articles

லட்சுமியாக மாறி கம்யூனிசம் பேசிய அலமேலு! - கே.வனஜகுமாரி

இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்களின் வரலாறு மறைக் கப்பட்டு இருக்கிறது. அப்படி மறைக்கப்பட்டவர்களில் அன்னை லட்சுமியும் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும் அகில இந்திய பொறுப்புக்களை ஏற்று, தலைமை தாங்கிய பாப்பா உமாநாத் அவர்களின் தாயார்தான் அலமேலு என்கிற லட்சுமி. இந்தியாவில் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த முதல் பெண்மணி. அவரது உடலை காவல்துறையினர் என்ன செய் தார்கள்?  அவர் புதைக்கப்பட்டாரா எரிக்கப் ்பட்டாரா என்று கூட தெரியாது.  அப்படி என்னதான் தவறு செய்தார்? அவர் நாட்டை பாதுகாக்க போராடிய தலைவர்க ளை பாதுகாத்தார். அதற்காக 1950ஆம் ஆண்டு இவரையும், இவரது மகள் பாப்பாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் இருப்பிடத்தை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லொண்ணா சித்ரவ தைகளை செய்தனர். இறுதிவரை தாயும் மகளும் தலைவர்களை காட்டிக் கொடுக்க வில்லை. சிறைக்குள்ளே இருவரும் உண்ணாவிரதம் இருந்தனர். சிறையில் கொடுமைப்படுத்தி உணவு மற்றும் குளுக் கோஸ் தண்ணீர் கொடுக்க காவலர்கள் முயற்சி செய்தனர். அந்த முயற்சியில் காவல்துறையினர் தோல்வியடைந்தனர். 22 நாள் உண்ணாவிரதம் இருந்து 23ஆவது நாள் மார்ச் 4ஆம் தேதி அன்னை லட்சுமி வீரமரணம் அடைந்தார். இறந்த பின்னர் தன் உடல் மீது செங்கொடியை போர்த்த வேண்டும் என்ற விருப்பத்தை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தினார். அராஜகமான காவல்துறை அவரது கோரிக்கையை நிறைவேற்றுமா என்ன? வெறிபிடித்த காவல்துறையினர், அன்னை லட்சுமியின் உடலை பக்கத்து அறையில் உண்ணாவிரதம் இருந்துகொண்டிருந்த பாப்பாவிடம் காட்டவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக எழுதி கொடுத்தால், உன் தாயாரின் முகத்தை பார்க்கலாம் என்றனர். ஆனால் பாப்பா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். அதனால் தன் தாயின் முகத்தை இறுதிவரை அவரால் பார்க்க முடிய வில்லை.

அலமேலு என்கிற லட்சுமி வசதியான குடும்பப் பின்னணியோ அரசியல் பின்ன ணியோ கொண்டவர் அல்ல. சாதாரண நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்.  அவரது வாழ்க்கையே அவருக்கு சரியான பாதையை காட்டியது. அதையே அவர் தேர்வு செய்தார். இவரது உடன் பிறந்த வர்கள், உறவினர்கள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களே. அலமேலு, காரைக்கால் நகரத்தில் கோயில்பத்து என்ற இடத்தில் சின்னஞ்சிறு வீட்டில் குடியிருந்தார். இவரது கணவர் பக்கிரிசாமி 27 வயதில் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். அதன் பிறகு உறவினர்கள் ஒன்று கூடி, குடியிருக்கும் வீடு மூத்த மனைவிக்கு தான் சொந்தம் என்று கூறி வெளியேற்று கின்றனர். அந்த வீட்டில் இருந்து வெளியேறிப் போக வழியில்லாமல், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பிள்ளையோடு இருக்க இடம் இல்லாமல் அதே வீட்டின் திண்ணையில் வாழ்க்கை நடத்தினார். யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்தார். அதையும் பொறுத்துக் கொள்ள முடியாத உறவினர்கள், அடுப்பில் வெந்து கொண்டி ருந்த சோற்றுப் பானையை உடைத்துப் போட்டு, திண்ணையை விட்டு வெளியேற்றி னர். மூன்று குழந்தைகளோடு நிர்க்கதி யாக நின்றார் லட்சுமி.

திருச்சி, பொன்மலையில் ரயில்வேயில் வேலை பார்க்கும் தனது அண்ணன் வீட்டிற்கு செல்வது என்ற முடிவோடு கிளம்பினார். ரயில் நிலையம் வந்தவுடன் இந்த ரயில் பொன்மலை போகுமா என்று எதிரில் இருந்தவர்களிடம் கேட்டார். போகும் என்று சொன்னவுடன் மூன்று குழந்தைகளுடன் ரயிலில் ஏறிவிட்டார். ஏதோ ஒரு இடத்தில் ரயில் நின்ற போது, டிக்கெட் பரிசோதகர் ஏறி பயணிகளின் டிக்கெட்டுகளை கேட்டார். அப்போதுதான் டிக்கெட் வாங்கவில்லை என்று நினைவு அவருக்கு வந்தது. வாங்க நினைத்தாலும் கையில் காசு இல்லை. இறக்கி விடுவார்க ளோ என்ற பயத்தோடு, துக்கத்தை கட்டுப் படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுது நிலைமையை விளக்கினார். தனது காதில் இருந்த சிறு கம்மலை கழற்றி தரு வதாக கூறினார். மனிதநேயமிக்க அந்த அதிகாரி உண்மைநிலையை உணர்ந்து நகர்ந்து சென்று விட்டார்.

திருச்சி பொன்மலைக்கு வந்து இறங்கிய லட்சுமி, தனது அண்ணன் திருச்சியில் இருப்பது தெரியும்; ஆனால், எங்கு இருக்கி றார் என்பது தெரியாமல் அல்லாடினார். ரயில்வே தொழிலாளர்கள் வாயிலாக முக வரியை கண்டுபிடித்து, தன் அண்ணனை பார்த்து விட்டார். அவரது அண்ணனுக்கு அப்போது திருமணமாகவில்லை. எனவே குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, லட்சுமி அம்மா சும்மா இருக்கவில்லை. மெஸ் ஒன்றைத் தொடங்கினார் அந்த இடத்தில் ரயில்வே தொழிற்சங்க தலைவர்கள் வந்து உணவு அருந்துவார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு ஏற் பட்டு, தன்னையும் கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சி பணிகளுக்காக தலை மறைவாக இருந்த தலைவர்களுக்கு தகவல்களை கொண்டு செல்வது; மறை வாக பாதுகாப்பது போன்ற பணிகளை செய்தார். தன்னை காவல்துறை அடையா ளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்ப தற்காக அலமேலு என்கிற தன் பெயரை லட்சுமி என்று மாற்றிக் கொண்டார். தனது மகள் தனலட்சுமி (எ) பாப்பாவை பன்முகத்தலைவராக வளர்த்தெடுத்தார். அலமேலு என்கிற அன்னை லெட்சுமியின் உறுதிமிக்க போராட்ட வரலாற்றை நினைவு கூர்வோம். வலுவான பெண்கள் இயக்கத்தை கட்டமைப்போம்.

கே.வனஜகுமாரி 
தென்சென்னை மாவட்டச் செயற்குழு 
உறுப்பினர், சிபிஐ(எம்)