய முறை யில் சிறுதானியக் கொள்கையை அமல்படுத்தினால் அது பெண்களை வலிமைப்படுத்தும்; பசி பிரச்ச னையை போக்கும் என்கின்றனர்.
சில மாநிலங்களின் முன்னெடுப்புகள்
ஒடிசா: சிறுதானிய இயக்கத்தில் 2018- 19 இல் 7 மாவட்டங்களில் கேழ்வரகு பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்பட்டது.
கர்நாடகம்: எதிர்காலத்திற்கான உணவு எனும் திட்டத்தின் கீழ் சிறுதானிய உற்பத்தியாளர்களுக்கு எக்டேருக்கு ரூபாய் பத்தாயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரம்: காலநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றை தாக்குப்பிடிக்கும் சிறுதானியங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தெலுங்கானா: சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க “ராய்த்து பந்து சமிதி” என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒடிசா: சிறுதானிய இயக்கத்தில் 2018- 19 இல் 7 மாவட்டங்களில் கேழ்வரகு பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்பட்டது. கர்நாடகம்: எதிர்காலத்திற்கான உணவு எனும் திட்டத்தின் கீழ் சிறுதானிய உற்பத்தியாளர்களுக்கு எக்டேருக்கு ரூபாய் பத்தாயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மகாராஷ்டிரம்: காலநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றை தாக்குப்பிடிக்கும் சிறுதானியங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. தெலுங்கானா: சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க “ராய்த்து பந்து சமிதி” என்ற திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது.
அழிவிலிருந்து காப்பாற்றுதல்
ஐ.நா. 2023 ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்தது பற்றியும், ஒன்றிய அரசு செய்ய வேண்டி யவைகள் பற்றியும் வந்தனா சிவா கூறுவதாவது: சிறுதானியங்கள் ஒரு மறந்து போன உணவு. நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக அதை எதிர்காலத் திற்கான உணவாக மாற்றுவதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஐ.நா. 2023 ஆம் ஆண்டு சிறு தானியங்களின் ஆண்டாக அறிவித்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அரசு தனது கொள்கைக ளின் மூலம் சிறுதானியங்களை சூப்பர் உணவாக பிரபலப் படுத்துவது விவசாயிகளுக்கு பயனளிக்கும். நீர் வளம் அபரிமிதமாக உள்ள பகுதிகளைத் தவிர, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறுதானி யம் ஒரு முக்கியமான பயிராக விளங்குகிறது. ஆங்கி லேயர்கள் நமது பன்முக விவசாய முறையை சிதைத் தார்கள். கரும்பு, பருத்தி போன்ற தோட்டப் பயிர் முறையை திணித்தார்கள். நாளடைவில், சிறுதானியங்கள் இந்தியர்களின் உணவில் இருந்தும் விவசாயிகளின் விளைநிலங்க ளில் இருந்தும் காணாமலே போய்விட்டன. எங்களைப் போன்ற பல்வேறு விவசாய அமைப்புகள் ஏராளமான சிறு தானிய விதைகளை அழிவிலிருந்து காப்பாற்றி உள்ளோம்.
சிறுதானியங்களின் சிறப்புகள்
சிறுதானியங்களுக்கு மிகவும் குறைவான நீர் தான் தேவை. இது நீர் நெருக்கடிக்கான தீர்வாகும். அரிசி, கோதுமையை விட சிறு தானியங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை. இது ஊட்டச்சத்து குறைபாடு நெருக்க டிக்கான தீர்வாகும். சிறுதானியங்கள் ஒளிச்சேர்க்கை திறன் பெற்றவை. அவை பெட்ரோலியம், இயற்கை வாயு போன்ற புதை படிவ எரிபொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் ரசாயன உரங்கள் போன்ற இடுபொருட்கள் இல்லாம லேயே உயிரி எரிபொருளை உற்பத்தி செய்யக் கூடி யவை. இது காலநிலை நெருக்கடிக்கான தீர்வாகும். 1960களில் பசுமைப் புரட்சித் திட்டம் செயல்படுத் தப்பட்ட போது இரசாயன உரங்கள் அதிகமாக தேவைப்படும் நெல், கோதுமை போன்ற ஒற்றைக் கலாடச்ச்சார (ஒரே பயிர்க் கலாச்சாரம்) பயிர்கள் ஆதிக் கம் பெற்றன. அவைகளுக்கு உள்ளூர் நெல், கோதுமை இனங்களை விட 10 மடங்கு நீர் கூடுதலாக தேவைப் பட்டது.
சிறுதானியங்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டன
சிறுதானியப் பயிர்களுக்கு, கரடு முரடான, தரமற்ற, பழமையான பயிர்கள் என பெயர் சூட்டப்பட்டன. பொது விநியோகத் திட்ட முறையும், நமது உணவில் அரிசி, கோதுமை மட்டுமே மேலாதிக்கம் செலுத்த வழி வகுத்தது. வெள்ளை நிறத்தை விட கருப்பு நிறம் தாழ்ந்தது என்ற கலாச்சார அடிப்படையில்தான், சிறு தானியங்களின் மாவு கருப்பு நிறம் ஆனதால் உணவு இனவெறி புகுத்தப்பட்டது. ஊட்டச்சத்து இல்லாத தீட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியும், சுத்தி கரிக்கப்பட்ட கோதுமை மாவும் தான் நமது உணவு முறையாகிப் போனது. இதனால் பன்முக வேளாண் கலாச்சாரம் கொண்ட சிறுதானியங்கள் நமது விளை நிலங்களில் இருந்து மறைந்தன. ஊட்டச்சத்து பற்றாக்குறையும் நோய்களும் ஏற்பட்டன. பஞ்சாப் மாநிலம் ஜோவார், பஜ்ரா, மக்காச்சோ ளம் விளையும் பூமி. இன்று சம்பா காலத்தில், நெற் பயிரும், குறுவையில் கோதுமை மட்டுமே பயிராகி றது. சிறுதானியம் காணாமல் போனது. நமது உணவும், விவசாய முறையும் காலனித்துவப் படுத்தப்பட்டது. எனவேதான் நமது விதை உணவு இறையாண்மை இயக்கத்தில் சிறு தானியங்களை மையப்படுத்து கிறோம்.
செய்ய வேண்டியது என்ன?
2011-12 இல் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிறுதானியங்களை ஊக்குவிக்கும் முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் குறைபாடு கொண்டதாகிவிட்டது. அது பசுமைப் புரட்சியின் மாதிரியையே பின்பற்றியது. ரசாயன உரங்கள் அதிகமாக தேவைப்படும் ஒற்றைப் பயிர் கலாச்சாரம் கடைப்பிடிக்கப்பட்டது. சிறுதானிய வீரிய விதைகளும், ரசாயன உரங்களும் அறிமுகப்படுத்தப் பட்டன. இதனால் அவைகளின் ஊட்டச்சத்து குறைந்து போய்விட்டது. உற்பத்தி செலவுகள் அதீதமாகி விட்டன. சிறுதானிய சர்வதேச ஆண்டு பல்லுயிரியம், வேளாண் சூழலியல் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும். ஆனால், பதப்படுத்தப்பட்ட சக்கை உணவை தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதின் மூலம் கார்ப்பரேட்டுகள் கொழுத்த அறுவடை செய்கின்றன. அந்த கார்ப்ப ரேட்டுகளே ஐ.நா.வையும் கடத்திச் சென்று விட்டன. சிறுதானியங்களின் எதிர்காலம் சிறு விவசாயி களின் கைகளில் தான் உள்ளது. அவர்களே சிறுதானிய விவசாய முறைக்கு புத்துணர்வு அளிப்பவர்கள்; மீட்டு ருவாக்கம் செய்பவர்கள். சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்து பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிக்க வேண்டும்.
அங்கன்வாடி மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானிய உணவு வழங்க வேண்டும். இதுவே சிறு தானியங்களை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிக ளுக்கு ஆதரவான கொள்கையாகும். குறைந்தபட்ச ஆதாரவிலையும், அரசு கொள்முதலும் நீடித்து நிலைத்த பலனளிக்கும். இவைகளின் மூலம் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். ஏழைகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப் படுத்த முடியும். வாங்கும் திறன் உள்ளவர்கள் ஏற்க னவே தங்கள் உணவு முறையில் மாற்றம் செய்து விட்டனர். பெங்களூருவில் மட்டுமே 500 சிறுதானிய விற்பனை கடைகள் உள்ளன. இன்று,பில்லியனர்கள் ஒரே பயிர்க் கலாச்சார விவ சாயத்தை உலகளாவிய விவசாய முறையாக மாற்றியுள்ளனர். “விவசாயிகள் இல்லாமலே விவசாயம் செய்வது”, “விளைநிலங்கள் இல்லாமலே உணவு தயார் செய்யப்படுவது” என்ற பகுத்தறிவற்ற அறிவியல் விரோத முறையை அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். சூழ லியலை மாசுபடுத்தி உள்ளனர். விவசாயத்தை ஒருங்கிணைந்ததாக இல்லாமல் துண்டு துண்டாக்கி உள்ளனர். இந்தப் பின்புலத்தில் சிறுதானியங்களை உணவு மற்றும் விவசாய முறையில் மையப் பொருள் ஆக்கு வதற்கு ஒருங்கிணைந்த கொள்கையை இந்த அரசு கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது.
மூடுவிழா, திருவிழா
வந்தனா சிவா குறிப்பிட்டது போல மோடியின் அரசு சிறுதானியப் புரட்சி எல்லாம் ஏற்படுத்திவிடும் என்று எதிர்பார்ப்பது வீணானதாகும். 2023-24 பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் இந்தியா சிறு தானிய உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்று முழங்கியுள்ளார். ஆனால், சிறுதானியங்களை ஊக்குவிக்க ஹைத ராபாத் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்கும் என்ற அறிவிப்பைத் தவிர, சிறு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்க உருப்படியாக திட்டம் எதையும் அறிவிக்க வில்லை. சிறுதானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதல் இவைபற்றி எல்லாம் பேசவே இல்லை. வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற்ற போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் டி.கே.ரங்கராஜன் சொன்னார். ‘‘மோடியின் ஆட்சியில் எல்லாமே மூடு விழாக்கள் தான், திருவிழாக்கள் தான்”. மோடியின் அரசு சர்வ தேச சிறுதானிய ஆண்டு என்று அடையாளப்பூர்வமாக திருவிழாக்களை நடத்தி விட்டு சத்தம் இல்லாமல் மூடு விழா செய்யும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
நன்றி: ஃப்ரண்ட்லைன், பிப், 10,2023,
தமிழில்: ம.கதிரேசன்