articles

img

கடந்து வந்த பாதையும் எதிர்கால இலக்கும்... - எம்.சிவாஜி

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னத்தின் 9 வது மாநில மாநாடு திருவாரூரில் எழுச்சியோடு ஜூலை 10,11 தேதிகளில் நடை பெறும் நேரத்தில் நாம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்ப்பதும், அதன் அனுபவங்களிலிருந்து புதிய திசைவழியில் பயணிப்பதும் அவசியமாகிறது. ஆட்டோ தொழிலாளர்களை, அணிதிரட்ட தியாகத் தழும்பேறிய தலைவர்கள் களத்தில் இறங்கிய போது, சிஐடியு சங்கம் எவ்வளவு பெரிய தியாகம் செய்த சங்கம், போர்க்குணமிக்க சங்கம், பாரம்பரிய மிக்க சங்கம், ரவுடிகளுக்கு, போக்கிரி களுக்கு சங்கம் வைக்கலாமா என்ற கேள்விகளெல்லாம் எழுந்தது. இதே காலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி 420 வழக்கு போடுவது தொடர்ந்தது. அப்பொழுது நமது தலைவர்கள் இந்தக் கூற்றுகளை புறம் தள்ளி ஆட்டோ தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோ சங்கத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினர்.

420 வழக்கு ரத்து

சென்னை, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி,  தூத்துக்குடி, திருச்சி, மதுரை, வேலூர் போன்ற பகுதி களில் ஆட்டோ சங்கத்தை சிஐடியு தலைமையில் அமைக்கத் துவங்கினர். அமைக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களைக் கொண்டு 420 வழக்கு போடு வதை காவல்துறை கைவிட வேண்டுமென்று போராட்டத்தை துவக்கினர். வாடா போடா என்று ஆட்டோ தொழிலாளிகளை அவமரியாதையாக பேசுகிற அதிகாரிகள், ஆட்டோ தொழிலாளர்களை மரி யாதையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினர். தமிழகத்தில் நாம் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் ஆட்டோ தொழி லாளர்கள் மீது அதுவரை ஏவப்பட்டு வந்த அடக்கு முறைகளும், அவர்கள் மீது திணிக்கப்பட்ட 420 வழக்கு களும் ரத்து செய்யப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை. இன்று ஆட்டோ தொழிலாளி கௌரவமாக நடத்தப் படுகிறார்கள். அதற்கு மறைந்த நமது மகத்தான தலைவர்கள் தோழர்கள் தங்கம், நம்பிராஜன், சுகுமாரன், அழகப்பன், போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதல்ல. முதல் மாநாடு (1994) சென்னையில், இரண்டாவது மாநாடு (1998) கோவையில், மூன்றாவது மாநில மாநாடு (2002) திருச்சியில், நான்காவது மாநில மாநாடு (2005) நெல்லையில், 5 வது மாநில மாநாடு (2008) திண்டுக்கல்லில், 6வது மாநில மாநாடு (2012) மதுரை யில், 7-வது மாநில மாநாடு (2015)சென்னை யில், 8 வது மாநில மாநாடு (2018) கோவையில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். 25 ஆண்டுகள் கடந்து வெள்ளி விழாவை கொண்டாடி கம்பீரமாக நடைபோடும் அமைப்பாக சம்மேளனம்   செயல்படுகிறது. ஒவ்வொரு மாநாட்டின் போதும் நமது அமைப்பு விரிவடைந்திருக்கிறது. உறுப்பினர் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஆட்டோ தொழிலாளர்களுக்கான கோரிக்கையை தமிழகம் முழுவதும் அரசின் காதுகளுக்கு எட்டும் வகையில் எடுத்துச் சென்று இருக்கிறோம்

நலவாரியமும் மீட்டர் கட்டணமும்

ஆட்டோ தொழிலாளர்களுக்காக தனி நல வாரியம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடி அதில் நமது சங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. நலவாரியத்தின் மூலம் பல ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் பயன் பெறுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டது நமது சம்மேளனம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மீட்டர் கட்டணம் வேண்டும் என்று போராடி 2013 அறிவிக்க வைத்தோம். மீட்டர் கட்டணம் அமலாக்கம் என்கிற பெயரில் ஆட்டோ தொழிலாளர்கள் மீது அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் வலுவான போராட்டம் நடத்தி அடக்குமுறையை கைவிடச் செய்தோம்.

நமது சம்மேளனம் அறிவித்து நடத்திய போராட்டம்தான் வீடுகளில் நின்று கொண்டிருந்த நமது ஆட்டோ சக்கரங்களை சாலையில் ஓட வைத்தது. இந்தப் போராட்டத்தின் போது நமக்கும் காவல்துறை யினருக்கும் தஞ்சையில், திருவண்ணாமலையில், திருவள்ளூரில், வேலூரில், நெல்லையில் என்று பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. நமது தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடுமையான கொரோனா தொற்று காலத்திலும் “ஆட்டோவை இயக்க விடு, அல்லது ஆட்டோ தொழிலாளர்கள் வாழ பதினை யாயிரம் நிவாரணம் கொடு” என்ற கோரிக்கை யோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி நாம் நடத்திய போராட்டம் அன்று இரவே டிவிகளில் ‘‘விமானம் ஓட்ட அனுமதி, ஆட்டோக்கள் ஓட்ட அனுமதி இல்லையா” என்ற முறையில் டிரெண்டிங் ஆனது. மறுநாள் அனைத்து பத்திரிகை களிலும் செய்தியானது. அடுத்த நாளே - ஆட்டோக் கள் இயங்கலாம் என்று அறிவிக்க வேண்டிய கட்டா யம் அரசுக்கு ஏற்பட்டது.

மருத்துவ சேவை

கொரோனா காலத்தில்  ஊரே உயிருக்கு நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தங்கள் உயிரைப் பற்றி பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ சேவையை செய்ய வேண்டும், குறைந்த கட்டணத்தில் நோயாளிகளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சம்மேளனம் கொடுத்த அறைகூவலை ஏற்று நூற்றுக் கணக்கான ஆட்டோ தொழிலாளிகள் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இதர நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என பலரின் உயிரை காப்பாற்றிய மகத்தான பணியை -  சம்மேளனம் ஆற்றியுள்ளது. பலர் தங்களது ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றி சேவை செய்துள்ளனர்.     பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று  சொல்லி 600 முதல் 1200 வரை வசூல் செய்யப்பட்டது. இதில் உடனடியாக நமது சம்மேளனம் தலையிட்டு வெறும் 270 ரூபாய்க்கு ஒட்டினால் போதும் என்ற உறுதிமொழியை இந்த காலத்தில் பெற்றுத் தந்து இருக்கிறோம். நலவாரிய அலுவலகங்கள் முன்பு பொங்கல் வைக்கும் போராட்டம் நடத்தி ஆட்டோ தொழிலா ளர்களுக்கு உபகரணங்களை பெற்று கொடுத்தி ருக்கிறோம்.         

நலவாரியத்தில் பதிவு பெற்ற ஆட்டோ தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு ஆறாவது முதல் கல்வி நிதி வழங்குவதற்கான அரசாணையை பெற்று தந்து இருப்பதோடு இதர நிதி பலன்களையும் உயர்த்தி வழங்கிட போராடி பெற்று இருக்கிறோம்.    தமிழகத்தில் எங்கே ஒரு ஆட்டோ தொழிலாளி பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு அமைப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இக்காலத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் பெற்றிருக்கிறது. இந்த பெருமிதத்தோடு தான் ஒன்பதாவது மாநில மாநாட்டை சந்திக்க இருக்கிறோம். ஆட்டோ தொழில் இன்றைக்கு கடுமையான நெருக்கடியை சந்திக்கும் தொழிலாக மாறியுள்ளது.வருமானம் பாதித்த தொழிலாக மாறியுள்ள  நெருக்க டியிலிருந்து ஆட்டோ தொழிலையும் தொழிலாளர்க ளையும் பாதுகாப்பதற்கு தீர்வு காணவேண்டிய மாநாடாகத்தான் 9ஆவது மாநாடு அமையவிருக்கிறது. நெருக்கடிகளை கண்டறிந்து அதிலிருந்து மீள்வதற்கான வழி காண திருவாரூரில் கூடுவோம், தீர்வு காண்போம். வாருங்கள் தோழர்களே, என்று உங்களை அன்போடு அழைக்கிறது தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு).

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)