இராமா!
நான் உன் பக்தன்
உன் கோவிலின் ஒவ்வொரு படியிலும் ஒரு நினைவு
முதல் படி,
நினைவுத் திரையில் பண வீக்கம்
இரண்டாவது படியில் கால் வைக்கும்போது அதிகரித்து வரும் வேலையின்மை
மூன்றாவது படியில், ஊடகங்களின் துதி பாடல்
நான்காம் படியில், சந்தேகத்திற்கிடமான மத்திய முகமைகள்
படிகள் ஏற ஏற
மனக் கதவுகளை ஒவ்வொன்றாய்த் தட்டும் ஓசை...
ஒரு அடியில்
15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கிற்கு வரும் என்ற ஜும்லா
இன்னொரு அடியில்
விவசாயிகளின் கோபம்
ஏதோ ஒரு படிக்கட்டில்
மல்யுத்த வீராங்கனைகளின் வலி
அடுத்தடுத்த படிகளில்
மத வெறி
அரசின் கார்ப்பரேட் ஆதரவு முகம்
படியேறும் வழியில்
ஒருவர் கேட்டார்
“கலசம் இல்லாமல் பிரான் பிரதிஷ்டை நடைபெறுகிறதே” ...
இன்னொருவர் சொன்னார்,
“தேர்தலே வாழ்க்கை!
வேறு என்ன குறுக்கே நிற்க முடியும்...”
எத்தனையோ உண்மைகள்
நினைவுக்கு வந்தாலும்
கால்கடுக்க
கண் மூடித்தனமாக நடந்தோம்...
ஏறினோம் படிக்கட்டுகளில்...
ஜெய் ஶ்ரீராம்!”
ராமர் சொன்னார் புன் சிரிப்போடு
“நான் இன்று இங்கு இருக்கிறேன்
நேற்றும் இருந்தேன்
நாளையும் இருப்பேன்
இந்த கோவிலில் இருப்பது போல
உன் இதயத்திலேயே இருக்கிறேன்
நீ இங்கே வந்தாலும்
வராவிட்டாலும்
தேசம்
பிழைக்க வேண்டும்
அரசியல் சாசனம்
பிழைக்க வேண்டும்
ஜனநாயகம்
பிழைக்க வேண்டும்
தேசம் தேசமாக
இருக்க வேண்டும்
உயிர்ப்போடு
தேசம் என்பது கட்டிடங்களும் பாலங்களும் அல்ல...
தேசம் என்பது மக்களால் நிறைந்தது...
அவர்கள் மனதில்
குடியிருக்கும் தேச பக்தியால் நிரம்பி வழிவது...
ஒவ்வொரு குடிமக்களும்
வாழ்வை கடக்க நினைப்பது
அச்சமே இல்லாத
அமைதியான சூழல்”.
நன்றி: CPI M - TN முக நூல் பக்கம்