articles

img

பிரதமர் மருத்துவக் காப்பீடு மற்றுமொரு வெற்று விளம்பரம் - அறிவுக்கடல்

50 கோடி இந்தியர்களுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்கிற திட்டம் என்று பீற்றிக் கொண்டு, 2018 செப்டம்பரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டம் ‘ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா’. 10 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டம் நலக்காப்பீடு அளிக்கும், அதன்மூலம் 50 கோடி இந்தியர்கள் பயன் பெறுவார்கள், ரூ.5 லட்சம் வரையான மருத்துவ செலவை அரசு ஏற்கும், குடும்பத்தில் இத்தனை உறுப்பினர்தான் என்றெல்லாம் கட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் காப்பீடு என்றெல்லாம் நீட்டி முழக்கினார் மோடி. 2023 மே மாதத்தில் அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு, 1949 வகையான சிகிச்சைகள் இத்திட்டத்தின்கீழ் அளிக்கப்படுவதாகக் கூறுகிறது.  இவ்வாண்டு ஜனவரி 23 வரை 30.55 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 6.27 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு ‘இலவச’ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத் திற்கான அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறு கிறது. அரசு தனக்குத்தானே புகழ்ந்துகொள்கிறபடி உண்மையிலேயே அவ்வளவு பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்று சரிபார்க்க வழியில்லை. ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு உரிய கட்டணம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று மருத்துவமனைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, திட்டத்தின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பணம் கேட்டுப் போராடும் குஜராத், அரியானா மருத்துவமனைகள்

மருத்துவமனைகள் போராடுவது தமிழ்நாட்டில் என்றால் மாநில அரசு தவறு என்று சொல்லி விடுவார்கள். இது நடப்பது பாஜக ஆள்கிற குஜ ராத்தில்! ஆம்! குஜராத்திலுள்ள மருத்துவமனைகள், பிரதமர் நலக்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அளிக்கப் பட்ட சிகிச்சைகளுக்குரிய கட்டணங்கள் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு நீண்ட காலமாக வரவில்லை என்று போராடத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப் போராடியும் வாங்க முடியவில்லை என்பதால், ‘பிரதமர் நலக்காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் சங்கம்’ என்ற ஒன்றையே தொடங்கி, அதன்மூலம் போராடுகி றார்கள். அங்கு மட்டுமல்ல... பாஜக ஆள்கிற ஹரியானா மாநிலத்தில் உள்ள 983 தனியார் மருத்துவ மனைகள், இத்திட்டத்தின்கீழ் தங்களுக்கு வர வேண்டிய கட்டணங்கள் வராவிட்டால் வருகிற மார்ச் 15இலிருந்து இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிடுவோம் என்று அறிவித்திருக்கின்றன. கேரள மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை ‘அரசிடமிருந்து வசூலித்துத் தரும்படி’ கோரியுள்ளன. நாடு முழுவதுமே இதுதான் நிலை!

பத்தில் ஒரு பங்கிலும்...

இந்தியா முழுவதும் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிப்பதற்காக இணைந்த மருத்துவ மனைகளின் எண்ணிக்கை 29,811. அவற்றில் தனியார் மருத்துவமனைகள் 12,631. இந்தத் தனியார் மருத்துவமனைகளில், திட்டத்தில் இணைக்கப் பட்டதிலிருந்தே சிகிச்சை எதுவும் அளித்தி ராத மருத்துவமனைகள் 6,551. சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவமனைகளிலும், 3,543 மருத்துவமனைகள் கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை. இவை யிரண்டும்போக, இரண்டாயிரத்துச் சொச்சம் தனியார் மருத்துவமனைகள்தான் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தன. அவற்றிலும் கணிச மானவை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன என்பதுதான் இன்றைய நிலை. இதைச் சுட்டிக்காட்டி யதும், எல்லாவற்றிற்கும் மோடியைக் குறை சொல்வீர்களா என சில அதிமேதாவிகள் கிளம்பி வருவார்கள்.

கொடுப்பது 40 சதவீதம்  பெயர் முழுதும் பிரதமர்க்கா?

பெயர் வைத்துக்கொள்ள மட்டும் பிரதமர், குறை யென்றால் அவருக்குத் தொடர்பில்லை என்பது எப்படிச் சரி? உண்மையில், திட்டத்திற்கான செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள்தான் தரு கின்றன. அப்படியான திட்டத்திற்கு பிரதமர் திட்டம் என்று பெயர் வைத்துக்கொள்வதே முதல் பித்த லாட்டம் அல்லவா? நியாயமாக ஒன்றிய-மாநில அரசுகளின் காப்பீடு என்றுதானே பெயர் வைத்திருக்க வேண்டும்? அது மட்டுமல்ல, தற்போதைய பிரச்ச னைக்குக் காரணமே ஒன்றிய அரசு அதன் பங்கான நிதியை அளிக்கவில்லை என்பதுதான்.  இவ்வாண்டு பிப்ரவரி 6 அன்று, மாநிலங்கள வையில் அரசு அளித்த பதிலின்படி, இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.35,212 கோடிகளை பட்ஜெட் ஒதுக்கீடாகச் செய்துள்ள ஒன்றிய அரசு, இதுவரை விடுவித்துள்ள தொகை வெறும் ரூ.20,929 கோடிதான்! அதிலும் 2019-20, 2020-21, 2021-22 நிதியாண்டுகளில், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ததை, அதன்பின் பாதி அல்லது அதற்கும் குறைவாகக் குறைத்து, அப்படிக் குறைக்கப்பட்டதையும்விட மிகவும் குறைவான தொகையையே ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. உண்மையில், மாநில அரசுகள் தங்கள் பங்கை வழங்கிய பின்னும், ஒன்றிய அரசின் நிதி கிடைக்காததாலேயே மருத்துவ மனைகளுக்கு நிலுவை ஏற்பட்டு, திட்டம் முடங்குகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, வேறு  பல முறைகேடுகளும் இத்திட்டத்தில் நடை பெற்றிருக்கின்றன.

ஒரே மொபைல் எண்ணில்  7.5 லட்சம் பயனாளிகள்

ஒரே மொபைல் எண்ணில் ஏழரை லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, இறந்த வர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவெல்லாம் தலைமைக் கணக்காயர்(சிஏஜி) அறிக்கை குறிப் பிட்டதும் இந்தத் திட்டத்தைத்தான். பயனாளிகளின் அடையாளத்தை உறுதி செய்வதில் மொபைல் எண்கள் முக்கியப் பங்காற்றுகிற நிலையில், 7,49,820 பயனாளிகளின் மொபைல் எண்ணாக ‘9999999999’ என்பதே உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய சிஏஜி அறிக்கை, மேலும் 1,30,800 பயனாளி களின் எண்ணாக ‘8888888888’ என்பதும், 96,046 பய னாளிகளின் எண்ணாக ‘9000000000’ என்பதும் இருப்ப தாகக் குறிப்பிட்டிருக்கிறது. 

201 உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் 43,197...

அது மட்டுமல்ல, குடும்பத்தின் உறுப்பினர் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு இல்லை என்று மோடி புளகாங்கிதமாக அறிவித்த இத்திட்டத்தில், ஒரே குடும்பத்தில் 201 உறுப்பினர்கள் இருப்பதாகக்கூடக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது. பத்துக்கும் அதிகமான உறுப்பி னர்களிலிருந்து, 201 உறுப்பினர்கள் வரை கொண்ட குடும்பங்கள் 43,197 என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆதார் எண்ணின் அடிப்படையில்தான் பயனாளிகள் இணைக்கப்படுகிற இத்திட்டத்தில் ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்டிருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. 

3,446 பேருக்கு  இறந்தபின் சிகிச்சையாம்!

இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக, ஏற்கெனவே இறந்துவிட்டதாக இந்தத் திட்டத்தின் ஆவணங்க ளின்படியே பதிவாகியுள்ள 3,446 பேருக்கு (இறப் பிற்குப்பின்!) சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றிலிருந்து பார்க்கும்போது, வழங்கப்பட்ட தொகையும்கூட உண்மையான பொதுமக்களுக்கோ, அவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கோ பயன் பட்டதைவிட அதிகமாக, போலியானவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்க வேண்டியி ருக்கிறது. சரியாகச் சொன்னால், போலியான பயனாளி கள், போலியான சிகிச்சைகள் என்று மிகவும் தெளி வாகத் திட்டமிடப்பட்ட ஓர் ஊழல்தானே தவிர, மக்கள் நலத் திட்டமெல்லாம் இல்லை என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நலத்திட்டம் 2009இலிருந்தே செயல்பட்டு வருகிறது. 1970களிலேயே குழாய்மூலம் குடிநீர் விநி யோகத்தைத் தொடங்கிவிட்ட தமிழ்நாட்டில் வந்து குடிநீர் வழங்கினேன் என்று குடிநீர்க் குழாயையே அவர்தான் கண்டுபிடித்ததைப்போல மோடி பேசுவது மாதிரியே, இந்தியாவின் முன்னேறிய மாநிலங் கள் பலவும் ஏற்கெனவே மக்களுக்கு நலக் காப்பீடு வழங்கியிருக்கிற நிலையில், 10 கோடி குடும்பங்கள், 50 கோடி மக்கள் என்றெல்லாம் விளம்பரங்கள் செய்து விட்டு, மறைமுகமாக அந்த நிதியைக் கொள்ளைய டிக்கிற வேலைதான் நடந்திருக்கிறது. 

ஊழலுக்கான மாற்று வழி...

அத்திட்டத்தை நம்பி சிகிச்சையளித்த பல மருத்துவ மனைகளும் கடுமையான நெருக்கடியில் இருப்ப தாகக் கூறுகிற குஜராத்தில், இதற்கென உருவாக்கப் பட்ட சங்கத்தின் நிர்வாகி, நிதி நெருக்கடியால் சில  பிரிவுகளை மூடிய மருத்துவமனைகளையும் சுட்டிக் காட்டுகிறார். ஏற்கெனவே, தென் மாநிலங்கள் அள வுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ந்திராத வட மாநிலங்களில், இருப்பதையும் சீரழிக்கிற பணியைத் தான் மோடி திட்டம் சாதித்திருக்கிறது. மொத்தத்தில், மக்களுக்கோ, நாட்டுக்கோ பலன் தராத மற்றுமொரு வெற்று விளம்பரத் திட்டமும், ஊழலுக்கான மாற்று வழியுமே பிரதமர் நலக்காப்பீட்டுத் திட்டம்!