articles

img

அவரும் இவரும்; அன்றும் இன்றும் - வி.மாரிமுத்து

போலிச் சாமியார் ஜக்கி வாசுதேவ்  ஆன்மீகப் போர்வையில் நடத்தியுள்ள மகா சிவ ராத்திரி ‘கொண்டாட்டத்தில்’ குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு அவர்கள் பங்கேற்றுள்ளார்.  பல்வேறு வழக்கு களில் சிக்கி உள்ள ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்ச்சி யில் குடியரசு தலைவர் கலந்து கொள்ளக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் வலியுறுத்தின. ஆனால் குடியரசு தலைவர் தனக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உண்மை நிலைகளை அறிந்து கொண்டு, தவிர்க்காமல், தனது பயணத்திட்ட அடிப்படையில் யோகா மையத்திற்கு வந்து சென்றுள்ளார்.  மதம் வேறு; அரசு வேறு என்று திட்டவட்டமாக அறி வித்து மதம் சாராத ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்கி மதச்சார்பற்ற அரசு என்று அறிவித்துள்ள நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது மட்டு மல்ல; மிகப்பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.

மும்மூர்த்தி அஞ்சல் தலை

பல ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் தலை வெளி யிட்டதில்  இந்து மத கடவுளான மும்மூர்த்திகளின் தலையை அச்சிட்டு வெளியிட்டார்கள்; தந்தை பெரியார் இச்செயலை கடுமையாக கண்டித்தார். மதச்சார் பற்ற சிந்தனையாளர்கள் கடுமையான கண்டனத்தை யும்,எதிர்ப்பையும் வெளியிட்டார்கள். இத்தகைய எதிர் ப்பு போராட்டத்தின் காரணமாக அஞ்சல் தலை வெளியி டுவதில் மும்மூர்த்திகளின் படத்தை இந்திய அஞ்சல் துறை அச்சிடுவதை  கைவிட்டது. அரசாங்கத்தின் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தங்கள் பதவித் தகுதி காரணமாக எந்த ஒரு மதம் சார்ந்த விழா நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ளக்கூடாது என்பது மதச்சார்பற்ற ஆட்சியின் அறமாகும். இதை மீறி சில நேரங்களில் உயரிய பதவிகளில் இருந்தவர்கள் நடந்தது உண்டு; பிறகு தவறை உணர்ந்து திருத்திக் கொண்டதும் உண்டு.  

1963ல் நடந்த நிகழ்வு 

இன்றைய குடியரசுத் தலைவர் தனி விமானத்தில் தில்லியில் இருந்து புறப்பட்டு மதுரை வந்திறங்கி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்,  அது அவரது உரிமை.  இதே மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் புதுப் பிக்கப்பட்டு அதன் குடமுழுக்கு விழா  28-6-1963 அன்று நடைபெறும் என்று மதுரை  முழுவதும் ஊர்வலம் நடத்தி, பிரச்சாரம்,விளம்பரம் என பெரிய அள விற்கு நடந்தது.இந்த குடமுழுக்கு விழாவிற்கு அப்போ தைய இந்திய  குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் வருகை தந்து குடமுழுக்கு  விழா வை துவக்கி வைக்க உள்ளதாகவும் விளம்பரம் செய்யப் பட்டது.நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பி. டி. ராஜன் அவர்கள் தான் செய்தார்.   குடமுழுக்கு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வருகை தருவது மதச்சார்பற்ற அரசின் அரசியல் சட் டத்தை மீறிய செயல் என அப்போதைய சுயமரியாதை இயக்க பொதுச் செயலாளராக இருந்த குத்தூசி குரு சாமி அவர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதனைத் தொடர்ந்து மயிலை த.லோகநாதன் மற்றும் நாத்திகம் ராமசாமி இருவரும் இணைந்து மதச்சார்பற்ற தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வித மாக உள்ள குடியரசுத் தலைவரின் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை வி.எம்.லெனின் நடத்தினார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போதே குடியர சுத் தலைவர் குடமுழுக்கு விழா நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். அத்துடன் அவ்வழக்கும் முடிவுக்கு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன்கோவில் குடமுழு க்கு விழா குடியரசு தலைவர் கலந்து கொள்ளாமலே  நடந்தது. இதன்மூலம் குடியரசுத் தலைவரின் மாண்பும், மதச்சார்பற்ற அரசு என்கிற வேலியும் பலப்படுத்தப் பட்டது. இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்று பண்டிட் ஜவஹர்கலால் நேருவும், அண்ணல் அம்பேத்கரும்  பிரகடனப்படுத்தியது வேடிக்கைக்கு அல்ல.  இந்தியா வின் அரசு உரிமையும், ஒற்றுமையும், மரியாதையும், அமைதியும் இந்த பிரகடனத்தால்தான் பாதுகாக் கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற அரசு இல்லாவிட்டால் இந்தியா என்ற நாடு இருக்காது.  இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பது தான் உலகத்திலேயே இந்தியாவுக்குள்ள மிகப்பெரிய பெருமையும் பலமும் ஆகும்.உலகத்தின் மரியாதைக் காக மட்டுமல்ல நமது ஒற்றுமைக்காகவும், நாம் தேர்ந் தெடுத்துக் கொண்ட மதச்சார்பற்ற நிலையே நமக்கு வாய்த்த அரணாக உள்ளது.

இன்றைய நமது நிரந்தரமான சுதந்திர வாழ்வுக்கு ஜனநாயக மாளிகை எழுப்பி தந்த மேதைகள்  மதச் சார்பற்ற வேலியையும் அமைத்துக் கொடுத்துள்ளார் கள்.அதனால்தான் நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதை சீர்குலைக்கும் முயற்சி யும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் நமது ஜன நாயக சுதந்திர வாழ்வுக்கு கேடு வந்து விடுமோ என்ற கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘எனது நாட்டின் குடியரசுத் தலைவர், மதச்சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறை யில் மதச்சார்பான விழாவில் கலந்து கொள்வது- மற்ற மதத்தை பின்பற்றும் மக்களிடையே பாரபட்சமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும்’என்ற நியாயமான கவலையை குடியரசுத் தலைவர் கவ னத்தில் கொண்டிருக்க வேண்டும்.   1963ல் அன்றைய குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க முயன்றார்; ஆனால் இன்றைய குடியரசு தலைவர்...? 

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) நாகப்பட்டினம் 
மாவட்டச் செயலாளர்.