பிரபுகுமார்
பொதுமக்களை குறிப்பாக, இளை ஞர்களை குறிவைத்து நடத்தப்படும் ஆன் லைன் ரம்மிக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறை வேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சுபதர்ஷா
இளைஞர்களை நேரத்தையும், பணத் தையும் இழக்க செய்து மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் சூதாட் டத்தை தடை செய்ய வேண்டும். இத்தகைய பொதுமக்களின் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பல மாதங்கள் கிடப்பில் போட்டு, மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநரின் நட வடிக்கை பொது மக்களுக்கு எதிராக உள் ளது. இவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டயானா
இளைஞர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர், பள்ளி மற்றும் கல் லூரிகளில் மாணவ, மாணவியர்களிடம், “நல்ல சமுதாயம் படைக்கும் வகையில் இளைஞர்கள் நடத்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார். ஆளுநர் ரவியின் பகல் வேடம் மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்றால், இனி ஆளுநரை நம்மி இருக்காமல் தமிழ்நாடு அரசு மாற்று வழியை தேர்வு செய்ய வேண் டும்.
மணிகண்டன்
தமிழ்நாட்டில் பல உயிர்களை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவ டிக்கை மக்கள் விரோதமாக உள்ளது. வேதம் மற்றம் புராணம் பேசி, அரசியல் அமைப்பு சட்டத்தை பார்க்க மறுக்கும் ஆளுநரின் நடவ டிக்கை கண்டிக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு தழுவிய போராட் டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே ஆளுநர், அரசி யல் அமைப்பு சட்டத்தை இனியாவது படிக்க முயற்சி செய்வார்.
அயூப்கான்
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் நலனை காக் கும் வகையில், இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்குக ஒப்புதலை தராமல், சூதாட்டம் நடத்தும் முதலாளிகளை ஆளுநர் மாளிகைக்கு வர சொல்லி சந்தித்துள்ளார். நான்கு மாதம் சட்டத்தை கிடப்பில் போட்டு மீண்டும் திருப்பி அனுப்பியது மக்கள் விரோதமானது. ஆளுநர் மக்களின் நன் மைக்கு செயல்படாமல், சில முதலாளிக ளுக்கு ஆதரவாக செயல்படுவதை கண் டிக்கும் வகையில், ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.
சாய் கண்ணன்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கும் ஆளுநருக்கு தொடர்பு இருக்கிறது, பல அப்பாவி இளைஞர்களை ஆன்லைன் விளையாட்டு மூலம் உயிரை காவு வாங்கிய பிறகும், ஆன்லைன் விளையாட்டு தடை செய்ய ஏன் இத்தனை தயக்கம். இப்படிப் பட்ட, ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவை யில்லை, தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் வெளி யேற வேண்டும்.
கே.எஸ்.இளங்கோவன்
சீட்டு விளையாடுவது குற்றம் என்று காவல்துறை கைது செய்து வருகிறது. ஆனால் அதை ஆன்லைன் மூலம் விளை யாடுவது குற்றமில்லை, இதனை தடுக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், இதில் திருப்பி அனுப்புவது உகந்ததல்ல, இந்த விளையாட்டின் மூலம் பல அப்பாவி உயிர் கள் பறிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டும்.
கோ.வே.ரவிக்குமார்
ஆன்லைன் விளையாட்டு என்பது ஒரு சூது, முழுக்க முழுக்க உழைப்பை மழுங் கடிக்கவே செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை பதிவேற்றம் செய்து இளை ஞர்களை திசை திருப்பி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டினால் பல அப் பாவி இளைஞர்கள் உயிரிழந்து விடுகி றார்கள். ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு, தமிழ் நாடு அரசு ஒப்புதல் அனுப்பிய பிறகு, 180 நாள் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் போல் கிடைக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கிற செயலாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது. தற் பொழுது ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஒட்டு மொத்த தமிழக மக்களையும் அவமதிக் கின்ற செயலாகும்.