பி.சம்பத்
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
1940களில் நிலப்பிரபுக்களுக் கும் அவர்கள் தாங்கிப் பிடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்கள் லட்சோப லட்சக்கணக்கான மக்களின் தேசபக்தியை தட்டியெழுப்பியது. இதில் கையூர் தியாகிகளின் போராட்டமும் ஒன்று. கம்யூ னிஸ்ட் இயக்க வரலாற்றில் இது மிகுந்த உத்வேகம் ஊட்டும் நிகழ்வாகும்.
கையூர் போராட்ட தியாகிகள்
ஆம்!, நான்கு இளம் கம்யூனிஸ்ட்டுகள் - மடத்தில் அப்பு, குஞ்ஞம்பு நாயர், சிறுகண்டன், அபுபக்கர் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்க வர்கள். 25 வயதிற்குட்பட்ட துடிப்பு மிக்க இளைஞர்கள் இவர்கள். கேரள மாநிலத்தின் அன்றைய காசர்கோடு மாவட்டத்தின் (இன்றைய கண்ணூர்) கையூர் கிராமத்தைச் சார்ந்த இவர்கள் கேரள மக்களால் இன்றள வும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்படு கிறார்கள்.
கிராமப்புற விவசாய இயக்கத்தை காசர் கோடு மாவட்டத்தில் கட்டுவதில் வரலாற்றுத் தடம் பதித்தவர்கள் இவர்கள். அக்காலத்தில் குத்தகை விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமான எந்த உரிமையும் கிடையாது. நிலவுடமை யாளர்களின் கொடூரமான சுரண்டலுக்கு ஆளானவர்களாக இவர்கள் இருந்தார்கள். இவர்களைத் தட்டியெழுப்பி உரிமைகளுக் காக கம்யூனிஸ்ட்டுகள் வலுவான போராட்டங் களுக்கு திட்டமிட்டார்கள்
இப்போராட்டங்கள் நிலப்பிரபுக்களை நிலைகுலைய வைத்தது. இவர்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காவல்துறை களத்தில் இறங்கியது. கையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங் களின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்தனர். சோத னை என்ற பெயரால் விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கொடூர மாகத் தாக்கினார்கள். தாக்குதலிலிருந்து பெண்களும், குழந்தைகளும் கூட தப்பவில்லை. பிரிட்டிஷ் அரசின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து 1941 மார்ச் 18ல் பல்லாயிரக்கணக் கானோரை கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைமையிலான விவசாய இயக்கமும் கையூரில் அணி திரட்டியது. ஆவேசமிக்க பேரணியும் ஆர்ப்பாட்டமும் அங்கு நடந்தது. இப்போராட்டத்தை அடக்க மலபார் சிறப்பு போலீஸ் படையை அரசு நிர்வாகம் கொண்டு வந்தது.
இப்போராட்டத்தில் காவல்துறை அத்து மீறி நடந்து கொண்டது. பேரெழுச்சியாய் நடை பெற்ற பேரணியின் நடுவே ஒரு போலீஸ்காரர் அத்துமீறி உள்ளே புகுந்தார். பேரணியில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இச்சம்பவத்தை பேரணியில் வந்தவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்களா? ஆத்திரமடைந்த மக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் அந்த போலீஸ்காரர் ஆற்றில் குதித்து மரணமடைந்தார்.
நீதிமன்ற வழக்கு
இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அரசின் சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணைகள் நடந்து கொண்டி ருந்த போது “இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் குற்றவாளி யார் என திட்டவட்டமாக கண்ட றிவது சிரமம்” என்று தான் முதலில் நீதிபதி தெரி வித்தார். காவல்துறையினராலும் குற்ற வாளியை ஆதாரங்களோடு அடையாளம் காட்ட முடியவில்லை என்பதோடு குற்றத்தை நிரூபிக்கவும் முடியவில்லை. அவர்கள் அழைத்து வந்த சாட்சிகள் அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக உளறினார்கள்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத ஒன்று என்று தான் அன்றைய தினம் பொதுக்கருத்தாக இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் அரசுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இந்த விசாரணை ஒரு நாடகம் தானே?. கம்யூ னிஸ்ட்டுகளை தண்டிக்க வேண்டுமென்பது அவர்கள் எடுத்த முன்முடிவு. இந்த நிர்ப்பந்தத் திற்கு நீதிபதியும் ஒரு கருவியாக செயல்பட்டார். வழக்கின் தீர்ப்பாக நான்கு பேரை தூக்கிலிடு மாறு உத்தரவிட்டார். அந்த நான்கு பேர் தான், மேலே குறிப்பிட்ட துடிப்புமிக்க இளைஞர்கள்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
பிரிட்டிஷ் அரசின் சாம்ராஜ்யத்தில் அப்பீல் மனு, கருணை மனு என எதுவும் எடுபட வில்லை. மக்களின் போர் முழக்கத்திற்கும் கொந்தளிப்புக்கும் மத்தியில் நான்கு இளைஞர்களும் தூக்கிலிடப்பட்டார்கள். தூக்கிலிடுவதற்கு முன்னதாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அகில இந்திய தலைவர்கள் இவர்களை சிறைச்சாலையில் சந்தித்தார்கள். தோழர்கள் பி.சி. ஜோஷி, பி. சுந்தரய்யா, பி.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் தான் அத்தலைவர்கள்.
உணர்ச்சியும், துக்கமும் நெஞ்சில் அடைக்க அவர்கள் அந்த இளை ஞர்களிடம் பேசினார்கள். ஆனால், மிகுந்த உணர்ச்சியோடும், உத்வேகத்தோடும் அவர்கள் தலைவர்களை நோக்கி கூறிய வார்த்தைகள் இதோ: “தூக்கிலிடப்படுவதற்காக நாங்கள் வருந்த வில்லை. மனத்தளர்வும் எங்களிடம் இல்லை. பகத்சிங் போன்ற மகத்தான போராளிகள் என்றென்றும் எங்களை உத்வேகமூட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் விடு தலைக்காக, சுரண்டப்படும் மக்களின் விடி யலுக்காக எங்கள் இன்னுயிரைத் தருவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். நாங்கள் உறுதியாக நம்புகிறோம் - இந்திய விடுதலைப் போரில் மக்களே இறுதி வெற்றிபெறுவார்கள்.
தேச விடுதலையோடு இணைத்து கம்யூ னிஸ்ட்டுகள் நடத்தும் வர்க்கப் போராட்டம் வெல்லும் என்பது உறுதி. கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க! இன்குலாப் ஜிந்தாபாத்!” இந்த வீரமுழக்கத்தைக் கேட்ட கம்யூ னிஸ்ட் இயக்க தலைவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டனர். கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. கனத்த இதயத் தோடு நான்கு தோழர்களுக்கும் போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்து விடை பெற்றார்கள். கேரள மாநிலத்தின் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கு ரத்த சாட்சியமாய் இணைந்தவர்களில் கையூர் தியாகிகளும் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.
ஒரு கையூர் போராட்டம் அல்ல; நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கையூர் போராட்டங்களை அக்காலத்தில் தலைமை யேற்று நடத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான விவசாய இயக்கம் (கிசான் சபா) நடத்திய ஏராள மான போராட்டங்களை இங்கு பட்டியலிட முடியும். இப்போராட்டங்களில் ஒன்றுதான் வொர்லி ஆதிவாசி மக்களின் போராட்டம்.
வொர்லி போராட்டம் - ஆதிவாசி மக்கள்
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் அமைந்தது தான் வொர்லி கிராமம். வொர்லி யிலும் இதையொட்டிய நூற்றுக்கணக்கான மலைக்கிராமங்களிலும் ஆதிவாசி மக்கள் நிலப்பிரபுக்களால் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக வனத்துறையில் செயல்பட்ட அதிகார வர்க்கம் வன்கொடுமைத் தாக்குதல்களை வரம்பின்றி ஏவி வந்தன. மலைக்கிராமங்களில் ஆதிவாசி மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
இவர் களின் கையிலிருந்த கொஞ்ச நஞ்ச நிலத்தை யும் அற்பக் கடன் தொகையைக் காரணம் காட்டி நிலப்பிரபுக்களும், கந்துவட்டிக் காரர்களும் கைப்பற்றிக் கொண்டார்கள். வழக்கம்போலவே பிரிட்டிஷ் இந்திய அரசு சுரண்டும் வர்க்கங்களுக்கு துணை நின்றன. ஆதிவாசி மக்களையும் அவர்களுக்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் வேட்டையாடுவதில் அரசு நிர்வாகமும், அதி கார வர்க்கமும் அத்துமீறிச் செயல்பட்டன.
வொர்லி ஆதிவாசி மக்களை சுரண்ட லிலிருந்தும், கொத்தடிமைத்தனத்தி லிருந்தும் விடுவிப்பதில் கம்யூனிஸ்ட் இயக்கம் உறுதிகாட்டியது. அவர்களின் உத் வேகமிக்க தலைவர்களான கோதாவரி பரு லேகர், அவரது கணவர் சாம்ராவ் பருலேகர், விளங்கினர். இவர்கள் தலைமையிலான கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஆதிவாசி மக்களை அணி திரட்டி போர்க் களத்தில் இறக்கின.
கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த முழக்கம்
போராட்டத்தில் இறங்கிய ஆதிவாசி மக்களிடையே நான்கு முழக்கங்களை கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் முன்வைத்தன. அவை
1. கூலியை பணமாகத் தராத நிலப்பிரபுக் களின் நிலங்களில் வேலை செய்யாதே!
2.நிலப்பிரபுக்களுக்கு இலவச வேலை செய்யாதே!
3.நிலப்பிரபு உன்னைத் தாக்கினால் பொறுத்துக் கொள்ளாதே! திருப்பித் தாக்கு!
4. நீங்கள் அனைவரும் ஒற்றுமைக்காப்பது அவசியம்! இந்த முழக்கங்கள் அனைத்தும் புதிய பகுதிகளிலும் ஆதிவாசி மக்களை ஈர்த்தது. அம்மக்களை தட்டியெழுப்பும் முழக்கங்களாக இவை அமைந்தன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிலப்பிரபுகளுக்கும், கந்து வட்டிகாரர்களுக்கும் எதிராக ஆதிவாசி மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களும், ஊழியர்களும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களுக்கு தைரியத்தையும், போர்க் குணத்தையும் ஊட்டினார்கள்.
போராட்ட எழுச்சி
இப்போராட்ட எழுச்சியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமைகள் நிலப்பிரபுக்களிட மிருந்து பலவந்தமாக மீட்கப்பட்டார்கள். இதுமட்டுமல்ல; நிலப்பிரபுக்களின் போக வாழ்க்கைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர்களின் மனைவிமார்களும் விடுவிக்கப் பட்டார்கள். இதனைத் தொடர்ந்து மலைக்கிரா மங்களில் செங்கொடியை உற்சாகத்தோடு பறக்கவிட்டார்கள்.
மலைக்கிராமங்களில் ஏற்றப்பட்ட செங்கொடிகளை அப்புறப்படுத்த பிரிட்டிஷ் போலீசார் அத்துமீறி கிராமங்களுக்குள் நுழைந்தனர். அவர்கள் செங்கொடிகளை அப்புறப்படுத்த முயன்றபோது ஆவேசத்து டன் திரண்ட ஆதிவாசி மக்கள் கொடிக்கம் பத்தைச் சுற்றி நின்று தடுத்தார்கள். பல கிராமங் களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்து பலர் கொல்லப்பட்டனர். எனினும், ஆதிவாசி மக்கள் அடிபணியவில்லை.
பிரிட்டிஷ் அரசின் அதிகார வர்க்கமும், காவல்துறையும் போராடும் ஆதிவாசி மக்கள் மீதும், தலைமையேற்ற கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மீதும் அடைந்த ஆத்திரங்களுக்கு அளவே இல்லை. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில் பிரிட்டிஷ் இந்திய அரசின் கீழ் செயல்பட்ட மராட்டிய மாநில காங்கிரஸ் அரசும் இப்போராட்டத்திற்கு எதிராக திரும்பி ஆதிவாசி மக்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் ஒடுக்க இணைந்து கொண்டதுதான்.
பிரிட்டிஷ் அரசால் போராடிய ஆதிவாசி மக்களும், கம்யூனிஸ்ட்டுகளும் வேட்டை யாடப்பட்டார்கள். கொடூரமாகத் தாக்கப் பட்டார்கள். கிராமங்களிலிருந்து பலவந்த மாக வெளியேற்றப்பட்டார்கள். இந்த ஒடுக்கு முறையை ஜெர்மனியில் கம்யூனிஸ்ட்டு களுக்கு எதிராக நாஜிக்கள் நடத்திய கொடூரங்களுக்கு நிகராக ஒப்பிடலாம்.
வேலைநிறுத்தம் - வரலாற்று வெற்றி
ஆயினும், இந்தக் கொடூரத் தாக்குதல்கள் எதுவும் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாட்டையோ, ஆதிவாசி மக்களின் எழுச்சியையோ தடுக்க இயலவில்லை. நிலப்பிரபுக்களின் தோட்டக் காடுகளில் ஆதிவாசி மக்கள் வேலைக்குச் செல்லாமல் ஒருமாத காலம் வேலைநிறுத்தம் செய்தார்கள். இது அவர்களின் வலிமையான போர்க்குணத்தை பறைசாற்றுவதாக இருந்தது. இதனால் மரம் வியாபாரம் செய்யும் வணிகர்களும், நிலப்பிரபுக்களும் பெரும் சிர மங்களையும், இழப்புகளையும் எதிர் கொண்டனர். இந்நிலையில் வேறுவழியின்றி கம்யூ னிஸ்ட்டுகள் தலைமையிலான விவசாய சங்கத்துடன் கௌரவமான ஒரு ஒப்பந்தத் திற்கு வரவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆதிவாசி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கந்து வட்டியிலிருந்து ஏராளமானோருக்கு விடுதலை கிடைத்தது. இது வொர்லி மற்றும் சுற்றுவட்டார மலைவாழ் மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். செங்கொடி இயக்கத்திற்கு இது மகத்தான சாதனையாகும். பிரிட்டிஷ் அதிகார வர்க்கம், காங்கிரஸ் மாநில அரசின் அடக்குமுறைகள் அனைத்தும் போராட்டங் கள் முன்பு தவிடுபொடி ஆயின. உள்ளூர் சுரண்டல்காரர்களுக்கு மட்டுமல்ல; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய பின்ன டைவாக இப்போராட்ட வெற்றி அமைந்தது.
சித்தாந்த தெளிவு வரலாற்று வெற்றி
பெற்ற வொர்லி பகுதி ஆதிவாசி மக்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கம் அரசியல் தெளிவையும், சித்தாந்த தெளிவையும் ஊட்டி வளர்த்தது. சோசலிசம் பற்றியும் சோவியத் யூனியன் சாதனைகள் குறித்தும் அம்மக்களுக்கு விளக்கி கூறப் பட்டன. அரசியல் சித்தாந்த போதனை இம்மக் களை கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு நெருக்க மாக பிணைத்தது. ஏராளமான இளைஞர்கள் மார்க்சிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் களாக மாறினார்கள். இன்றளவும் மராட்டிய மாநிலம் தானே மாவட்ட மலைப்பகுதிகள் கம்யூனிஸ்ட் இயக்க த்தின் கோட்டைகளாக விளங்கி வருவதன் பின்னணி இதுதான்.
பல தேர்தல்களில் மட்டுமல்ல; சமீபத்திய தேர்தல்களிலும் கூட கம்யூனிஸ்ட் இயக்கத்தை இப்பகுதியில் முதலாளித்துவ கட்சிகளால் வெல்ல முடிய வில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு பின்புலத் தோடு நடத்திய வீரமிக்க வர்க்கப் போராட்டங் கள் இதன் அடித்தளமாகும். ஆம். போராட்டங் கள், தியாகங்கள் ஒருபோதும் வீணாவது இல்லை. இவையனைத்தும் எதிர்கால புரட்சிகர இயக்கத்தை- இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை பலப்படுத்த நம் கண்முன் உள்ள வழிகாட்டும் உதாரணங்களாகும்.