ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கத்தின் ஏஜெண்டு களாக செயல்படும் ஆளுநர்கள் பா.ஜ.க. அல்லாத மாநில அரசாங்கங்களை சிதைக்க முயல்வது அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் கேரளா ஆளுநரும் தமிழ்நாடு ஆளுநரும் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு ஆளுநரின் பேச்சுகளும் செயல்களும் தமிழ்நாட்டின் முற்போக்கான அம்சங்களை பின்னுக்கு இழுப்பதாகவே உள்ளது. ஏற்கெனவே உள்ள முற்போக்கு அம்சங்களை முன் னெடுப்பதற்காக கருத்துச் சொன்னால் எவரும் ஆட்சே பிக்கப்போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்க செய்யப்படும் ஆளுநரின் முயற்சி கள் ஒன்றிய பா.ஜ.க. அரசை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.ன் நிகழ்ச்சி நிரலுக்கு இசைந்ததாக உள்ளது என்பதுதான் மிகப்பெரிய ஆபத்து.
கல்வியில் தமிழ்நாடு சரிகிறதா?
துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநரின் உரை தமிழ்நாட்டின் மாண்புகளை வம்புக்கு இழுப்பதாகவே அமைந்துள்ளது. காமராஜர் காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு சமீப காலமாக கீழ் நோக்கி சென்று கொண்டுள்ளது என ஆளுநர் குறிப்பிடு கிறார். காமராஜர் காலத்துக்கும் திராவிடக் கட்சிகளின் காலத்துக்கும் இடையே சிண்டு முடியும் பணி இது! கல்விப்பணியில் காமராஜரின் பங்கை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக பள்ளிக் கல்வி யில் காமராஜர் காலம் ஒரு வலுவான அடித்தளத்தை போட்டது. தொடர்ந்து கல்வியில் மற்ற மாநிலங்க ளை ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு குறிப்பிட்ட சாதனை களை படைத்தது என்பதை மறுக்க முடியாது. இதனால்தான் கல்வியில் கேரளாவுக்கு அடுத்தபடி யாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் தொடர்ந்து உள்ளது என்பதை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் விவரங்களே தெரிவிக்கின்றன.
மாநிலம் நிதி ஆயோக் மதிப்பெண்
கேரளா 82.2%
தமிழ்நாடு 73.4%
ஹரியானா 69.5%
குஜராத் 63.0%
உ.பி. 46.5%
கல்வியில் ஒட்டு மொத்தமாக மட்டுமல்ல; அனை வருக்குமான கல்வியிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்க ளை ஒப்பிடும் பொழுது முன்னணியில் உள்ளது. ஆறு வயதுக்கு மேல் கல்வியறிவு உள்ளவர்கள்:
மாநிலம் முற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பட்டியலின
பிரிவினர் பிரிவினர் மக்கள்
கேரளா 95.2% 94.7% 84.7%
தமிழ்நாடு 84.7% 84.2% 76.9%
ஹரியானா 81.5% 79.9% 72.3%
குஜராத் 85.5% 81.9% 74.8%
உ.பி. 73.6% 71.0% 66.1%
பள்ளி கல்விக்கான செலவு மாநில ஜி.டி.பி.யில்:
மாநிலம் நிதி ஆயோக் மதிப்பீடு
கேரளா 16.02%
தமிழ்நாடு 11.37%
ஹரியானா 10.20%
குஜராத் 10.36%
கல்வியில் தமிழ்நாடு சரிவை சந்திக்கிறது என்பது உண்மையற்ற கூற்று.
தரமான கல்விக்கு புதிய கல்வி கொள்கை வழி அல்ல!
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைக்கு உகந்த கல்வியறிவு அல்லது திறமை இல்லை என ஆலை அதிபர்கள் தம்மிடம் புகார் கூறுகின்றனர் என ஆளுநர் குறிப்பிடுகிறார். இது உண்மையாக இருக்கலாம். இந்த குறைபாடு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் உள்ளது. ஏன் இந்த நிலை உருவானது? புற்றீசல்கள் போல உருவான சுயநிதி பொறியியல் கல்லூரிகள்தான் இதற்கு காரணம். பொறியியல் கல்வியில் தனியார் மயம் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துகிறது. ஆனால் ஆளுநர் இது பற்றி வாய் திறக்கவில்லை. அவர் புகழ்பாடும் மோடி அரசாங்கம் கல்வியி லிருந்தும் அரசு முற்றிலுமாக ஒதுங்க வேண்டும் என கூறிக்கொண்டுள்ளது. சுயநிதி தனியார்மயக் கல்வி இரு விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. ஒன்று தரமில்லாத பட்டதாரிகளை உரு வாக்கலாம்; அல்லது பணம் படைத்தவர்கள் மட்டுமே பொறியியல் உட்பட உயர் கல்வி கற்கும் சூழலை உருவாக்கலாம். சமூகத்தின் தகுதியுள்ள அனைத்து பிரிவு மக்களும் பள்ளி கல்வி/உயர் கல்வி/பொறியி யல் மற்றும் மருத்துவக் கல்வி கற்கும் சூழல் உரு வாக்கப்பட வேண்டும். அதற்கு கல்வியை தனது முழுக்கட்டுப்பாட்டில் அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் எதிர் திசையில் மோடி அரசாங்கம் பயணிக்கிறது. எனவே மோடி அரசை புகழ்பாடும் ஆளுநரின் அங்கலாய்ப்பில் எவ்வித அர்த்தமும் இல்லை.
இதே போல கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாண வர்கள் குறித்தும் கவலை தெரிவிக்கிறார் ஆளுநர். ஆங்கிலம் மாணவர்களுக்கு மிகவும் நெருடலாக உள்ளதாம்! எனவே ஆங்கிலத்தை புறந்தள்ள வேண்டுமாம்! அனைத்தும் தமிழிலிலேயே கற்க வேண்டுமாம்! அனைத்தும் தமிழில் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை. வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் ஆங்கிலத்தை ஏன் புறந்தள்ள வேண்டும்? அந்த இடத்தில் இந்தியை புகுத்தவா?
இதற்கு அவர் கூறும் தீர்வு என்ன?
- காலத்துக்கு ஏற்ற கல்வி தேவை!
- அதனை புதிய கல்விக் கொள்கை 2020தான் தர இயலும்.
- நமது கல்விமுறையில் ஆங்கிலத்துக்கு தரப்படும் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும்.
பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. தமிழ் நாட்டில் புதியக் கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும்; அதனாலேயே இந்த மாநாட்டில் யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் வரவழைக்கப்பட்டார். அவர் கடந்த 3 ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கை சாத னைகள் குறித்து சிலாகித்துள்ளார். ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தில் இந்தி/சமஸ்கிருதம் அமர்த்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியில் நிலவும் சமூக நீதி சிதைக்கப்பட வேண்டும். இதுவே ஆளுநரின் நிகழ்ச்சி நிரல். எத்தகைய ஆபத்தான சூழல் இது என்பதை தமிழ்நாட்டு முற்போக்கு இயக்கங்க ளும் மக்களும் உணர வேண்டிய தருணம் இது!
சீனா குறித்து தவறான மதிப்பீடு
சீனாவிலிருந்து பெரிய தொழில்நுட்ப நிறுவ னங்கள் வெளியேறுவதாகவும் மோடி அரசாங்கம் உருவாக்கிய சூழல்கள் காரணமாக அவை இந்தி யாவுக்கு வருவதாகவும் அவற்றை தமிழ்நாட்டுக்கு ஈர்க்க தமிழ்நாடு முயல வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிடுகிறார். மூலதனத்தை ஈர்ப்பது என்பது மிக மிக முக்கியமான பிரச்சனை. இது குறித்து ஆளு நருக்கு கருத்து இருக்குமானால் அவர் பேச வேண்டி யது தமிழ்நாட்டு அரசாங்கத்திடம்! முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து தனது அக்கறையை அல்லது கவலையை வெளிப் படுத்தலாம். ஆனால் துணை வேந்தர்கள் மாநாட்டில் இதனை பேச வேண்டிய தேவை ஏன் எழுகிறது? ஆளுநரின் நோக்கம் தமிழ்நாட்டின் நலன் அல்ல! மாறாக மாநில அரசாங்கம் குறித்து தவறான பிம்பத்தை உருவாக்குவது. சீனாவிலிருந்து தொழில்கள் வெளியேறு கின்றனவா? இந்த உண்மையை முதலில் ஆளுநர் தரவுகளின் அடிப்படையில் முடிவுக்கு வர வேண்டும். உண்மைகளை ஆய்வு செய்யும் அணுகுமுறை இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? சீனாவில் “பூஜ்யம் கோவிட்” கொள்கை காரணமாக தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அப்பொழுது சில நிறு வனங்கள் வெளியேற திட்டமிட்டன. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.
நிக்கி ஆசியா எனும் வணிக இதழ் கீழ்கண்டவாறு கூறுகிறது: “உலக உற்பத்தி மையம்” எனும் சீனாவின் இடத்தை இந்தியாவோ அல்லது தென் கிழக்கு ஆசியா வோ அவ்வளவு எளிதாக பிடித்துவிட இயலாது”
ஏன்?
“பன்னாட்டு நிறுவனங்களுக்கு சீனா உற்பத்தி மையம் மட்டுமல்ல; மிகப்பெரிய சந்தையும் கூட! 2020ஆம் ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள் சீன உள்நாட்டுச் சந்தையில் விற்றது 1400 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள். அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது 900 பில்லியன் டாலர்கள்தான்!” எனவே சீனா ஒரே சமயத்தில் குறைந்த செலவில் உற்பத்திக்கான வாய்ப்புகளையும் விற்பனைக்கான பெரிய சந்தையையும் தரும் பொழுது லாபத்தை மட்டுமே குறிக்கோளாக உள்ள மூலதனம் எப்படி பெரிய அளவில் சீனாவை விட்டு வெளியேறும்? 2020-21இல் 5 சதவீத பஞ்சாலைகள்/7 சதவீத நுகர்வு பொருள் ஆலைகள்/ 2சதவீத இயந்திர மற்றும் மின்சாதன ஆலைகள் மட்டுமே சீனாவிலிருந்து வெளி யேறியுள்ளன என இந்த இதழ் குறிப்பிடுகிறது. மேலும் அவ்வாறு வெளியேறிய நிறுவனங்கள் பெரும்பாலும் வியட்நாமை சென்றடைந்துள்ளன. மிகச்சிலதான் இந்தியாவுக்கு வந்துள்ளன எனவும் இந்த இதழ் குறிப்பிடுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க தமிழ்நாட்டை சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க முயல வேண்டும் என்பது வெற்றிடத்தில் கோட்டை கட்டும் கனவு போன்றது. தமிழ்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ அந்த திசை வழியில் சிந்திக்காதது தவறு அல்ல! இது குறித்து ஆளுநரின் மதிப்பீடுதான் தவறு!
மூலதனத்தை திருப்திப்படுத்த எது எல்லை?
இந்த உரையின் தொடர்ச்சியாகவே ஆளுநர் முத லீட்டாளர்களை சந்திப்பதனால் மட்டுமே மூலதனம் வந்து விடாது என கூறுகிறார். அந்நிய முதலீடு குறித்தும் ஹரியானாவை ஒப்பிட்டு அவர் பேசியதும் சமீப முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தே அவர் பேசினார் எனும் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. நவீன நாசகர பொருளாதாரக் கொள்கைகள் அமலாக் கத்துக்கு பின்னர் மாநிலங்கள் மூலதனத்தை ஈர்ப்பதற்கு போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. ஆரோக்கியமற்ற பந்தயத்தை இது உருவாக்கியது மட்டுமல்ல; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் அபரிமித சலுகைகளை கேட்கின்றனர். அவற்றை முழுவதுமாகவோ அல்லது கணிசமாகவோ ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஏற்கெனவே தொழில் மாநிலம். எனவே தொழில் உற்பத்தியில் கீழே போய்விடக்கூடாது; அதே சமயத்தில் புதிய முதலீடுகளும் ஈர்க்கப்பட வேண்டும். இந்த இரட்டை சவால்கள் தமிழ்நாடு அரசாங்கம் முன் உள்ளது. மேலும் உழைப்பாளிகளின் நலன் பலி யாகாமல் மூலதனம் வரவேண்டும் எனும் மிகப்பெரிய கடமையும் தமிழ்நாடு அரசாங்கத்திடம் உள்ளது. சென்னையை வாகன உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு கடந்த காலத்தில் பல முயற்சிகள் எடுக் கப்பட்டன. அதன் விளைவாக ஃபோர்டு/ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு நிலம்/நீர்/வரி தள்ளுபடி என பல சலுகைகள் தரப்பட்டன. இதனால் வேலை வாய்ப்புகள் உருவாயின என்பது உண்மையே! அதே சமயத்தில் நிறுவனங்கள் பெற்ற சலுகைகளுக்கு ஏற்ற முறையில் மாநிலம் பலன் பெற்றதா என்பது விவாதத்து க்கு உரிய ஒன்று! குறிப்பாக ஃபோர்டு தனது ஆலையை மூடிய பொழுது அதன் விளைவுகள் என்ன என்பது இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.
மூலதனத்தை திருப்திப்படுத்த எந்த எல்லை வரை மாநில அரசாங்கம் செல்ல வேண்டும் என்பது சவாலான கேள்வி. தனியார் மூலதனம் என்றாலே சுரண்டல் தவிர்க்க இயலாததுதான்! ஆனால் அதன் எல்லை என்ன என்பதை நிர்ணயிப்பதில் பொருத்த மான அரசியல் அணுகுமுறை இல்லையெனில் வேலை நேர அதிகரிப்பு போன்ற பல பாதகமான சூழல்கள் உருவாகும்.
ஹரியானாவின் பாதை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது
மூலதனத்தை திருப்திப்படுத்த ஹரியானாவை உதாரணமாகக் காட்டுகிறார் ஆளுநர். ஹரியானாவின் மூலதன ஆதரவு அறிய வேண்டும் எனில் மாருதி சுசுகி நிறுவன நிகழ்வுகள் ஒன்றே போதுமானது. 2012ஆம் ஆண்டு ஹரியானா மாருதி ஆலையில் தொழிலாளர்களுக்கு உதவிய மாருதி நிர்வாகத்தின் மேலாளர் ஆலைக்குள்ளேயே ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். கொலைப்பழியை தொழிலாளர்கள் மீது போட்டு ஜப்பானின் சுசுகி நிர்வாகம் 546 நிரந்தரத் தொழிலாளர்கள் உட்பட 2500 பேரை வேலை நீக்கம் செய்தது. 146 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டு நடந்த விசாரணையின் பொழுது மோடியின் “மேக் இன் இண்டியா” எனும் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட தால் இந்த 146 பேருக்கும் தூக்குத் தண்டனை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 13 தொழிற்சங்க தலைவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு இன்னும் தண்டனையில் உள்ளனர். இதற்கு முற்றிலும் ஹரியானா அரசாங்கம் பக்க தாளம் போட்டது. இதுதான் முதலீடுகளுக்கு சாதக மான சூழல் என ஆளுநர் கூறுகிறாரா?
ஹரியானாவை ஒப்பிடும் பொழுது கல்வி/மருத்துவம்/சமூக நல்லிணக்கம்/முதலீடுக்கான சூழல் எதுவும் தமிழ்நாட்டில் குறைவாக இல்லை. உதாரணத்துக்கு புதிய உற்பத்தி நடைமுறை திறன் விகிதாச்சாரத்தில் ஹரியானாவின் குறியீடு 0.442 எனவும் தமிழ்நாட்டின் குறியீடு 0.658 எனவும் நிதி ஆயோக் நிர்ணயித்துள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகளில் ஹரியானாவில் 20 சதவீத மாண வர்களே சேர்கின்றனர். தமிழ்நாட்டில் இது 55சத வீதம். முனைவர் பட்டத்துக்கு பதிவு செய்பவர்கள் ஹரியானாவில் 11 சதவீதம் பேர் எனில் தமிழ்நாட்டில் 29 சதவீதம் பேர். எனவே முதலீடுக்கு உகந்த சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. அதனை ஈர்க்க சில விசேட முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் செய்வதில் தவறு இல்லை. அது தேவையும் கூட! அதனை பொதுவெளியில் குறை சொல்லும் தார்மீக அல்லது சட்ட உரிமை ஆளுநருக்கு இல்லை.
தமிழ்நாட்டை சிதைக்க முயலும் சங் பரிவார அமைப்புக்கு இசைந்த வகையில் செயலாற்றும் ஆளுநரின் செயல்களை தடுக்க மக்கள் இயக்கம் உருவாக்கிடும் தேவை முன்னெப்பொழுதையும்விட இப்பொழுது உருவாகியுள்ளது.