ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னொரு விவாதமும் நடத்தப்பட வேண்டும். வலதுசாரி சித்தாந்த ஆட்சியில் நிதி நிலை அறிக்கைகூட எப்படி சிறுபான்மை மக்களை தாக்கும் என்பதுதான் அது. இந்த நிதி நிலை அறிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலை எந்த பின்னணியில் நடத்துகிறது என்று பார்ப்பது மிகவும் அவசியமாகும். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்க ளின் கல்வி வாய்ப்பு மீது கடும் தாக்குதலை இந்த நிதி நிலை அறிக்கை தொடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள உண்மைத் தன்மையுடன், சச்சார் குழு பரிந்துரையின் பின்னணியுடன் இதை அணுகலாம்.
2 குழுக்களின் பரிந்துரைகள்
2004இல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ‘குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் அறிவித்த படி 2005 மார்ச் 9 அன்று முஸ்லிம்களின் சமூக, பொரு ளாதார, கல்வி சார்ந்த நிலையைக் குறித்து ஆய்வு செய்ய சச்சார் குழுவை நியமித்தது. அது மட்டுமல்ல 2006 ஜன.29 அன்று முதன் முதலாக சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கான அமைச்சகமும் தில்லியில் உருவாக்கப்பட்டது. சச்சார் குழு 2006 நவ.17 இல் தன் அறிக்கையை அளித்தது. அதன் பின் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த அந்த ஐ.மு.கூ அரசு தனது பதவி முடியுமுன் 2013 ஆக.5 அன்று பேரா. அமிதாப் குண்டு தலைமையில் பத்துபேர் கொண்ட இன்னொரு வல்லுனர் குழுவை அமைத் தது. அது ‘சச்சாருக்குப் பிந்திய காலகட்டம் பற்றிய மதிப்பீட்டுக் குழு’ என அறியப்பட்டது. சச்சார் குழு அறிக்கைக்குப் பிந்தைய காலத்தில் சிறுபான்மை மக்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமிதாப் குண்டு குழு செப்.29, 2014 அன்று தன் அறிக்கை யைச் சமர்ப்பித்தபோது மத்தியில் பா.ஜ.க அரசு பதவி யில் இருந்தது. இந்த குழு அறிக்கையைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி அரசு, இந்த அறிக் கையை முற்றாகக் கைவிட்டுவிட்டது. “மொத்த மைனா ரிட்டிகளையும் பற்றிப் பேசாமல் குண்டு அறிக்கை முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பேசியுள்ளது. அது மேற்கொண்ட ஆய்வு முறை தவறானது. தகவல்கள் ஒழுங்காகத் திரட்டப்படவில்லை” என்றெல்லாம் கூறி பேரா. அமிதாப் குண்டு குழு அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் குப்பையில் எறிந்தது. அந்த அறிக்கை கீழ்கண்டவாறு தரவுகளை தருகிறது.
அரசுப் பணிகளில் எண்ணிக்கை சரிவு
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் கிட்டத் தட்ட 25 சதவீதம். ஆனால் 2006-07 முதல் 2012-13 வரை யிலான காலகட்டத்தில் ‘குரூப் ஏ’ அரசுப் பணிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினர் வெறும் 7.5 சதவீதம்தான். ‘குரூப் பி’ யில் 9.1 சதவீதம்; ‘குரூப் சி மற்றும் டி யில்’ 8.6 சதவீதம் மட்டுமே. முஸ்லிம்கள் மத்தியில் கல்வி அறிவு இந்துக்க ளைக் காட்டிலும் குறைவு என்ற போதிலும் கல்வி அறிவு வீதத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஆண்களுக் கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடை யாது. எனினும் கல்வி பெறுவதில் முஸ்லிம்களின் வீதம் பழங்குடியினரின் (ST) அளவே உள்ளது. சச்சார் அறிக்கையின்படி 2001இல் இருந்த மொத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,209. இதில் முஸ்லிம் அதிகாரிகள் வெறும் 128 தான். அதாவது 4 சதவீதம். மக்கள் தொகையில் 14.2 சதவீதமாக உள்ள முஸ்லிம்கள் ஐ.பி.எஸ் அதிகாரத்தில் வெறும் 4 சதவீத மாகவே இருந்தனர். ஜனவரி 2016இல் ஐ.பி.எஸ் அதி காரிகளின் மொத்த எண்ணிக்கை 3754 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது முஸ்லிம் அதிகாரி களின் எண்ணிக்கை 120 ஆகக் குறைந்துள்ளது. அதாவது வெறும் 3.19 சதவீதம்தான்.
2006 இல் இப்படி மாநில அளவில் பதவி உயர்வு மூல மாக ஐ.பி.எஸ் ஆனோர் 912 பேர். இதில் 65 பேர்கள் மட்டுமே முஸ்லிம்கள் (7 சதவீதம்). 2016இல் இப்படிப் பதவி உயர்வு பெற்றோர் 1150 பேர். இதில் முஸ்லிம் கள் 44 பேர்தான் (3.82 சதவீதம்). அதாவது மாநிலங்களி லிருந்து பதவி உயர்வோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் பங்கு குறைந்து கொண்டே போகிறது. போட்டித் தேர்வில் பங்குபெற்று ஐ.பி.எஸ் அதிகாரி களானோர் 2006இல் 2,297 பேர் (2.7%). 2016இல் இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டோர் 2,604. இதில் முஸ்லிம்கள் 76 பேர் (2.91%). ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய இரண்டு பதவிக ளுக்கும் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 172. இதில் உ.பி-யைச் சேர்ந்தோர் 48. பீஹார் மாநிலத்தவர் 34. ஜம்மு- காஷ்மீர் 22. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகம் உள்ளிட்ட பிற 26 மாநிலங்களை யும் சேர்ந்தோர் 58 பேர்கள் தான். ஒட்டு மொத்தமாகக்காவல்துறையில் முஸ்லிம்க ளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் மொத்த காவல்துறை பணியாளர்க ளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் வீதம் 7.63 சதவீதம். இது 2013இல் 6.27 சதவீதமாகக் குறைந்தது. 2014இல் பா.ஜ.க ஆட்சி வந்தபின் காவல்துறை போன்ற முக்கியமான துறைகளில் இது போன்ற புள்ளி விவரங்க ளைத் தர இயலாது என அறிவித்துள்ளது.
மிக மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு
இந்த பின்னணியில் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை (2023-24) எப்படி முஸ்லிம் மக்கள் மீது தாக்கு தல் தொடுத்துள்ளது என பார்க்கலாம். சிறுபான்மை அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டை விட 38 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை மக்கள் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உரு வாக்கும் என்று சொல்லாமலேயே விளங்கும். அனைத்தையும் உள்ளடக்கிய நிதி நெருக்கடியின் கீழ் மிக மோசமாக பாதிக்கப்பட்ட திட்டம் என்பது மதர ஸாக்களுக்கான கல்வித் திட்டம் ஆகும். இது 93 சத வீதம் நிதி குறைப்பினால் தடுமாறும் நிலையை சந்தித் துள்ளது. கடந்த ஆண்டிற்கு முன் ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு 160 கோடி யாக குறைக்கப்பட்டு, இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் 10 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. இது எத்தனை மோசமான தாக்குதல். சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்காக இருந்த மொத்த ஒதுக்கீடு ரூபாய் 2,515 கோடியிலிருந்து ரூ.1,689 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மை யினர், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர்களின் ஆராய்ச்சி திட்டங்களுக் கான ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக அதாவது ரூபாய் 41 கோடியிலிருந்து 20 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ரிமெட்ரிக் நிதியை பெருமளவில் குறைத்துள்ளது. சிறுபான்மையினருக்கான உதவித்தொகை ரூபாய் 1,425 கோடியிலிருந்து ரூபாய் 433 கோடியாக குறைந்துள்ளது. வரவிருக்கும் நிதியாண்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூபாய் 1,650 கோடியிலிருந்து 600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பெயரளவுக்கு...
சிறுபான்மை மாணவர்கள் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் எழுத மோடி அரசால் பெருமையாக விளம் பரம் செய்யப்பட்ட திட்டம்தான் நை உதான் திட்டம் (Nai Udaan Scheme) இது குறித்து சிலாகித்து பாஜகவி னர் எல்லா இடங்களிலும் பேசி வந்தனர். ஆனால் அந்த திட்டம் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் அந்த ரத்தில் தொங்குகிறது. சிறுபான்மையினரின் தலை மைத்துவ வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 2.5 கோடியிலிருந்து வெறும் ரூ.10 லட்சமாக குறைந்துள்ளது. ஹமாரி தரோஹர் சிறுபான்மையி னரைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 2 கோடியிலிருந்து வெறும் ரூ.10 லட்ச மாக குறைந்துள்ளது. இன்னொரு மோசமான பாதிப்பு சிறுபான்மை யினர் மத்தியில் திறன் மேம்பாடு முன்முயற்சி நிதி 2022 - 23 இல் ரூபாய் 235 கோடியாக இருந்தது தற்போது வெறும் 10 லட்சமாக குறைந்துள்ளது. சிறுபான்மையி னரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதா ரத்திற்கான நை மன்சில் திட்டம், ரூபாய் 46 கோடியிலி ருந்து 10 லட்சமாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. சிறு பான்மையினர் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி வளர்ச்சிக்கான பாரம்பரியக் கலைகள்/கைவினைகள் திட்டத்துக்கான நிதி ரூ.47 கோடியி லிருந்து 10 லட்சமாக பெயரளவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
நோக்கம் ஒன்றே
இதை வெறும் நிதி ஒதுக்கீட்டில் குறைப்பாக மட்டும் பார்க்க இயலாது. ஏனெனில் வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலின் ஒரு கண்ணி இந்த பொருளாதா ரத் தாக்குதல். சச்சார் கமிஷனும், அதன் பின் குண்டு கமிஷனும் சிறுபான்மையினர் வாழ்க்கை நிலை குறித்தும் அதை மாற்றுவதற்கான ஆலோசனைகளை யும் மிகுந்த அக்கறையுடன் அறிக்கைகளாக கொடுத்த பின்னரும், இஸ்லாமியர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை கிடப்பில் போட்டது மட்டுமல்ல, இஸ்லா மிய மக்கள் வாழ்க்கையில் மேலும் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைக்கிறது பாசிச குணம் கொண்ட ஆட்சி. பாசிச அமைப்புகள் உலகம் முழுவதும் செய்யும் எதிர் அடையாள கட்டமைப்பும், அந்த கட்டமைப்பை காரணம் காட்டி பெரும்பான்மை இனத்தையோ அல்லது மதத்தையோ ஒன்று திரட்டுவதும், மோதல் களை உருவாக்குவதும் அடிப்படை உத்தியாக இருக்கி றது. அதன் இந்திய வடிவம்தான் சங் பரிவார் அமைப்பு கள் வார்த்தைகளால் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருவதும், முடிந்த இடங்களில் தாக்குதல் தொடுப்பதும். இவர்களில் விஸ்வகுருவான நரேந்திர தாமோதர் மோடி தனது ஆட்சியில் இந்த பணியை நிதி நிலை அறிக்கை மூலம் செய்கிறார். இவர்களின் நோக்கம் ஒன்றுதான். இஸ்லாமியர்களை இரண்டாம் குடிகளாக மாற்றுவது.
கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்