articles

img

போதைப் பொருள் கடத்தல், விற்பனை யார் காரணம்? யார் பொறுப்பு? - பேரா.மு.நாகநாதன்

உலகமயமாக்கல் என்ற முதலா ளித்துவச் சதியை 1990 களில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வடிவமைத்தன‌. வளர்கிற நாடுகளே உங்கள் சந்தை களில் எங்கள் பொருட்கள் விற்பனைக்கு. உங்கள் பொருட்களையும் எங்கள் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய லாம். ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் ஆசிய ஆப்பி ரிக்க நாடுகள் அடிமைப்பட்டு இருந்த போது ஆங்கில பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசிய நாடுகள் வணிகப் பேராதிக்கம் செலுத்திக் கோலோச்சியது உலகமயம் இல்லையா? அன்றும் இன்றும் தாராள‌மயமும் தனியார் மயமும் பேராதிக்க நாடுகளின் முற்றுரிமை. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் உள்ளஆதிக்க நாடுகள் போர் நிறுத்தத்தை விரும் பாது.போர் நின்றால் இந்த நாடுகளின் ஆயுத விற்ப னையால் வரும்கொள்ளை லாபம் குறைந்துவிடும். அது போன்று உலக வர்த்தக(World Trade Organisation) மையமும் இந்த ஆதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. 1990களுக்குப் பிறகும் தாராள‌மயம், தனியார் மயம், உலகமயம் என்பது ஏகாதிபத்திய நாடுகள் ஓதும் கோயில் மந்திரங்கள். 

வளர்கின்ற நாடுகள் ஏகாதிபத்திய கோயில் முன்பு கை கட்டி‌ பக்தர்கள்‌போல வாய் பொத்தி நிற்க மட்டுமே முடியும். உலகில் விளையும் எல்லா வகைப் பழங்களும் எல்லா உற்பத்தி செய்யப்பட்ட பொருட்க ளும் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் முழங்கி னார்கள். வாஷிங்டன் ஆப்பிள்கள், ஆஸ்திரேலியா திராட்சைகள்‌, நூறு ரூபாய்க்கு ஒரே ஒரு குண்டு கொய்யா எனப் பலவகையான பழக் குவியல்களை இன்றைய காய்கறி கனி‌ விற்பனை அங்காடிகளில் காணலாம். இந்தியப் பெரும் பணக்காரர்கள் அயல் நாட்டுக் கனி வகைகளை மிக அதிக விலைக்குச் சுவைக்கிறார்கள். பணக்காரர்களால் பணக்காரர்களுக்காகப் படைக் கப்பட்டதே உலகமய மந்திரமும் தந்திரமும். இதைப் பார்த்து ஏழைகள் குடல் கருகி விக்கித்து நிற்கிறார்கள் கருணையில்லா நரேந்திரர் பாஜக ஆட்சியில். உலக மயம் யாருக்காக என்பது விளங்கிவிட்டதல்லா! சரிந்து வரும் ஏழை நடுத்தர மக்களின் பொருளா தாரச் சூழலைக் கடந்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாகப் புறந்தள்ளி,  பெரும் முதலாளிகளின் நலன்களுக்கு மட்டுமே பாஜக அரசு இயங்கி வருகிறது. திடீரென்று தமிழ்நாட்டில் போதைப் பொருள் பெருகிவிட்டது என்ற வெற்றுக் கூச்சலை பாஜக எழுப்புகிறது.

‘குட்கா’புகழ் விஜயபாஸ்கர் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இதற்குத் துணை போகிறார். போதைப் பொருள் கடத்தல், கள்ளத்தனமான விற்பனை, இன்று உலகளாவிய பிரச்சனையாக உரு வெடுத்துப் பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரு கிறது. இந்தியாவிலோ தொடர்ந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து வகையான போதைப் பொருட்க ளும் குஜராத் வழியாகத்தான் வருகிறது. நரேந்திரர், அமித் ஷா தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. இன்றைய (மார்ச் 13-2024- பக்கம் -11-) தமிழ் இந்து நாளிதழில் ரூபாய் 480 கோடி போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் மன்றத் தின் மனித மேம்பாட்டு அறிக்கை எச்சரிக்கை வெளி யிட்டது. “குற்றவாளிகள்தான் உலகமயமாதலின் பயன்களைப் பெருமளவில் அனுபவித்து வருகின்ற னர். கட்டுப்படுத்தப்படாத மூலதனச் சந்தை, தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள், குறைந்த செலவில் போக்குவரத்து வசதிகள் கிடைப்ப தால், தடையற்ற முறையில் வேகமாகப் போதைப் பொருள் சந்தை வணிகம் பெருகி வருகிறது. ஆக்கப் பூர்வமான வளர்ச்சிக்குத் தேவையான புத்தகங்க ளுக்கும், வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான விதை களுக்கும் மாற்றாக, கருப்புப் பணமும், ஆயுதங்களும் தான் எளிதாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. 

சட்டவிரோதமான போதைப் பொருள் வணிகம், பெண்கள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவது, ஆயுதம் கடத்துதல், கருப்புப் பணத்தைப் பன்னாட்டு அளவில் மாற்றுதல் போன்ற செயல்களால் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் குற்றவியல் நடவ டிக்கைகள் பெருகி வருகின்றன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஆண்டு தோறும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்களும், இளம்பெண்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு  மட்டுமே கடத்தப்படுகின்றனர். ரூ.31,500 கோடி அளவில் நடைபெறும் இவ்வகை சட்டவிரோதச் செயல்களால் மனித உரிமை மிகக் கொடுமையான முறையில் பறிக்கப்பட்டுப் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.  போதைப் பொருள்களையும், ஆயுதங்களையும், பெண்களையும் கடத்துவதற்கும், குற்றங்களை வெளிப்படையாகக் கண்டுபிடிக்க முடியாத அள விற்கும் இணையதளத் தொழில்நுட்பங்கள் இவர்க ளுக்கு நல்வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.  இரும்பு, எஃகு தொழில், மோட்டார் வாகனத் தொழில்களைவிட 1995இல் மட்டும் உலக வணிகத் தில் 8 விழுக்காடு அளவிற்கு மேற்கூறிய சட்ட விரோத வணிகத்தின் பங்கு உயர்ந்துள்ளது.

உலக ஒட்டுமொத்த வருமானத்தில் 2.5 விழுக்காட் டுக்குச் சமமான அளவிற்குப் பன்னாட்டு அளவில் கறுப்புப் பண நடமாட்டம் இருப்பதாகப் பன்னாட்டு நிதியம் கணக்கிட்டுக் குறிப்பிட்டுள்ளது. இவ்விதக் குற்றவியல் நடவடிக்கைகள் கணினி விசைப்பலகை யின் பொறியைத் தொட்டு இயக்குவதன் வழியாக ஒரு சில நொடிகளிலேயே நடந்தேறி வருகின்றன.  இதன் அடிப்படையை ஆய்ந்து பார்த்தால், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக இவ்வகை குற்ற நடவடிக்கைகள் வழியாக வரும் வருமானம் ஆண்டிற்கு ரூ.67 லட்சம் கோடியைக் கடந்து குற்ற வாளிகளின் ஆதிக்கம் ஒரு சக்தி வாய்ந்த மையமாக வளர்ந்து வருகிறது. பன்னாட்டு அளவில் குற்றங்களை நடத்திவரும் இத்தகைய கும்பல்கள், அரசியலை, வணிகத்தை, காவல் துறையை, இணையதளத்தைத் திறன்மிக்க வகையில் குற்ற அமைப்புகளாக மாற்றி, தங்களின் குற்ற நடவடிக்கைகளின் எல்லையை மிக ஆழமான முறையில் விரிவுபடுத்தி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் மன்றம் போதைப் பொருளை தடுப்ப தற்காகவும் உரிய பரிந்துரைகளை அளிப்பதற்காக வும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் போதைப் பொருள் குற்றவியல் அலுவலகத்தைத் தொடங்கியது. United Nations Office on Drug and Crime (UNODC) இந்த அமைப்பின் சார்பில் 2023 இல் முதன் முதலாக உலகப் போதைப்பொருள் அறிக் கையை வெளியிட்டுள்ளது. (World Drug Report 2023- UNODC) “போதைப் பொருள்‌ கள்ளச் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.” “2021ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி ஒரு கோடி நபர்கள் ஊசி வழியாகப் போதைப் பொருளை எடுத்துக்  கொண்டுள்ளனர்.” “உலக அளவில் 29 கோடியே 60 லட்சம் நபர்கள் போதைப் பொருட்களை உட் கொண்டுள்ளனர்.” உக்ரைன் போர் தொடங்கிய பிறகுகொக்கோயின், ஹிராயின் போன்ற போதைப் பொருள்கள் தடைப் பட்டதால் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப் படும் போதைப் பொருள்கள் வணிகம் பெருகி வருகிறது.  இதன் காரணமாகப் பல நாடுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சுகாதாரக் கேடுகள் பெருகி வருகின்றன.

பிரேசில், கொலம்பியா, பெரு‌ போன்ற நாடுகளின் வழியாக இந்தப் போதைப் பொருள் வணிகம் செயல் பட்டு வருகிறது.  இவ்வாறு பல கருத்துக்களை முன் வைக்கும் இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 193 உறுப்பு நாடுகளுக்குப் பல அறிவுறுத்தல்களையும் பரிந்துரை களையும் வழங்கியுள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீவிரமான முறையில் தடுப்பதற்கு, இக்குற்றம் செய்ப வர்களுக்கு 35 நாடுகள் மரண தண்டனையை அளித்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி 1320 நபர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். 2022 ஆம் ஆண்டில் 285 நபர்களுக்கு மரண‌த் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் நாடுகள் சீனா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு களில் போதைப் பொருள் குற்றத்திற்கு மரண தண் டனை வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் வழியாக குஜ ராத் மாநிலத்தின் கடற்கரை வழியாகத்தான் போதைப் பொருள் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது.

இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் புள்ளி விவரங்கள்படி குறைந்த அளவில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. எனவே இதை அரசியல் ஆக்கா மல் போதைப் பொருள் புழக்கத்தை, போதைப் பொருள் பழக்கத்தைத்தடுக்க எல்லோரும் ஒன்று பட்டுச் செயல்பட வேண்டியது காலத்தின் தேவை.தமிழ்நாட்டின் முதல்வர் போதைப் பொருள்களை தடுப்ப தற்குச் சிறப்புக் கவனம் செலுத்திப்பல ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குஜராத் வழியாகக் கடத்தப்பட்டு மற்ற மாநிலங்க ளுக்குள் நுழைவதை தடுக்க ஒன்றிய அரசும், மாநில  அரசுகளும் இணைந்து கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தேர்தல் அர சியலுக்குப் பயன்படுத்துவது ஆபாசச் செயலாகும்.