articles

img

இந்தியாவில் மதச்சார்பின்மையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் விசாரணை!

1991 ஆம் ஆண்டின் வழி பாட்டுத் தலங்கள் சிறப்பு விதிகள் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் மனுக்களின் தொகுப்பை இந்திய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு டிசம்பர் 12 முதல் விசார ணைக்கு எடுத்துக் கொள்கிறது. 

நாடு சுதந்திரம் அடைந்த தேதியில் வழிபாட்டுத் தலங்கள் இருந்த நிலையை பாதுகாப்பது மற்றும் அந்தஸ்தை மாற்று வதற்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் அனு மதிப்பதை தடை செய்வதை மறுஆய்வு செய்யக் கோரும் இந்த மனுக்கள் மதச் சார்பின்மை உத்தரவாதப்படுத்துவதற்கு கடும் சவாலாக மாறி உள்ளன என்று சொன்னால் மிகை ஆகாது.  வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் நம் நாட்டின் மதச் சார்பின்மையின் எதிர்காலம் ஆகிய இரண்டையும் இவை தீர்மானிக்கும்.

சில விலக்குகள்

1991 சட்டத்திற்கு சில விதிவிலக்குகள் தரப்பட்டன. ராமர் கோயிலுக்கு ஆதரவாக முடிவடைந்த பாபர் மசூதிராமஜென்ம பூமி  சர்ச்சைக்கு இது பொருந்தாது. 1958 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் மிச்சங்கள் ஆகிய வற்றின் கீழ்வரும் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களுக்கு இது பொருந்தாது. 1991  சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் மனுதாரர்களால் தீர்க்கப்பட்ட எந்த ஒரு தகராறுக்கும், அவை ஒப்புக்கொள்ள இடத்தை மாற்றுவது தொடர்பான இறுதி யாக தீர்க்கப்பட்ட எந்த ஒரு வழக்குக்கும் இது பொருந்தாது.

குறிவைக்கப்படும்  வழிபாட்டுத் தலங்கள்!

வாரணாசியில் உள்ள ஞானவாபி , மது ராவில் உள்ள ஷாஹி ஈத்கா மற்றும் சம்ப லில் உள்ள ஷாஹி ஜமா  போன்ற மசூதி களை குறி வைத்து இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள்  வழக்குகள் தொடுக்க முயலும் பின்னணியில் இதற்கு எதிரான சவால்கள் எழுந்துள்ளன. 1991 சட்டத்தை சிதைக்கும் அல்லது நீர்த்துப்போக முயற்சி  செய்யும் எந்த உத்தரவும் மதச்சார்பின்மை  மீது மிக மோசமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

முரண்பாடான எதிர்வாதம் 

கடந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர் களால் கோவில்கள் இடிப்பு நடைபெற்றது என்றும் அந்த இடங்களில் பல மசூதிகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அந்த மனுக்கள் வாதிடுகின்றன. மேலும் இந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினர் தங்கள் வழி பாட்டுத் தலங்களை சட்ட நடவடிக்கை களின் மூலம் மீட்டெடுக்கும் உரிமையை யும் இது மீறுகிறது என்றும் வாதிடுகின்ற னர். இது மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்திடவும் மற்றும் வழிபாட்டுத் தலங் களை நிர்வகிப்பதற்குமான உரிமையை தடை செய்கின்றன என்றும் கூறுகின்ற னர். இந்த தலங்களை மீட்டெடுக்கும் அவ ரின் முயற்சிகள் வெற்றியடைந்தால் மதச் சார்பின்மை சிதைக்கப்படும் என்ற நிலை யில் கூட இந்த சட்டத்தை மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்ற அவர்கள் பிரச்சாரம்  வினோதமாக உள்ளது.

சட்டப்பூர்வ பாதுகாப்பு 

அதிர்ஷ்டவசமாக இந்த சட்டத்திற்கு ஆதரவாக சில தெளிவான நிறுவப்பட்ட கொள்கைகள் உள்ளன:

அயோத்தி தீர்ப்பில் ஐந்து பேர் அடங்கிய அமர்வு மதச்சார்பின்மையை நிலைநிறுத்தும்  நம் மிக உயர்ந்த கடமை யில் நாம் உறுதியாக நிற்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. அதே நேரத்தில் மதச்சார்பின்மையைப் பேணு வதில் எந்த நேரத்திலும் பிற்போக்கு அம்சங்கள் நுழைய அனுமதித்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த சட்டப்பூர்வ தலையீடுகள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நம்பகத்தன்மை இழந்த நீதிமன்றங்கள்

ஆனால் தற்போது உள்ள நிலையில், அரசியலமைப்பின் மதச்சார்பற்ற பார்வை மற்றும் அதற்கான நாடாளுமன்றத்தின் உறுதிப்பாடு இரண்டிலிருந்து விலகி நின்று வரலாற்றுத் தவறுகளை தீர்ப்பதற்கு நீதித்துறையை  தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளில் இருந்து நீதிமன்றம் விலகி நிற்கும் என்று தோன்றவில்லை.

நன்றி : தி இந்து தலையங்கம்  10-12-24
தமிழில் : கடலூர் சுகுமாரன்