articles

img

வளர்ச்சியை மறுப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

வளர்ச்சிக்கு எதிர்மறையாக இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பேரா.கே.வி.தாமஸ் கூறினார். சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதி யாக கண்ணூரில் நடைபெற்ற ‘மத்திய-மாநில உறவு கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வளர்ச்சிக்கு பொறுப்பானவர் எந்த தலைவர் என்ப தல்ல, அது நாட்டுக்கு நல்லதா என்பதைப்பொறுத்தே முக்கியத்துவம். அதில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்  இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வதில் பெருமை யும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மேடையைப் பார்க்கும்போது வந்தது சரிதான்  என தோன்றுகிறது. காங்கிரசும், எனது சகாக்களும் எனது இந்த வருகையை பலமாகவே உணருவார்கள் என்று நம்புகிறேன். ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், இந்த கருத்தரங்கத் தில் காங்கிரஸார் பங்கேற்க வேண்டும். முன்பெல்லாம் ஏ.கே.கோபாலன் நாடாளுமன்றத்தில் பேசுவதை நேரு ஆர்வமுடன் கேட்பார்.

அதுதான் காங்கிரசின் நடைமுறை. கேரளாவின் வளர்ச்சிக்கு பினராயி விஜயன் பாடுபடு கிறார் என்றால் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதில் அரசியல் இல்லை. கே-ரயில் திட்டம் குறித்து புகார்  இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டும். அதல்லா மல் பினராயி விஜயன் முன்வைக்கும் திட்டம் என்பதால்  எதிர்க்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. வளர்ச்சி வரும்போது நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். முந்தைய திட்டங்கள் அனைத்தும் அப்படித் தான் செயல்படுத்தப்பட்டன. கண்மூடித்தனமான ஆதரவு அல்ல,  அதன் பயனைப்பொறுத்தே ஆதரவு. இந்தியாவின் சிறந்த முதல்வர் பினராயி விஜயன். மற்றவர்களால் முடிக்க முடியாத கெயில் திட்டத்தை நிறைவேற்றியவர். நன்றாக செய்தால், நல்லது என்றுதான் கூற வேண்டும். மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடு களையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டு வரும் வேளையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இது விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புதான். காங்கிர சுக்கும் இது பொருந்தும். கேரள எம்.பி.க்கள் ஒன்று பட்டு நின்றால் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து ஏதாவது பெற முடியும். கோவிட் காலத்தில், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் பாகுபாடு காட்டப்பட்டன. ஒன்றிய அரசின் திட்டக் கமிஷன் ஒழிப்புக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டும். ஆளுநரை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசு நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய புலனாய்வு அமைப்புகள்  பயன்படுத்தப்படுகின்றன. இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லையா? இவ்வாறு அவர் பேசினார்.