நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது காமராஜர் ஆட்சிக் காலத்தில் அதிகாரப்பூர்வமான மதிய உணவுத் திட்டமாக மாறியது. 1955 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்ட பத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரி யர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். பின்னர் இந்த மதிய உணவு திட்டம் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் வருவாய்த் துறை செயலாளர் பல ஆட்சே பணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் மதிய உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதி யார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதா வது: அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணி யம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு எதுவும் இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கி றேன் என தெளிவுபடக் கூறினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக இது விரிவடைந்தது. பிறகு திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் அதிமுக ஆட்சியில் சத்துண வில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.
தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று. மேலும், இதில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் திட்டத்தை தற்போது தமிழக அரசு அர சாணை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சத்துணவுத் திட்டச் சீரமைப்பு என்ற பெயரில் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டி ருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சிய ளிக்கின்றன. சத்துணவுத் திட்டத்தை ஏற்கனவே செயல் பட்டு வருவதைவிட மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை என்பது நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது. இதனுடைய தொடர்ச்சியாகத்தான் காமராஜர் ஆட்சிக் காலத்திலிருந்து நடைபெற்று வரும் சிறப்பான ஏற்பாடுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பின்னணியில் சத்துணவு மையங்களை மூடு வதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கவே செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. குறிப்பாக தமிழகத்தில் பல கிராமங்களில் ஒரே வளாகத்துக்குள் அங்கன்வாடி மையம், தொடக்கப் பள்ளி அல்லது நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு தனித்தனி சத்துணவு மையங்கள் ஒரே வளாகத்துக்குள் செயல்படுகின்றன. அவற்றுக் கென தனித்தனியாக அமைப்பாளர், சமையலர், உதவி யாளர் என பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்படி மாநிலம் முழுவதும், 43 ஆயிரத்து 190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில், மாநிலத்தில் ஒரே வளா கத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் உள்ள சத்து ணவு மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை வரை படங்களுடன் திரட்டும் பணியில் ஈடுபடுமாறு, ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு சமூக நலத்துறை அண்மையில் உத்தரவிட்டுள்ளது. எதற்காக இந்த உத்தரவு என்ற காரணம் தெரி விக்கப்படாததால், பல சந்தேகங்கள் கிளம்பி யுள்ளன. 3 கி.மீ. சுற்றளவில் உள்ள எல்லா சத்துணவு மையங்களுக்கும் தேவைப்படும் சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து, அதை மற்ற மையங்க ளுக்கு கொண்டுபோய் கொடுக்க அரசு முடிவெடுத் திருக்கலாம். அதனாலேயே இந்த தகவல் திரட்டப்படு கிறது என்ற சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது என்று பொதுவாக பேசப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், உணவு தயாரிக் கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அந்த பள்ளிக ளில் உணவு வழங்கும் பொறுப்பு, பள்ளியில் பணி யாற்றும் ஏதேனும் ஒரு பணியாளரிடம் ஒப்படைக்கப்பட லாம். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 28ஆயிரம் சத்துணவு மையங்களைமூட வேண்டிய நிலை உருவாகும். சுமார் 85 ஆயிரம் பணியிடங்கள் ரத்தாகும் சூழல் ஏற்படும்.
அதனால் அரசுக்கு செலவு மிச்சமாகும் என்று ஒரு கணக்கு சொல்லப்பட்டாலும், ஒரு இடத்தில் சமைக்கும் உணவை மற்ற இடங்களுக்கு கொண்டு போய் வினியோகிக்க, வாகன போக்குவரத்து செலவு ஆகும். அடுத்து, சிறிய அளவில் சமைக்கும் சத்துணவு மையங்களை ஒன்றிணைப்பதன் மூலம் அதிக அளவு சமைக்க வேண்டிவரும். அதற்கேற்ப அந்த மையத்தில் உள்கட்டமைப்பை உருவாக்க கூடுதல் முதலீடு செய்ய வேண்டும். இப்படி பல விபரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முக்கியமாக, இப்போது பள்ளிகளில் காலை சிற்றுண்டியும் வழங்கப்படும் நிலையில், ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு உணவு வினியோ கம் என்பது அரசுக்கு கூடுதல் செலவாகவே முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், வெற்றி கரமாக நடந்து வரும் நமது சத்துணவு திட்டத்தை வலுவிழக்கச் செய்வதோடு, அதன் நோக்கத்தையே சிதைத்துவிடும். ஆகவே தற்போது அரசு அவ்வாறு யோசித்தால் இந்த திட்டத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். பலருக்கு வேலை இழப்பு மட்டுமல்லா மல் செலவினங்களும் கூடுதலாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அரசு அவ்வாறு யோ சித்தால் அதை மறுபரிசீலனை செய்வதே நல்லது.