மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் செப்டம்பர் 16-17 தேதிகளில் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பகுதிகள்
‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்திட மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்த்திட வேண்டும்.
இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தையும், அரசமைப்புச்சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளை யும், குடிமை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு, இந்தியா கூட்டணியை மேலும் ஒருமுகப்படுத்தி, விரிவுபடுத்திடுவதற்கான வேலை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தீர்மானித்திருக்கிறது. பாஜக ஒன்றிய அரசாங்கத்தை யும், பல்வேறு மாநில அரசாங்கங்களையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது அவசியமாகும். இதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தீர்மானித்திருக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பதை உத்தரவாதப்படுத்திட, மக்களை அணிதிரட்டுவதற்காக, நாடு முழுவதும் தொடர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டும் என்று ‘இந்தியா’ அணி சார்பாக பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் நடை பெற்ற மூன்று கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதற்கான முயற்சிகளில் மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்த்திட வேண்டும். இது தொடர்பாக அனைத்து முடிவுகளும் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களால் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு அமைப்புசார் கட்டமைப்பும் இத்த கைய முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்திடக் கூடாது.
ஒரே தேசம் ஒரே தேர்தல்
‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்பது நம் அரசமைப்புச் சட்டம் பொறித்துள்ள நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய இரண்டின் மீதும் ஏவப்பட்டுள்ள தாக்குதலாகும். நாடாளுமன்ற மக்கள வைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை எப்படி நடத்திடலாம் எனப் பரிந்துரைப்ப தற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோயங்கா தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று மோடி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களவைக்குத் தேர்தல் நடத்துவதுடன், மாநில சட்ட மன்றங்களுக்கும் தேர்தல்களை நடத்துவதற்காக சில சட்ட மன்றங்களின் ஆயுட்காலத்தை வெட்டிக் குறைத்திட வேண்டும்; மற்றும் சில சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்திட வேண்டும். இவற்றுக்கு வகை செய்திடும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்திற்குத் திருத்தங்களை முன்மொழிந்திட வேண்டியிருக்கும். மக்களவையிலோ அல்லது சட்டமன்றப் பேரவைகளிலோ ஆளும் கட்சி தன் பெரும்பான்மையை இழக்கும்போது, அது தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது சட்டவிரோதமாகும். இவ்வாறு பெரும்பான்மை இழந்த இடத்தில் தங்கள் அரசாங்கத்தைத் தேர்வு செய்திட மக்களுக்கான உரிமை மறுக்கப்படும் விதத்தில் ஒன்றிய அரசு ஆட்சி புரியுமானால், பின் அது ஜனநாயக விரோத செயலாகும். இந்த முன்மொழிவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
அதானி விவகாரம்
அதானி குழுமம் தங்களுடைய கம்பெனிகளின் மதிப்பையும், சொத்துக்களையும் பூதாகரப் படுத்திக்காட்டி பங்குச்சந்தை விலைகளில் தில்லுமுல்லு களைச் செய்திருப்பது தொடர்பாக புதிய சாட்சியங்கள் வெளிவந்திருக்கின்றன. வினோத் அதானியின் இரு நெருங்கிய சகாக்கள் எப்படியெல்லாம் பெர்முடா தீவில் மூல தன நிதியத்தைப் பயன்படுத்தி, போலி கம்பெனிகளை (shell companies) அமைத்து, அதானி நிறுவனங்களில் மில்லி யன் டாலர்கள் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்று ‘ஓசிசிஆர்பி’ (‘OCCRP’) எனப்படும் ஊழலை அம்பலப் படுத்தும் அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களி லிருந்து, தி ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் தி கார்டியன் ஏடுகள், வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இவை இப்போதிருந்துவரும் ஒழுங்குபடுத்தும் ஷரத்துக் களை முழுமையாக மீறும் செயல்களாகும். மேலும் அந்த அறிக்கையில், அதானி கம்பெனிகள் 2014இல் இவ்வாறு தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட விவகாரம் ‘செபி’ (‘SEBI’)க்கும் தெரியும் என்றும் ஆனாலும் அது பின்னர் இது தொடர் பான விசாரணைகளை முடித்துக்கொண்டுவிட்டது என்றும் கூறியிருக்கிறது. இப்போது வெளிவந்திருக்கும் புதிய சாட்சியங்களின்படி அதானி குழுமத்திற்கு எதிராக ஓர் ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், அத்தகு விசாரணையை மூடி மறைக்காதிருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
தேர்தல் ஆணைய சட்டமுன்வடிவு
தேர்தல் ஆணையர்கள் நியமனம் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பாக ஒரு வரைவு சட்டமுன் வடிவை மோடி அரசாங்கம் சுற்றுக்கு விட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு, தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்களையும் பிரதமர், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகி யோரடங்கிய தெரிவுக் குழு (selection committee)தான் முன்மொழிவு செய்திட வேண்டும் என்கிற உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அளித்திட்ட தீர்ப்பையே மறுதலிக்கிறது. இப்போது முன்மொழியப் பட்டிருக்கிற சட்டமுன்வடிவானது, உச்சநீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக, பிரதமரால் நியமனம் செய்யப்படும் ஒரு கேபினட் அமைச்சர், ஒரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வு மூலம் பரி சீலனை செய்யப்படுவார் என்று கூறுகிறது. இது, தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. இது முற்றிலும் ஜனநாயகவிரோத நடவடிக்கையாகும். இது, தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்து வதற்கு அரசமைப்புச்சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள கட்டளைகளை அரித்துவீழ்த்துகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்திடும் அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவையில் இந்தச் சட்டமுன்வடிவை எதிர்த்து முறியடித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
பயங்கரவாதிகளின் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின், அனந்த்நாக்கில் பயங்கரவாதி களுடன் நடைபெற்ற மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களான, கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் அசிஷ் தான்சக் மற்றும் காவல் துணை கண்காணிப் பாளர் ஹூமாயூன் முசாமில் பட் ஆகியோரின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் அரசியல் தலைமைக்குழு வீர வணக்கங் களை தெரிவித்துக்கொள்கிறது. இது, காஷ்மீரில் அமைதி யையும், இயல்புநிலைமையையும் மீட்டெடுத்துவிட்டோம் என்று மோடி அரசாங்கம் கூறிவரும் ‘லட்சணத்தை’ முழுமை யாக அம்பலப்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
திரிபுராவில் ஜனநாயகம் படுகொலை
திரிபுரா மாநிலத்தில் செப்டம்பர் 5 அன்று இரு சட்ட மன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் களின் போது ஆளும் பாஜக-வினர் மேற்கொண்ட தேர்தல் மோசடி நடவடிக்கைகளை அரசியல் தலைமைக்குழு கண்டனம் செய்கிறது. அங்கே அரசாங்கத்தாலும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அமைப்புகளாலும் நேரடியாகவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்கீழ் ஓர் அசாதாரண மான அராஜக நிலை உருவாக்கப்பட்டது. தேர்தல் மோசடிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தேர்தல்கள் ரத்துசெய்யப்பட்டு, கடுமையான பாது காப்பு ஏற்பாடுகளுடன் புதிதாகத் தேர்தல்கள் நடத்தப் பட்டிருக்க வேண்டும். அரசியல் தலைமைக்குழு, திரிபுராவில் ஆளும் பாஜக-வினரால் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு, ஓர் அராஜகச்சூழல் கட்டவிழ்த்துவிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
ஜி.77 உச்சி மாநாடு
ஜி.20 உச்சிமாநாட்டில் மோடி அரசாங்கம், தாங்கள்தான் ‘தெற்குஉலகின்’ (‘Global South’) தலைவர் என்று தங்களைத்தாங்களே சித்தரித்துக் கொண்டபோதிலும், இதனைத் தொடர்ந்து கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற ஜி.77 உச்சி மாநாட்டில் இந்திய அயல்துறை அமைச்சர் கலந்து கொள்ள வில்லை. இதிலிருந்து, மோடி அரசாங்கம், அமெரிக்கா வின் இளைய பங்காளியாக மாறிவிட்டதும், கியூபாவிற்குப் பயணம் செய்து ‘தெற்குஉலகின்’ சார்பாகத் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதும் தெளிவாகவே தெரிகிறது.
- தமிழில்: ச.வீரமணி