நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு சிறப்பாக இருந்தது என திட்டம் போட்டு செய்திகள் பரப்பப் படுகின்றன.இது ஒரு தவறான கருத்தாகும். 2014இல் சராசரி இந்தியர்களின் வருமானம் சுமார் 4000 டாலர். மோடி ஆட்சியில் 6000 டாலராக உயர்ந்துள் ளது என்று நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை கூறியது. ஆனால் சராசரி இந்தியரின் வருமானம் 2004-14 க்கும் இடையில் 6 சதவிகிதமும் 2014 -24 க்கும் இடையில் 4 சதவிகிதம் உயர்ந்தது. வருமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கை கூட தேஜகூவின் பத்தாண்டை விட ஜமுகூ-வின் பத்தாண்டில் அதிகமாக இருந்தது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் இந்த உண்மையை மறுக்கின்றனர்.
வேலைவாய்ப்பு, வருமானம் வீழ்ச்சி!
தனியார் துறை வேலைவாய்ப்புகளும் மோடியின் காலத்தில் வேகமாக வளரவில்லை. கார்ப்பரேட் முதலீடுகள் குறைவாக இருந்ததே இதற்கு காரணம். 2004-2014 இல் தனியார் துறை முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26 சதவீதம் .மோடியின் ஆட்சிக் காலத்தில் 24 சதவீதம். பொருளாதாரத்தில் 17 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறையின் பங்கு 2014-24இல் 14 சதவீதத்திற்கு வீழ்ச்சி யடைந்தது. இதன் நேரடி தாக்கமாக ஏற்றுமதி 17 சதவீதத்தி லிருந்து பிரதமர் மோடி காலத்தில் 13 சதவிகிதமாக சரிந்தது.
உலகத் தலைவர்களை கட்டிப்பிடித்து !
பிரதமர் மோடி உலகத் தலைவர்களை கட்டிப்பிடித்து இருக்கிறார். ஜி 20 மாநாட்டை பொதுப்பணத்தை வாரி இறைத்து ஆடம்பரமாக நடத்தி இருக்கிறார். 1310 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்.ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளை கொண்டுவர தயங்கினர். ஐமுகூ ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் ஆக இருந்த அந்நிய முதலீடு தேஜகூ ஆட்சிக்காலத்தில் 0.8சதவீதம் ஆக குறைந்தது. அந்நிய முதலீடு மன்மோகன் சிங் காலத்தில் மூன்று மடங்கு உயர்ந்தது. ஆனால் பிரதமர் மோடியின் காலத்தில் இரண்டு மடங்கு தான் உயர்ந்தது. பங்குச் சந்தைகள் கூட அமைதியாக இருந்த மன்மோகன் சிங்கை தான் விரும்பின.(15 சதவீதம் லாபம் அளித்தன). ஆடம்பர மோடியை ஏனோ அதற்குப் பிடிக்கவில்லை. ( லாபம் 12 சதவீதம் தான்)
வேகம் இல்லை
புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் மேம்பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை விளம்பர வெளிச்சத்தில் ஓடி ஓடி சென்று செல்பிக்களையும் புகைப்படங்களையும் எடுத்து திறந்து வைத்த காட்சிகள் இவர்தான் வளர்ச்சி என் நாயகன் என்ற பிம்பத்தை கட்டமைத்தன. மூலதனச் செலவினங்களோடு பொருளா தாரத்தை நிலை நிறுத்த தேஜகூ ஆட்சி அரசாங்கச் செலவு களை அதிகமாக சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இவருடைய ஆட்சியில் வேகம் அதற்கு ஏற்ப இல்லை.ஏனெனில், மன்மோகன் சிங் அரசாங்கத்தை விட இவருடைய ஆட்சியில் வெறும் 20 சதவீத கூடுதல் நெடுஞ்சாலைகள் தான் உருவானது. அதே நேரத்தில் இரண்டு ஆட்சிக் காலத்திலும் பத்து ஆண்டுகளில் 3.5லட்சம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டன.
வெறும் அலப்பறை தான்!
ஸ்வச் பாரத் திட்டத்தில் 200 சதவீதம் கூடுதல் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. வெறும் 20 சதவீதம் கூடுதல் தான் கட்டப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஐமுகூ வகுத்தளித்த உள்கட்டமைப்பில் மோடி அரசு மேல் கட்டுமானத்தை தொடர்ந்தது . அவர் அலப்பறை விடுவது போல விண்வெளிக்குச் செல்லும் வேகத்தில் அது நடைபெறவில்லை. சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளிலும் மன்மோகன் சிங் அரசாங்கத்தை விட இவருடைய அரசு சிறப்பாகச் செயல்படவில்லை. ஐமுகூ அரசு கல்விக்காக 4.6 சதவீதம் செலவழித்தது. தேஜகூ அரசாங்கம் அதை 3 சதவிகிதமாக குறைத்தது. 16 சதவீதமாக இருந்த ஏழைகளுக்கான மானியங்களை “மோடியின் உத்தரவாதம்” பேசும் அரசு 9 சதவீதமாக குறைத்தது என்பதுதான் உண்மை. நிதி ஒழுக்கம் மற்றும் பண வீக்கம்(Fiscal Discipline and Inflation) ஆகிய இரண்டு அம்சங்களில் கூட ஐமுகூ அரசின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை தேஜகூ அரசுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தது.பிரதமர் மோடியின் ஆட்சியில் பணவீக்கம் கட்டுக்குள் இருந்ததற்கு காரணம் அவருடைய திறமை அல்ல.உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது தான் அதற்கு காரணம்.
வடிகட்டிய பொய்
மோடி அரசு பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்தது என்று கூறுவது ஒரு முழுமையான கட்டுக்கதை.10 வயது சிறுவன் மேலும் 10 வருடம் கழித்து 20 வயது அடைகிறான் என்று கூறுவதைப் போல இது உள்ளது.மோடி அல்ல, அக்சய் குமார் பிரதமராக இருந்தாலும் இதுவே நடந்திருக்கும். ஆனால் கடந்த பத்து வருட மோடியின் ஆட்சியில் சமூகப் பிளவுகள், வகுப்புவாத வெறுப்புகள் வளர்ந்தன. நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். மக்களை மத அடிப்படையில் பிரித்து இந்தியாவின் சமூக சமநிலையை சீர்குலைப்பது என்பது,ஏழை மக்களுக்கு மட்டுமல்ல உயர் அடுக்கில் வாழ்பவர்களுக்கு கூட இந்த ஆட்சியை வெறுத்து ஒதுக்கிட உரிய காரணமாக இருக்க வேண்டும். உங்கள் தேர்வு எது? திடமான பொருளாதார செயல்திறன் கூடிய சமூக நல்லிணக்கமா? அல்லது வகுப்புவாத சீர்குலைவுகளா? உங்களின் தேர்வு வெளிப்படையாகவே இருக்கட்டும்.
நன்றி: தி இன்டியன் எக்ஸ்பிரஸ். 28/2/24
தமிழில் : கடலூர் சுகுமாறன்