articles

img

கூலிக்காரர்கள் வீட்டு அடுப்பையும் அணைத்து விட்ட மோடி அரசு - ஏ.லாசர்

ஒன்றிய மோடி அரசு 20.1.2024 அன்று ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் இனிமேல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் உள்ள மண் சம்பந்தப்பட்ட வேலைகளை அதாவது தூர்வாருதல், வாய்க்கால் வெட்டுதல், குளம் ஏரி  வெட்டுதல் போன்ற மண்சார்ந்த பணிகளை நிறுத்தி  விட வேண்டும். மனித உழைப்பினால் இயங்கக் கூடிய இந்த பணியின் மூலம் அதிகபட்சமான தொழி லாளிகள் வேலை செய்ய வேண்டியது வருகிறது. எனவே அது நிறுத்தப்பட வேண்டும். மீறி நடத்தி னால் அதற்கான ஊதியம் ஒன்றிய அரசினால் தர  இயலாது. அதே நேரத்தில் பொருட்கள் செல வினத்தின் மூலம் செய்யப்படும் சாதாரண வேலை களை மட்டும் காண்ட்ராக்ட் முறையில் செய்திடலாம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு என்ன செய்ய நினைக்கிறது என்பது பளிச்சென்று புலனாகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கு பல முயற்சி களை செய்து அது தோல்வியடைந்து விட்டது. திட்டமே தேவை இல்லை என்றார்கள். நிதி விரயம் என்றார்கள். முறைகேடு நடக்கிறது என்றார்கள். வேலை செய்யா மல் கூலி தரப்படுகிறது என்றார்கள். சோம்பேறிகளை வளர்த்து விடப்படுகிறது என்றார்கள். வளர்ச்சிக்கான திட்டம் இல்லை என்றார்கள். மொத்தத்தில் இது தேசிய விரயம் என்றார்கள். இது எல்லாம் மிகப்பெரிய தவறு என்றும் உண்மைக்கு மாறானது என்றும் மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தை திட்டமிட்டே அழிக்கச் செய்யும் அவதூறு என்றும் ஆதாரப்பூர்வமாக விளக்கிய பின் அந்த முயற்சியை தொடரவில்லை.

ஆனாலும் ஆர்எஸ்எஸ்சினால் வழி நடத்தப் படுகிற பாஜக அரசுக்கு காந்தியின் பெயரால் ஒரு சட்டம் இருப்பதும் அது 25 கோடி கிராமப்புற கூலித் தொழிலாளி களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதையும் அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு அந்தத் திட்டமே அடிப்ப டையாக அமைந்துள்ளதையும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. காந்தியை கொன்று விட்டோம். ஆனால் காந்தியின் பெயரால் இருக்கும் ஒரு சட்டத்தை நம்மால் அப்புறப்படுத்த முடியவில்லை என்று கருவிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது 2024 ஏப்ரல் மாதத்திலே நாடாளுமன்றத் தேர்தல் வரஇருக்கி றது. அதற்கு முன்னதாக இந்த திட்டத்தை அழிக்க  வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டு நேரடியாக கடிதத்தை அனுப்பி உள்ளது. சட்டத்தில் 100 நாள் வேலைகளில் அதிகபட்சமான மனித உழைப்புக்கும் மண் வேலைகளுக்கும் அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அது கிராமப்புற மக்க ளுக்கு வேலை வழங்குவதோடு, கண்மாய் தூர்வாரல், குளங்கள் அமைத்தல், வாய்க்கால்களை சீரமைத்தல், புதிய வாய்க்கால்களை உருவாக்குதல் போன்ற மண் வேலைகள் அதிகமான மனித உழைப்புக்கு வழிவகுக் கும். எனவே அந்தப் பணிகளை காண்ட்ராக்ட் முறை யில் செய்யக்கூடாது, எந்திரங்களை வைத்து செய்யக் கூடாது என்று  சட்டம் சொல்கிறது. ஆனால் அதற்கு எதிராகத் தான் மோடி அரசு இப்பொழுது எழுதிய கடிதத்தில் மனித உழைப்பை அதிகம் பயன்படுத்தும் மண் சார்ந்த பணிகளை செய்யக்கூடாது என்கிறது. இந்த வாசகமே சட்டத்துக்கு விரோதமானது. மனித உழைப்பை நிராகரிக்கக் கூடியது. குறிப்பாக கூலித் தொழிலாளியினுடைய வேலை வாய்ப்புகளை முழு மையாக பறிக்கக்கூடிய வாசகம். அடுத்து காண்ட்ராக்ட் முறையில் செய்யக்கூடாது என்று சட்டம் சொன்னால் காண்ட்ராக்ட் முறையில் தான் செய்ய வேண்டும். பொருட்களை வாங்கி கட்டுமானப் பணிகள் செய்ய லாம். இதை மட்டுமே செய்ய வேண்டும். இதை மீறிச் செயல்பட்டால் ஒன்றிய அரசு அந்த கூலிக்கான பணத்தை தர இயலாது என்று அழுத்தம் திருத்தமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

ஒரு சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதற்காக அந்த சட்டத்தில் உள்ள வாசகங்களை மாற்றி எழுதி அதை அமல்படுத்தினால் மனிதர்களுக்கு வேலை யில்லாமல் போகும். காண்ட்ராக்ட் வேலைகள் அமலா கும். இது இரண்டும் சில மாதங்கள் அமலானால் தொழிலாளிகள் மத்தியில் இனிமேல் 100 நாள் வேலை கிடைக்காது. அதற்கு முயற்சித்து பயனில்லை என்ற கருத்துக்கள் மேலோங்கும். காண்ட்ராக்ட் வேலைகள் தான் கிடைக்கும். எந்திரங்களின் மூலம் தான் வேலை கள் செய்யப்படும் என்கிற நிலைப்பாடு தொடர்ந்தால் சட்டத்தில் எது கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிற தோ அதைச் செய்வதின் மூலம் அதை நிலை நிறுத்தி னால் காலப்போக்கில் அதை தட்டிக் கேட்பதற்கு யாரும் வர மாட்டார்கள். பல்லாயிரக்கணக்கான தொழிலா ளிகள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுப்பார்கள். அத னால் அவர்களுடைய குரல்வளையை நெரிப்பதற்கான எல்லா விதமான சதித்திட்டத்தையும் மோடி அரசு செய்துள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான காரியத் திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்,  தமிழக விவசாயத் தொழிலாளர் சங்கம் தங்களது கண்டனத்தை தெரிவிப்பதோடு கோடிக்கணக்கான மக்களை பட்டினி போட்டு சாகடிக்கும் நடவடிக்கை யை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.   ஏற்கனவே வேலை அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவின் மூலமாக 2 கோடிப் பேர் வேலை இழந்தனர். நிதியை குறைத்து வேலை கொடுக்கப்படாததினால் 11 கோடிப் பேர் தொடர்ந்து மூன்று வருடங்களாக வேலை கொடுக்கப் படாமல் நிறுத்தப்பட்டனர். அரசு திட்டமிட்டு இந்த காரியத்தை செய்து விட்டு அவர்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வரவில்லை. எனவே இனிமேல் அவர்க ளுக்கு வேலை தர இயலாது. அவருடைய ஜாப் கார்டு களை நாங்கள் ரத்து செய்து விடுவோம் என்று அறிவித்துள்ளது. அதன் மூலம் 11 கோடிப் பேர் வேலை இழக்கின்றனர். இது சமீபத்தில் நடந்தது. இதற்கு தேசம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 13 கோடிப் பேர் பாதிக்கப்பட்டனர். இப்பொ ழுது மீதம் இருக்கும் 12 கோடிப் பேர்களின் வேலையை யும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிறுத்திவிட்டு, காந்தியின் பெயரில் இருக்கும் திட்டத்தையும் கொல்வது என்ற முடிவோடு தான்  இந்த கடிதத்தை மோடியின் அரசு அனுப்பி உள்ளது. இதன் மூலம் இன்றைக்கு 25 கோடி குடும்பங்களின் வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பும் இவர்களால் அணைக்கப் படுகிறது. 

இந்த ஏழைகளை பார்த்து எங்களது ராம ராஜ்ஜி யத்தில் ஏழைகள் அனைவருக்கும் வாழ்வு அளிக்கப் படும். வேலை தரப்படும். அவர்களுக்கு நியாயமான கூலி தரப்படும். பொருட்களின் விலைகள் குறைக்கப் படும். வறுமைக் கோட்டில் இருக்கிற மக்கள் அதிலி ருந்து மீட்கப்படுவார்கள். எங்கள் ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இருப்பதால் ஏழைக ளுக்கு இனி எந்த கஷ்டமும் இல்லை. அவர்கள் வீடுக ளிலே விளக்கேற்றி ராமஜெயத்தை சொன்னாலே வறுமை போய்விடும் என்று நாட்டு மக்களுக்கு மோடி உபதேசம் செய்கிறார். ஊர் ஊராகப் போகிறார். கோயில்களிலே வழிபாடு நடத்துகிறார். புண்ணிய ஸ்தலங்களில் குளித்து வெளியே வந்து மக்களுக்கு காருண்யவான்போல் காட்சியளிக்கிறார். மனிதர்களைக் கொண்டு  100 நாள் வேலை செய்தால், அதற்கான ஊதியத்தை தர முடியாது என்று ஒன்றிய அரசு சொன்னால் எந்த பஞ்சாயத்துகள் இதை மீறி வேலை செய்யும். எந்த அதிகாரிகள் இந்த பணியை  செய்வதற்கு முன் வருவார்கள். இவர்களிடம் இன்று வேலை கேட்டுச் செல்லும் தொழிலாளிகளை பார்த்து ஒன்றிய அரசு பணம் அனுப்பும்போது நாங்கள் இந்த வேலையை துவங்குவோம். அதுவரை நீங்கள் வேலை க்கு வர வேண்டாம் என்று சொல்லி அனுப்புகிறார்கள். இது திட்டமிட்ட சதியல்லாமல் வேறென்ன?  நாடாளு மன்ற தேர்தல் வரும் கடைசி நேரத்தில் கூட இவர்கள் கொடூரமான சிந்தனையோடு செயல்படுகிறார்கள். வஞ்சக நரி சாகும் நேரத்தில் கூட கோழியைக் கொன்று தின்பதற்கு பாய்ந்து பிடிக்கத்தாவி தரையில் விழுந்து சாகும். அந்த நிலைதான் இவர்களுக்கு ஏற்படும்.

திமுக அரசு மீது பழி போட முயற்சி

தமிழ்நாடு முழுவதும் இப்பொழுது பெரும்பகுதி யான பஞ்சாயத்துகளில் மோடி அரசினுடைய கடிதமே அமல் செய்யப்படுகிறது. வேலையில்லா தொழிலாளி களுக்கு இதற்கு யார் காரணம் என்பது புரியாது. மாநிலத்தில் இருக்கும் திமுக அரசின் மீது தான் மக்களுக்கு கோபம் ஏற்படும். அப்படி வர வேண்டும் என்பதுதான் மோடி பாஜக அரசினுடைய திட்டம். ஏனென்றால் இதற்கு ஒன்றிய அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்கிறது என்ற விவரம் தெரியாத மக்கள் தான்  90 சதவீதம் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில்  இந்த வேலைகள் வழங்கப்படவில்லை என்றால் இதை  இவர்கள் எப்படி பிரச்சாரமாகக் கொண்டு செல்வார்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் பாண்டிச்சேரியில் 100 நாள் வேலை அங்கே வழங்கப்படுகிறது. நாங்கள்  வேலைகளை நிறுத்தும் எந்த தகவலையும் பஞ்சாயத்து களுக்கு சொல்லவில்லை என்று அங்குள்ள அதிகாரி கள் சொல்லுகிறார்கள். அப்படி நிறுத்த வேண்டும் என்று எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை என்கி றார்கள். பாஜக ஆளுகிற பாண்டிச்சேரியில் பழைய நடைமுறையும், எதிர்க்கட்சியான திமுக ஆளும் தமிழ்நாட்டில் வேறு நடைமுறையும் என்றால் அது திட்டமிட்ட சதி தானே!

பாஜக அரசு எடுத்துள்ள இந்த நிலைபாட்டை உடனடியாக கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தை பத்திரிகைகளின் வாயிலாக மக்க ளுக்கு தெரியப்படுத்தி மோடி அரசினுடைய வஞ்சகத் தனத்தை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொண்டுள்ளோம்.   நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பை  வைத்து நல்லவர் போல் நடிப்பார் ஞான தங்கமே அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞான தங்கமே என்ற திரைப் படப் பாடல் மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் பாஜகவுக் கும் தான் பொருந்தும்.அந்த வஞ்சக நெஞ்சு உடைய வர்களிடமிருந்து இந்த நாட்டை மீட்க வேண்டிய கடமை இந்த நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கும் மதச்சார் பற்ற சக்திகளுக்கும் இந்திய மக்களுக்கும் உள்ளது. 

கட்டுரையாளர்: அகில இந்திய துணைத் தலைவர்,  விவசாயத் தொழிலாளர் சங்கம்