தருமபுரி நகரம், அன்னசாகரத்தைச் சேர்ந்த நாராயணன் மகனாக 1886ம் ஆண்டு பிறந்தவர் டி.என்.தீர்த்தகிரி என்னும் தீர்த்தகிரியார். அதிகம் படிக்காத இவர் சித்த வைத்தியராகவும், இலக் கியவாதியாகவும் வலம் வந்தவர். புரட்சி வழி யில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சிதம் பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிர மணிய பாரதியார், ஆகியோரது அணியில் அவர் களின் தோழராக இருந்தவர் தீர்த்தகிரியார். 1930ல் உப்பு சத்தியாகிரகத்திற்காக கண்ண னூர் சிறையில் ஒன்றரை ஆண்டுகளும், 1931ல் சட்ட மறுப்பு போராட்டத்திற்காக திருச்சி சிறை யில் ஒன்றரை ஆண்டுகளும், 1942ல் வெள்ளை யனே வெளியேறு முழக்கத்திற்காக 2 ஆண்டு களும் அலிபுரம் சிறையிலும் தண்டனை அனுப வித்துள்ளார். கண்ணனூர் மற்றும் திருச்சி சிறை யில் இருந்தபோது தான், சுப்ரமணிய சிவாவின் நட்பு வலுப்பெற்றது. இவரின் துணிச்சலைக் கண்ட சுப்ரமணிய சிவா இவருக்கு ‘எம்டன்’ என்று பெயரிட்டார். சிவா சிறையிலிருந்து தன் சொந்த ஊரான வத்தல குண்டு செல்லாமல் தீர்த்தகிரியாருடன் தரும புரிக்கு அருகிலுள்ள பாப்பாரப்பட்டி சென்று தன் இறுதி காலத்தை அங்கேயே கழித்தார். இதற்கு தீர்த்தகிரியின் அன்பே காரணம். தீர்த்தகிரியார் சிலகாலம் பாரதியாருடன் தலை மறைவாகவும், சிலகாலம் நாடு கடத்தப்பட்டும் பாண்டிச்சேரியில் இருந்தார். மக்களின் விடுதலை போராட்டத்தை ஊக்குவிக்க தீர்த்தகிரியார் 1901ல் சுவாமி விவேகானந்தரையும் 1921ல் காந்தியை யும், 1937ல் நேருவையும் தருமபுரிக்கு வரவழைத் தார். நாட்டின் விடுதலைக்காகவே தமது உடல், உழைப்பு, உயிர் அனைத்தையும் அர்ப்பணித்த வர். இவர் சிறையில் இருந்தபோது, கைதிகளுக்கு வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் வரும் போது இவர் தனது ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார்.
சிறை அதிகாரிகளே இவரிடம் வந்து இன்ன கைதிக்கு உடல்நலம் இல்லை, நீங்கள் மருந்து கொடுங்கள் என்று வாங்கி கொடுப்பதும் வழக்கம். இவர் ஒரு பல்பொடி தயாரித்திருந்தார், அதற்கு பெருந் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் நினைவாக “சித்த ரஞ்சன் பல்பொடி” என்று பெயரிட்டிருந்தார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சுப்பிர மணிய சிவா கட்ட விரும் பிய பாரத மாதா ஆல யத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தலைவர் சித்தரஞ்சன் தாசை அழைக்க இவரே கார ணமாக இருந்தார். இவர் இந்தப் பகுதி யில் செல்வாக்குள்ள நிலச்சுவாந்தார். தனது சொத் துக்களைச் சிறுகச் சிறுக விற்று சுதந்திரப் போராட் டத்திற்காகச் செலவு செய்து விட்டார். இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வயது 67. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இவ ருக்கு தள்ளாமையும் வறுமையும் வந்து சேர்ந் தது. 1946இல் அந்தப் பகுதியில் ஒரு ஏரி உடைப் பெடுத்த காரணத்தால் இவரது வீடும் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஏழ்மையின் பிடியில் இவர் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 1953 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி இறந்தார். இவர் பெய ரால் “தியாகி தீர்த்தகிரியார் சதுக்கம்” என்ற இடம் இருக்கிறது. இவருடைய நினைவாக தருமபுரி நகர் மன்ற மைதானம் “தியாகி தீர்த்தகிரியார் மைதானம்” எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.