articles

img

சேமிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு...

கிராமப்புறங்கள் மற்றும் திரட்டப்படாத பகுதிகளில் இயன்றளவு சிறு முதலீடுகளை திரட்டுவது என்ற நோக்கத்துடன் 1968ஆம் ஆண்டு தேசிய சேமிப்புத் திட்டத்திற்கு மாநில அரசு வடிவம் கொடுத்தது.  மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்வித்து சேமிப்பை நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்குப் பயன்படுவதில் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் மாநிலத்தில் திரட்டப்படும் சேமிப்பானது மாநிலத்திற்கே நீண்டகாலக் கடனாக கிடைப்பதும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். அனைத்துப்பகுதி மக்களையும் ஒரேபோல் கவர்ந்திடும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் தேசிய சேமிப்புத் திட்டதிலும் உண்டு. திட்டத்துடன் தொடர்புடைய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேசிய சேமிப்புத் திட்ட முகவர்களின் இலவச சேவை மாநிலத்தில் கிடைக்கிறது. நாம் ஒவ்வொருவரது சேமிப்பு மூலம் நாம் நமது மாநிலத்தின் செயல்திட்டங்களில் ஒரு அங்கமாகிறோம்.

சுகன்யா ஸம்ருதி யோஜனா

* 10 வயதிற்குக் குறைவான பெண் குழந்தைகளுக்கு மட்டுமான முதலீட்டுத் திட்டம்
* குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாய். ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாய்
* முழு முதலீட்டிற்கும் பிரிவு 80 (ஸி)ன்படி வருமானவரிச் சலுகை
* 18 வயதிற்குப் பிறகு கல்வி, திருமணம் ஆகியவற்றிற்காக 50 சதவீதம் தொகையைத் திறம்பப் பெறலாம்.
* முதலீட்டுக் காலஅளவு 21 ஆண்டுகள்
* முதலீடு அனைத்துத் தபால் அலுவலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் முதலீடு செய்யலாம்
* முதலீடுகளை இந்தியாவின் எந்தவொரு தபால் அலுவலகத்திலும் மாற்றிக் கொள்ளலாம்
பாதுகாப்பான முதலீடு என்பது பெண் குழந்தைகளின் இனிய எதிர்காலத்திற்கு இன்றியமையாதது
* மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டிவிகிதமுள்ள சிறப்பு முதலீட்டுத் திட்டம்
* 60 வயது நிறைவடைந்தவர்களும் 55 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட ஓய்வு பெற்றவர்களும் திட்டத்தில் 

உறுப்பினர்களாகலாம்

* குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்புநிதி
* பாலின வேறுபாடின்றி எந்த வயதினரும் சேருவதற்கான கவர்ச்சிகரத் திட்டம்
* ஒரு வருடம்500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்
* வருமானவரிச் சட்டப் பிரிவு 80 ஸி-ன்படி வட்டி வருமானத்திற்கு பிரிவு 10-ன்படி வரிச்சலுகை
* கணக்குகள் நீதிமன்ற ஜப்தியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
லாபகரமானது, பாதுகாப்பனது
ஸம்ரக்ஷித கிஸான் விகாஸ் பத்ரா
* 123 மாதத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்குகிற கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டம்
* முதலீட்டிற்கு வரம்புகளில்லை
* இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உரிய வட்டியுடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
 * அனைத்துத் தபால் அலுவலகங்களிலும் முதலீடு செய்யக்கூடியதும் இந்தியாவின் எந்த தபால் அலுவலகத்திற்கும் மாற்றக்கூடியதுமாகும்.
5 வருட தேசிய
சேமிப்புச் சான்றிதழ்
* அதிக வட்டிவிகிதமும் வருமான வரிச் சலுகைகளும் இணைந்த சான்றிதழ்
* 1000 ரூபாய்க்கும் அதற்கு மேல் 100 ரூபாய் மடங்குகளாக 15 வருட காலாவதியுள்ள சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்
* தங்களது பெயரில் சொந்தமாகவோ சிறார்களின் பெயரிலோ சான்றிதழ்கள் வாங்கலாம்
* முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான ஆண்டு விகிதக் கூட்டுவட்டி கிடைக்கிறது
* வருமானவரித் துறை பிரிவு 80-ஸின்படி வரிச்சலுகை கிடைக்கும்.

கட்டுரைகள் தமிழாக்கம் சி.முருகேசன்  மு.சங்கரநயினார்  ஜெ.ஜெஸின்