முதல் அரையாண்டில் நேரடி அந்நிய முதலீடு 77% சரிவு. முக்கிய துறைகள் பாதிப்பு. பொருளாதாரம் வலுவாக உள்ளது எனும் மோடி அரசின் பொய் அம்பலம். வேலைவாய்ப்பு களை பெருக்கும் பொது முதலீடுகளை செய்யுங்கள். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து பொருளாதாரத்தை மீட்டெடுங்கள்.
கோவிட்டுக்கு பின்னர் மாத ஊதியம் வாங்கும் 54% பேருக்கு எவ்வித சமூக பாதுகாப்பு நன்மையும் இல்லை. இந்திய உழைப்பாளிகளை கை விடுகிறது மோடி அரசு. மோடி அரசின் கொள்கைகள் உழைப்பாளிகள் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அதே வேளையில் கூட்டு கொள்ளை முதலாளிகளின் லாபத்தை கொழுக்க வைக்கிறது என்பதையே இந்த தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக மோடி அரசு பொய் பெருமை கொள்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் “பொருளா தார அறிக்கை” விலைகள் உயரும் என அபாய மணி அடிக்கிறது. பணவீக்கம் குறைந்து ஆனால் விலை உயர்கிறது எனில் மக்களின் வாங்கும் சக்தி குறைவதே காரணம்! “மோடினாமிக்ஸ்” பொருளாதார கொள்கைகள் வேலையின்மை/விலைவாசி உயர்வுக்கும் பொருளாதாரம் சிதைவுக்கும் வழிவகுக்கிறது