நான் ஒரே படத்தை இரண்டு முறை எடுக்கிறேன், முதலில் என் இதயத்தால் பின்னர் கேமராவால். இப்படி கூறுவது பிஜு காரக்கோணம். இவர் தனது புகைப் படங்களாலும் அந்த கலையை நேசித்து வெளி்ப்படுத்தும் வரிகளாலும் கேரளத்திலும் வெளியிலும் கவனம் பெற்றி ருப்பவர். பிஜுவின் இத்தகைய மேற்கோள்களில் சில வெளிநாடுகளில் உள்ளவர்களால் கூட இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அமெரிக்க இணையதளமான குட் ரீட்ஸ்- இல் சுமார் எழுபது மேற்கோள்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணத்தின் போது பார்த்த காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக தனது நண்பரும் புகைப்படக் கலைஞரு மான தேவி பிரசாத்திடம் இருந்து கேமராவை எடுத்துச் செல்வார்.
பின்னர் அவரிடமிருந்து பழைய ஆட்டோ ஃபோகஸ் ஃபிலிம் கேமரா கிடைத்தது. பிஜுவுக்கு புகைப் படக் கலையின் முதல் பாடங்களைக் கற்றுக் கொடுத்த வரும் அவர்தான். பிஜு போட்டோகிராபி படித்துவிட்டு புகைப்படம் எடுப்பதை தொழிலாக மேற்கொள்ளவில்லை. புகைப்படம் எடுக்கத் தொடங்கி சுமார் 20 ஆண்டுகள் கடந்த நிலையில், கர்நாடகா திறந்தநிலை பல்கலைக் கழகம் புகைப்படம் எடுப்பதில் இந்தியாவின் முதல் முது நிலை நுண்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டு சேர்க்கைக்கு ஆறு பேர் தகுதி பெற்றனர். கேரளத்தைச் சேர்ந்த பென்னட், சூரஜ் மற்றும் ரியாஸ் ஆகி யோருடன் பிஜு, இந்தியாவில் முதல் எம்எப்ஏ (MFA) பட்டம் பெற்ற ஐந்து பேரில் ஒருவரானார். புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற பிஜு, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்காக 100க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். பூமாலா பழங்குடி யினர் பள்ளி பற்றி யுனிசெஃப்- க்காக தயாரிக்கப்பட்ட ஆவ ணப்படமும் இதில் அடங்கும். சூரஜ் ஸ்ரீதர் இயக்கிய கலாம் என்ற மலையாளத் திரைப்படத்தில் கேமரா மேனாகவும், சர்வ ஷிக்ஷா அபியான் அடிமாலி பிஆர்சிக் காக சுராஜ் இயக்கிய குறும்படத்தில் கேமராமேனாகவும் பணியாற்றினார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வர லாற்று தருணமும் மீண்டும் உருவாக்க முடியாதவை. ஒரு புகைப்படக் கலைஞரால் மட்டுமே வரலாற்றில் ஒரு தருணத்தை தனது கிளிக்குகளில் உறைய வைக்க முடியும் என்கிறார் பிஜு.
மறக்க முடியாத அனுபவங்கள்
கடந்த இருபத்தைந்து வருடங் களாக புகைப்படத் துறையில் மறக்க முடியாத பல அனுபவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறும் பிஜு, நண்பர் சுராஜுடன் செய்த குறும் படத்தில் வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். கோவிட் இரண்டாம் கட்டத்திற்குப் பிறகு, அந்த குறும்படம் எடுக்கப் பட்டது. முழுக்க முழுக்க இடுக்கி மாவட்டம் மாங்குளம் அருகே உள்ள குறட்டிக்குடி பழங்குடியின கிரா மத்தில் படமாக்கப்பட்டது. பழங்குடி யினக் குழந்தைகளுக்காக அனை வர்க்கும் கல்வி திட்டத்தின் கீழ் அடிமாலி பிஆர்சி நடத்திய ஐந்து நாள் முகாமில் ஆசிரியராக நான் அழைக்கப்பட்டேன். அங்குள்ள குழந்தைகள் கோவிட் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை. அப்போது, இண்டர்நெட், மொபைல் இணைப்பு இல்லாமல், அங்குள்ள குழந்தை களுக்கு, நாட்டிலுள்ள குழந்தைகளைப் போல், ஆன்லைன் கல்வியும் கிடைக்கவில்லை. அவர்களை விழித்தெழுந்து மீண்டும் கல்விக்கு கொண்டு வருவதற்காக அப்பகுதி மக்கள் மூலம் ஆய்வு முகாம் நடத்தப்பட்டது. ஐந்து நாள் முகாமின் ஒரு பகுதியாக மொபைலில் குறும்படம் தயாரித்து தர ஒப்புக்கொண்டேன். அங்குள்ள குழந்தை களுக்காக தொழில் ரீதியாக ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று சொன்னதால் நண்பன் சுராஜுடன் சேர்ந்து அங்கு சென்றேன். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும் பயன்படுத்தி, இருபத்தைந்து ஆண்டு களாக இடமலக்குடியில் தனி ஆளாக அலைந்து திரிந்த ஆசிரியர் முரளியின் அனுபவக் கதை, எங்கள் விவாதத்தின் விளைவாக ஒரு குழந்தைகள் திரைப்படம் பிறந்தது. ஒரு கதை. ஸ்கிரிப்ட், டயலாக் எல்லாம் அங்கேயே உட்கார்ந்து தயார் செய்து, அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குப் பாட்டு, நடனம், விளையாட்டு என்று சொல்லிக்கொடுக்க வந்த ஆசிரியர்களின் உதவியோடு ஒரு பாட்டு எழுதி, அதை பிஆர்சி ஆசிரியர்கள் இயற்றி, சிங்கிளாகப் பாடினார்கள். அந்த பாடலும் இந்த படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பிஆர்சி ஷமீர் சார் மற்றும் பிற ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர் கள் மற்றும் குறட்டிக்குடியில் வசிப்பவர்களது பங்களிப்பு டன் கொஞ்ச நாட்களில் ஒரு குறும்படம் பிறந்தது. பத்து பன்னிரண்டு நாட்கள் அவர்களுடன் வாழ்ந்தது மறக்க முடியாத அனுபவம் என்றார்.
மனதில் நேரடி பதிவிறக்கம்
இன்று எல்லோரும் புகைப்படக் கலைஞர்கள். செல்பேசி கூட நல்ல சராசரி கேமராவை விட தரமான புகைப் படங்களை எடுக்க உதவுகிறது. எனவே, புகைப்படம் எடுப்பதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று பலர் நினைக் கிறார்கள். ஆனால் புகைப்படம் எடுத்தல் என்பது இன்று முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட கடல்போல் பரந்த ஒரு அறிவுத் துறையாகும். புகைப்படம் எடுத்தல் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். நல்ல காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டுமே நல்ல படங்களை எடுக்க முடியும். முதலில் உங்கள் மனதில் ஒரு படத்தைப் பெற வேண்டும், பின்னர் நீங்கள் அதை கேமராவில் படம்பிடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கிளிக் செய்த படத்தை கம்ப்யூட்டருக்குக் கொண்டு வந்த பிறகு தேவையான பகுதியை வெட்டி எடுக்க முடியும் என்ற எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டும். நீங்கள் பார்க்கும் நல்ல காட்சிகளை உங்கள் கேமராவில் பிடிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் மனதில் நேரடியாக பதிவிறக்கம் செய்யுங்கள். அப்போதுதான் ஒரு சிறந்த சட்டகத்தை (பிரேம்) நாம் சிந்திக்கவும் அதை நகலெடுக்கவும் முடியும்.
எட்டாவது நுண்கலை
நுண்கலைகள், இசை, சிற்பம், இலக்கியம், நாடகம், கட்டடக்கலை மற்றும் சினிமா ஆகிய ஏழும் சகோதரிகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இந்த டிஜிட்டல் யுகத்தில், கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு சிறந்த கலை உள்ளது. புகைப்படம் எடுத்தல் எட்டாவது நுண்கலை என்று பிஜு கூறுகிறார். இப்போது உங்கள் கையில் உள்ள கேமராதான் சிறந்த கேமரா என நம்புங்கள். கேமரா, சிறந்த புகைப்படங் களை எடுக்கவில்லை. ஒவ்வொரு பிரேமும் கேமராவுக்குப் பின்னால் உள்ள கண்களால் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் புகைப்படத் திறனை வளர்த்துக் கொள்ளுங் கள். சிறந்த புகைப்படக் கலைஞராக மாற “சரியான வழி” அல்லது “தவறான வழி” இல்லை. புத்தகங்கள் மற்றும் சோதனைகள் மூலம் புகைப்படம் எடுப்பதை நீங்களே கற்றுக் கொள்ளலாம் அல்லது மற்ற நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பலாம். புகைப்படம் எடுத்தல் பற்றி கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் போது, உங்கள் வளர்ச்சி நின்றுவிடும். ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்துடன் நீங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது உங்கள் வளர்ச்சி தொடங்குகிறது. புகைப்படக் கலை என்பது நிகழ்வுகளை அல்ல உணர்வுகளை படம்பிடிப்பதாகும். இயற்கையை ரசிக்க அழகான வானிலை தேவை யில்லை. அழகான இதயம் மட்டுமே வேண்டும்...” - பிஜு காரக்கோணம்.