articles

img

நிர்மலா சீத்தாராமன் தகவல் உண்மையா?-ஆறுகுட்டி

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 8.2% என்கிறது ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட். ஐநா சபை வழிகாட்டுதலின் படி  உருவெடுத்த இந்த ஜிடிபி வெளிக்கொண ரும் உண்மைகளை விட, மறைப்பவையே அதிகம்

அந்தந்த நாடுகள் தங்களின் நசிந்து வரும் பொருளாதார நிலைமைகளை மறைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது எனும் பொய்த் தோற்றத்தை உருவாக்க வும், பணக்கார நாடுகள் ஏழை நாடு களின் செல்வங்களைக் கொள்ளைய டிப்பதை மறைக்கவும், இந்த ஜிடிபி புள்ளி விவரங்கள் எப்படியெல்லாம் திருத்தப்படுகின்றன என்று ‘21ம் நூற் றாண்டு ஏகாதிபத்தியம்’ எனும் நூலில் ஜான் ஸ்மித் அழகாக விளக்கியிருப்பார். 

ஒரு நாட்டின் தோராயமான ஜிடிபி எளிதில் கணக்கிடப்படக்கூடியது. எக்ஸல் சீட்டில் புள்ளி விவரங்களை நிரப்பினால் போதும். தோராய ஜிடிபியை உண்மை மதிப்புடைய ஜிடிபியாக மாற்றுவதில் தான் சூட்சுமங்கள் மறைந்திருக்கின்றன. தொட ர்ந்து விலைவாசி ஏறுமுகமாக இருக்கும் நாடுகளில், உண்மையான ஜிடிபியாக மாற்றுவதற்கு பணவீக்க காரணி பயன் படுத்தப்படும். கணித மோசடிகளின் அரங்கேற்றம் துவங்கும் புள்ளி இது. 

விலை உயர்வு ஒரு படித்தானதாக இருக்காது. ஒவ்வொரு துறைக்கும் மாறுபடும். இந்தியாவில் உணவுப் பொருள்  விலை உயர்வு சென்ற ஆண்டு 9.4%. நுகர்வுப் பொருள் விலை உயர்வு 5.1%. மொத்த வியாபார விலை உயர்வு 3.4% ஆக இருந்தது.

இதில் எந்த பணவீக்க விபரத்தைப் பயன்படுத்தி ஜிடிபி 8.2% என்று கணக் கிடப்பட்டது? 9.4% அல்லது 3.4 %?  இரண்டுமே இல்லை. மூன்றின் சராசரியை யாவது பயன்படுத்தினார்களா? அதுவும் இல்லை. பயன்படுத்தப்பட்ட பணவீக்க விகிதம் 1.7%. இது எங்கிருந்து எடுக்கப் பட்டது என்ற விளக்கம் பட்ஜெட்டில் எங்கும் இல்லை. 

ஜிடிபி வளர்ச்சி 8.2% காட்டுவது என முடிவெடுத்தபின், அதற்குத் தேவையான ஃபிகர்தான் இந்த 1.7%. இதைத்தான் மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

நிதியமைச்சர் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம். என்ன பதில் சொல்லப் போகிறாரென்று பார்க்கலாம். பொய்யை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதுவும் இன்னொரு பொய்யாகத் தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.